Category Archives: பூவெல்லாம் கேட்டுப்பார்

செவ்வானம் வெட்கம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஸ்ரீனிவாஸ்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil


ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM

ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM

ஆண் : வானகம் தூரம் இல்லை…
வங்க கடல் ஆழம் இல்லை…
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே…

ஆண் : சூரியனை வட்டம் இட்டு…
தன்னைதானே சுற்றும் பூமி…
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே…

ஆண் : புது சந்தோசம் எங்கே…
புது சங்கீதம் எங்கே…
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா…

BGM

ஆண் : செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே…
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே…
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டி கிடக்கிறது…
நம்மை அழைகிறது… ஓஹோ ஹோஹோ…

ஆண் : பூவெல்லாம் மாலைகள் ஆகும்…
ஓஹோ ஹோஹோ… ஓஹோ ஹோஹோ…
ஜெய்த்தால் நம் தோள்களில் ஆடும்…
உம்ம் உம்ம் உம்ம் உம்ம்…

BGM


Notes : Sevvaanam Vetkam Kondathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. செவ்வானம் வெட்கம் பாடல் வரிகள்.


பூத்தது பூத்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபவதாரணியுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poothathu Song Lyrics in Tamil


BGM

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது எதற்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் எதற்காக…

BGM

பெண் : என் சுவாச காற்றில்…
உன் உயிரின் வாசம் கலந்ததே அன்பே எப்படி…
மணிக்கொரு உடையினை அணிந்தேன் அதற்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் அதற்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : பூத்தது பூத்தது மனது…
இது பூத்தது உனக்காக…
தூக்கத்தை துரத்துது கனவு…
இந்த கனவுகள் உனக்காக…

பெண் : மணிக்கொரு உடையினை அணிந்தேன் உனக்காக…
மணமகள் கோலத்தில் தெரிந்தேன் உனக்காக…

BGM


Notes : Poothathu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூத்தது பூத்தது பாடல் வரிகள்.


சி.பி. ஐ எங்கே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிசுக்விந்தர் சிங்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

CBI Enge Song Lyrics in Tamil


ஆண் : ஒரு ரோஜா என்னை பார்த்திதது…
காதல் காதல் என்று…
ஒரு கங்கை என்னை குடித்தது…
தாகம் தாகம் என்று…

BGM

ஆண் : சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…

ஆண் : இதனாலே நான் அனைவருக்கும் சொல்லும் செய்தி ஒன்று…
இளம் நெஞ்சம் இந்த பாதையில் திருடு போவதுண்டு…
இதை நானே தேடி பார்ப்பது புதுமையான புதுமை…
இவளாலே திருடு போவது இனிமையான இனிமை…

ஆண் : சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…

BGM

ஆண் : பட்ட பகல் இந்த வேலை…
பலர் வருகிற சாலை…
கண்களில் வாளை எடுத்து வந்தாலே…

ஆண் : பட படக்கும் கன்னம்…
துடி துடிக்கும் நெஞ்சம்…
அவள் என்னை கண்டவுடன் காணவில்லையே…

ஆண் : அந்த தேவதை… ஓஹோ…
சம்பல் ராணியோ… ஓஹோ…
இந்த ஊரிலும் கொள்ளைகாரியோ…

BGM

குழு : ஒரு ரோஜா என்னை பார்த்திதது…
காதல் காதல் என்று…
ஒரு கங்கை என்னை குடித்தது…
தாகம் தாகம் என்று…

ஆண் : சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…

BGM

ஆண் : நினைத்திட மனம் இல்லை…
உறங்கிட விழி இல்லை…
அவள் என்னை வழி பறி செய்தாலே…

ஆண் : தடுத்திட வழி இல்லை…
மறுத்திட மனம் இல்லை…
மன்மத வித்தைகளை செய்தாலே…

ஆண் : எப்படி வாழுவேன்… ஓஹோ…
இதயம் இல்லையே… ஓஹோ…
வழக்கு போடவும் சாட்சி இல்லையே…

ஆண் : காதல் கண்ணுக்குள் என்னை பூட்டினாய்…
சாவி கேட்டதும் வெட்கம் காட்டினாள்…

குழு : ஒரு ரோஜா என்னை பார்த்திதது…
காதல் காதல் என்று…
ஒரு கங்கை என்னை குடித்தது…
தாகம் தாகம் என்று…

ஆண் : சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சட்டென்று என்னை ஒருத்தி கடந்து சென்றாலே…
சந்தேகம் உள்ளது இங்கு அவள் பேரிலே…

ஆண் : இதனாலே நான் அனைவருக்கும் சொல்லும் செய்தி ஒன்று…
இளம் நெஞ்சம் இந்த பாதையில் திருடு போவதுண்டு…
இதை நானே தேடி பார்ப்பது புதுமையான புதுமை…
இவளாலே திருடு போவது இனிமையான இனிமை…

ஆண் : சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…
சி.பி. ஐ எங்கே தேட சொல்லு கொஞ்சம்…
காணவில்லை நெஞ்சம் காணவில்லை நெஞ்சம்…


Notes : CBI Enge Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சி.பி. ஐ எங்கே பாடல் வரிகள்.


