Category Archives: கனவே கலையாதே

கண்ணில் உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே. எஸ். சித்ராதேவாகனவே கலையாதே

Kannil Unnai Song Lyrics in Tamil


குழு : கண்ண பிராணனின் கண்ணிலிருக்க…
கனவே கலையாதே…
நந்தகுமாரன் நெஞ்சிலிருக்க…
கனவே கலையாதே…

குழு : கண்ணன் வரும் வரை காத்திருப்பாள்…
இந்த கண்மணி ராதை…
கண்ணன் வருவான் காதினில் சொல்வான்…
காதலின் கீதை…

BGM

பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கங்கைக்கரை காற்றை கேளு…
கண்ணபெருமானே…
காதல் செய்த காலம் எல்லாம்…
காதில் கூறும்தானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டுகொண்டேன்…
கண்ணபெருமானே…

BGM

பெண் : சொல்லடி நீ ப்ரிய சினேகிதி நீ…
இளமனம் எனும் மலர்வனம் துளிர் விட…
தினம் தினம் அவன் இங்கு வருவானா…

பெண் : இனியும் ஒரு அறிமுகமா…
இருவருமே புது முகமா…
அவன் இங்கு வருவானா தோழி…
அடைக்கலம் தருவானா…

பெண் : ஈச்சம் பூவை ஈரக்காற்று…
கூச்சம் தீர கூடிடும் இரவினில்…
அவன் இங்கு வருவானா…

பெண் : கண்ணா மழை வண்ணா…
கண்ணா மழை வண்ணா…
என செம்மாங்குயில் போல் கூவுகின்றேன்…

பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…

BGM

பெண் : தொட்டகுறை முன்பு விட்டகுறை…
இன்று தொடங்கிட தொடங்கிட…
தொடர்ந்திட தொடர்ந்திட…
புது சுகம் அரும்பாதோ…

பெண் : புயல் அடித்தா நிலவனையும்…
மழை அடித்தா மலை கரையும்…
உனக்கிது தெரியாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா கண்ணா…
உறவுகள் திரும்பாதா…

பெண் : மண்ணில் காதல் மாய்ந்ததென்று பார்த்ததில்லை…
பூமியில் அதற்கொரு கல்லறை கிடையாது…

பெண் : உன்னை இங்கு என்னை…
உன்னை இங்கு என்னை…
என்றும் ஒன்றாய் சேர்த்த காதல் வாழ்க…

பெண் : கண்ணில் உன்னை…
கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…

பெண் : பிறவி உனக்காக எடுத்த கிளி…
மனதை உனக்காக கொடுத்த கிளி…
இனியும் தனியாக தவித்தபடி…
இருக்க விடலாமோ தலைவன் மடி…

பெண் : கண்ணில் உன்னை கண்டு கொண்டேன்…
கண்ணபெருமானே…
கண்களுக்கு நன்றி சொன்னேன்…
கன்னி இளமானே…


Notes : Kannil Unnai Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணில் உன்னை பாடல் வரிகள்.


poosu-manjal-female-song-lyrics-in-tamil

பூசு மஞ்சள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஅனுராதா பௌட்வால்தேவாகனவே கலையாதே

Poosu Manjal Female Song Lyrics in Tamil


BGM

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்…
இன்று என் காதல் ஈடுரூதே…
ஏன் இந்த மாற்றங்களோ…
இன்று என் கண்ணில் தேனூருதே…

பெண் : பொங்குதே சந்தோஷம் பொங்குதே… ஓ ஹோ ஓ…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே…

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

BGM

பெண் : கடல் நீரைக் கடன் வாங்கி…
என் கண் கொண்டு அழுதாலும்…
நான் சொல்லும் நன்றிக்கு போதாதம்மா…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : இடம் மாறி வந்தாலும்…
தடம் மாறி போகாமல்…
என் காதல் கைக்கூட கண்டேனம்மா…
சிந்துதே கண்ணீரும் சிந்துதே…

