பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஷங்கர் மகாதேவன் | ஏ.ஆர்.ரகுமான் | ரிதம் |
Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil
—BGM—
ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
ஆண்கள்(குழு): தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
ஆண்: புரியாதா… பேரன்பே…
புரியாதா… பேரன்பே…
ஆண்: ஓஹ்…
ஆண்கள்(குழு): தனியே… தனியே… தனியே…
—BGM—
ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…
ஆண்கள்(குழு): ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஓஹோ பப்பாயப்… ஆஹா பப்பாய…
ஆண்: அக்டோபர் மாதத்தில்…
அந்திமழை வானத்தில்…
வானவில்லை ரசித்திருந்தேன்…
அந்த நேரத்தில் யாருமில்லை…
தூரத்தில் இவள் மட்டும்…
வானவில்லை ரசிக்க வந்தாள்…
ஆண்: அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம்…
ஆண்கள்(குழு): கொண்டோம்…
உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம்…
ஆண்: ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ரசனை என்னும் ஒரு புள்ளியில்…
இரு இதயம் இணையக் கண்டோம்…
ஆண்: நானும் அவளும் இணைகையில்…
நிலா அன்று பால் மழை பொழிந்தது…
தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
புரியாதா…
—BGM—
ஆண்: என்னுடைய நிழலையும்…
இன்னொருத்தி தொடுவது…
பிழையென்று கருதிவிட்டாள்…
ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி…
ஹலோ சொல்லி கைகொடுக்க…
தங்கமுகம் கருகிவிட்டாள்…
ஆண்: அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
அந்த கள்ளி பிரிந்து சென்றாள்…
நான் ஜீவன் உருகி நின்றேன்…
ஆண்: சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
சின்னதொரு காரணத்தால்…
சிறகடித்து மறைந்து விட்டாள்…
ஆண்: மீண்டும் வருவாள் நம்பினேன்…
அதோ அவள் வரும் வழி தெரியுது…
தனியே…..
ஆண்: தனியே தன்னந்தனியே…
நான் காத்துக் காத்து நின்றேன்…
நிலமே பொறு நிலமே…
உன் பொறுமை வென்று விடுவேன்…
ஆண்: புரியாதா… பேரன்பே… புரியாதா……
Notes : Thaniyee Thannanthaniye Song Lyrics in Tamil. This Song from Rhythm (2000). Song Lyrics penned by Vairamuthu. தனியே தன்னந்தனியே பாடல் வரிகள்.