பூவே பூவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிநித்யஸ்ரீ மகாதேவன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Poove Poove Song Lyrics in Tamil


BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில்…
பூத்து நீ குலுங்கினாய்…
வண்ண வண்ண இதழ்களை எல்லாம்…
எங்கே நீ வாங்கினாய்…

BGM

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வண்ணங்களோடு மலருகிறாய்…
வாசனையோடு வாழுகிறாய்…
பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்…

BGM

பெண் : பூவே சிறு பூவே…
உன்னை போல் வாழ்ந்திடும்…
வாழ்க்கையே வேண்டுமே…

BGM

பெண் : நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி…
நீதானே என்றும் எனக்கு நல்ல தோழி…
பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
தன தீம் தன தீம் தன தீம் தன நா…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

BGM

பெண் : வசந்தம் வந்த செய்தியினை…
வண்டுக்கு எப்படி சொல்வாயோ…
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா…

BGM

பெண் : தேனை நீ தந்து…
எதை நீ பெறுவாய் பூவே பூவே…

BGM

பெண் : உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு…
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவே…

பெண் : பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட…
என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ…

பெண் : பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவ பூவ பூவ பூவ பூவே…
பூவே பூவே பூவே பூவே…

BGM


Notes : Poove Poove Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. பூவே பூவே பாடல் வரிகள்.


ஓ சென்யோரீட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. உன்னிகிருஷ்ணன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Oh Senyoreeta Song Lyrics in Tamil


BGM

ஆண் : சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…
சென்யோரீட்டா சென்யோரீட்டா…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்கதானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

—BGM—

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா… யே யே…

BGM

ஆண் : அடி உன் மூச்சினை மெல்ல நான் கேட்கிறேன்…
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே…
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது…
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே…

ஆண் : சிற்பம் கவிதை ஓவியம்…
மூன்றும் சேரும் ஓரிடம்…
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்…

ஆண் : பெண்ணெல்லாம் பெண் போலே இருக்க…
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க…
பூமிக்கு வந்தாயே தேவதை போலவே…

BGM

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி… ஓஹோ…

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…
ஹைய ஹைய யே யே யே…

BGM

ஆண் : ஒரு மழை காலத்தில்…
முன்பு குடை தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : ஒரு வெயில் காலத்தில்…
முன்பு நிழல் தேடினேன்…
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன்…
ஏன் சொல்லடி…

ஆண் : பெண்ணே எந்தன் வானிலை…
உன்னால் மாறி போனதோ…
தரை கீழாக ஏன் ஆனதோ…

ஆண் : தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து…
அறியாத இன்பங்கள் கலந்து…
புரியாத மாயங்கள் செய்தாய் ஏனடி…

BGM

ஆண் : ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…
ஓ சென்யோரீட்டா…
பேசும் மெழுகு பொம்மையே…

ஆண் : மஞ்சள் நிற மலர் உன்னை…
நினைக்க தானடி…
கொஞ்சி கொஞ்சி பொழியுது…
குளிர்ந்த மழை…

ஆண் : மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி…
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை…

ஆண் : அடடா பிரம்மன் புத்திசாலி…
அவனை விட நான் அதிர்ஷ்டசாலி…

ஆண் : சென்யோரீட்டா…


Notes : Oh Senyoreeta Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. ஓ சென்யோரீட்டா பாடல் வரிகள்.


irava-pagala-song-lyrics-in-tamil

இரவா பகலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Irava Pagala Song Lyrics in Tamil


BGM

ஆண் : இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…

ஆண் : ஆனால் உந்தன் மௌனம் மட்டும்…
ஏதோ செய்யுதடி…
என்னை ஏதோ செய்யுதடி…
காதல் இதுதானா…

ஆண் : சிந்தும் மணி போலே…
சிதறும் என் நெஞ்சம்…
கொஞ்சம் நீ வந்து…
கோர்த்தால் இன்பம்…

ஆண் : நிலவின் முதுகும் பெண்ணின் மனதும்…
என்றும் ரகசியம்தானா…
கனவிலேனும் சொல்லடி பெண்ணே…
காதல் நிஜம்தானா…

ஆண் : இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…

BGM

ஆண் : என்னை தொடும் தென்றல்…
உன்னை தொடவில்லையா…
என்னை சுடும் காதல்…
உன்னை சுட வில்லையா…

ஆண் : என்னில் விழும் மழை…
உன்னில் விழவில்லையா…
என்னில் எழும் மின்னல்…
உன்னில் எழவில்லையா…

ஆண் : முகத்திற்கு கண்கள் ரெண்டு…
முத்தத்திற்கு இதழ்கள் ரெண்டு…
காதலுக்கு நெஞ்சம் ரெண்டு…
இப்போது ஒன்றிங்கு இல்லையே…