பெண் : எண்ணம் போல் வாழ்வு கண்டேன்…
எல்லோரும் வாழ்த்தட்டுமே…
முன்னூறு ஆண்டு வரை…
என் மஞ்சள் வாழட்டுமே…

பெண் : மறு பிறப்பினிலும் ஏழு பிறப்பினிலும்…
இந்த தந்தைக்கும் தாய்க்கும் வந்து மகளென்று பிறந்திட…
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

BGM

பெண் : ஆண் என்றால் ஒரு வீடு…
பெண் என்றால் இரு வீடு…
தாய்நாட்டு பண்பாடு தடை போடுமே…
பொங்குதே கண்ணீரும் பொங்குதே…

பெண் : கிளை எங்கே போனாலும்…
என் வேர்கள் இங்கேதான்…
என் ஜீவன் இங்கும் அங்கும் விளையாடுமே…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

பெண் : பொன் மாலை தந்தவனை…
எந்நாளும் காதலிப்பேன்…
வெண்மேகம் சிறகு தந்தால்…
விண்ணோடு வலம் வருவேன்…

பெண் : எந்தன் உயிர் மலரை உந்தன் திருவடியில்…
தந்து உனக்குள் கரைந்து இந்த உலகத்தை மறந்திட…
ஏங்குதே என் உள்ளம் ஏங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே கண்ணீரும் சிந்துதே…

பெண் : பூசு மஞ்சள் பூசு மஞ்சள்…
பூசுது பூவொன்று…
எண்ணம் போலே எண்ணம் போலே…
வந்தது வாழ்வென்று…

பெண் : தாய் தந்தை வாழ்த்துக்களால்…
இன்று என் காதல் ஈடுரூதே…
ஏன் இந்த மாற்றங்களோ…
இன்று என் கண்ணில் தேனூருதே…

பெண் : பொங்குதே சந்தோஷம் பொங்குதே… ஓ ஹோ ஓ…
பொங்குதே சந்தோஷம் பொங்குதே…

BGM


Notes : Poosu Manjal Female Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadh (1999). Song Lyrics penned by Vairamuthu. பூசு மஞ்சள் பாடல் வரிகள்.


கண்ணோடு கண்ணோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & மகாநதி ஷோபனாதேவாகனவே கலையாதே

Kannodu Kannodu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

ஆண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

BGM

ஆண் : அன்பே அன்பே உன் ஆடை கொடு…
உன் திருமுகம் தெரியட்டுமே…
திங்கள் பெண்ணே உன் திரை விலக்கு…
கண் நிலவுகள் மலரட்டுமே…

ஆண் : உன் கால் கொலுசு சங்கீதம் பாடாதா…
உன் கண்மணியில் என் காலம் விடியாதா…
உன் கூந்தல் பூக்காடு நான் சூட பூவில்லையா…
உயிரின் குரல்தான் அடி உனக்கு கேட்கவில்லையா…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

BGM

பெண் : நெஞ்சே நெஞ்சே நீ நெருங்கிவிடு…
என் நிழலுக்குள் கரைந்துவிடு…
பூக்கள் கொஞ்சம் என் கூந்தலுக்குள்…
ஒரு குடித்தனம் தொடங்கிவிடு…

பெண் : உன் நேசம்தான் என் வாழ்வின் ஆதாயம்…
உன் நெஞ்சில்தான் முடியும் என் ஆதாயம்…
நாளை நம் விரகங்கள் நம் பேரில் உருவாகட்டும்…
உயிரகள் மடிந்தால் கடல் அலைகள் காதல் சொல்லட்டும்…

பெண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

பெண் : உறவே வருக…
நெஞ்சில் ஊஞ்சல் ஆட வருக…

ஆண் : கண்ணோடு கண்ணோடு வந்த காதல்…
காதோடு காதோடு பேசும் காதல்…
வானுக்கும் மண்ணுக்கும் உள்ள காதல்…
இந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வந்த காதல்…

—BGM—


Notes : Kannodu Kannodu Song Lyrics in Tamil. This Song from Kanave Kalaiyadhe (1999). Song Lyrics penned by Vairamuthu. கண்ணோடு கண்ணோடு பாடல் வரிகள்.