ஆண் : தனிமையிலே தனிமையிலே…
துடிப்பது எதுவரை சொல் வெளியே…

BGM

ஆண் : தனிமையிலே தனிமையிலே…
துடிப்பது எதுவரை சொல் வெளியே…

ஆண் : இரவா பகலா குளிரா வெயிலா…
என்னை ஒன்றும் செய்யாதடி…
கடலா புயலா இடியா மழையா…
என்னை ஒன்றும் செய்யாதடி…

BGM

பெண் : வானவில்லில் வானவில்லில்…
வண்ணம் எதுக்கு…
வந்து தொடும் வந்து தொடும்…
தென்றல் எதுக்கு…

பெண் : அந்தி வானில் அந்தி வானில்…
வெட்கம் எதுக்கு…
புரிந்தது புரிந்தது இன்று எனக்கு…

பெண் : மழையினில் மேகம் தூங்க…
மலரினில் வண்டு தூங்க…
உன் தோளிலே சாய வந்தேன்…
சொல்லாத காதலை சொல்லிட…

பெண் : சொல்லி ரசிப்பேன்…
சொல்லி ரசிப்பேன்…
சொல்லி சொல்லி நெஞ்சுக்குள்ளே…
என்றும் வசிப்பேன்…

BGM

ஆண் : அள்ளி அணைப்பேன்…
அள்ளி அணைப்பேன்…
கொஞ்சி கொஞ்சி நெஞ்சுக்குள்ளே…
அள்ளி அணைப்பேன்…

ஆண் & பெண் : இரவா பகலா குளிரா வெயிலா…
நம்மை ஒன்றும் செய்யாதினி…
கடலா புயலா இடியா மழையா…
நம்மை ஒன்றும் செய்யாதினி…

ஆண் & பெண் : இரவா பகலா குளிரா வெயிலா…
நம்மை ஒன்றும் செய்யாதினி…
கடலா புயலா இடியா மழையா…
நம்மை ஒன்றும் செய்யாதினி…

BGM


Notes : Irava Pagala Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. இரவா பகலா பாடல் வரிகள்.


சுடிதார் அணிந்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சாதனா சர்கம்யுவன் ஷங்கர் ராஜாபூவெல்லாம் கேட்டுப்பார்

Chudithar Aninthu Song Lyrics in Tamil


BGM

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…

பெண் : விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது…
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது…
முழு காதல் என்று வந்தது…
தெரியாதே… அது தெரியாதே… அது தெரியாதே…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என்மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…

BGM

ஆண் : உன் பேரை சொன்னாலே…
நான் திரும்பி பார்க்கிறேன்…

பெண் : உன் பேரை மட்டும்தான்…
நான் விரும்பி கேட்கிறேன்…

ஆண் : இருவர் ஒருவராய் இணைந்துவிட்டோம்…
இரண்டு பெயர் ஏனடி…

பெண் : உனக்குள் நான் என்னை கரைத்துவிட்டேன்…
உன்னையே கேளு நீ…

ஆண் : அடி உன்னை நான் மறந்த வேளையில்…
உன் காதல் மாறுமா…

பெண் : விடிகாலை தாமரை பூவிது…
விண்மீனை பார்க்குமா…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என் மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…

BGM

பெண் : பல கோடி பெண்களிலே…
எதற்கென்னை தேடினாய்…

ஆண் : நான் தேடும் பெண்ணாக…
நீதானே தோன்றினாய்…

பெண் : நரை கூடும் நாட்களிலே…
என்னை கொஞ்ச தோன்றுமா…

ஆண் : அடி போடி காதலிலே…
நரை கூட தோன்றுமா…

பெண் : உன் கண்ணில் உண்டான காதலிது…
மூடிவிடும் என்னமோ…

ஆண் : என் நெஞ்சில் உண்டான காதல் இது…
நெஞ்சைவிட்டு போகுமோ…

ஆண் : உன் மேல் நான் கொண்ட காதல்…
என் மேல் நீ கொண்ட காதல்…
எதை நீ உயர்வாக சொல்வாயோ… ஓ ஓ ஓ…

பெண் : போடா பொல்லாத பையா…
நம் மேல் நாம் கொண்ட காதல்…
அதை நீ ரெண்டாக பார்ப்பாயா…

ஆண் : சுடிதார் அணிந்து வந்த சொர்க்கமே…
என்மீது காதல் வந்தது…
எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா…
நீ சொல்வாயா… நீ சொல்வாயா…

பெண் : விழிகள் பார்த்து கொஞ்சம் வந்தது…
விரல் சேர்த்து கொஞ்சம் வந்தது…
முழு காதல் என்று வந்தது…
தெரியாதே… அது தெரியாதே… அது தெரியாதே…


Notes : Chudithar Aninthu Song Lyrics in Tamil. This Song from Poovellam Kettuppar (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. சுடிதார் அணிந்து பாடல் வரிகள்.