Category Archives: நிலாவே வா

கடலம்மா கடலம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், பி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்வித்யாசாகர்நிலாவே வா

Kadalamma Kadalamma Song Lyrics in Tamil


{ குழு : தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா…
தையாரே தையா தையா… } * (2)

குழு : தையார தை யார தைய தோம்…
தையார தை யார தைய தோம்…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…
கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

ஆண் : என்னச் சுத்தி என்னச் சுத்தி தண்ணி இருக்கு…
நாக்கு மட்டும் ஒட்டிவிட்டதே…

பெண் : ஓடம்பத்தான் கட்டி வச்சேன் உயிர் கயிரில்…
இப்ப ரொம்ப இத்துவிட்டதே…

ஆண் : என்ன கொன்னாலும் மீனு திண்ணாலும்…
நெஞ்சு வேகாது கண்ணம்மா…

பெண் : உன்ன காணாம உயிர் சேராம…
என் கண்ணீரு தீருமா…

ஆண் : கண்ணீரு கடலுக்குள் விழுந்தால்…
கடலுக்கு சொந்தமடி…

பெண் : கண்ணீரு முத்தா விளைஞ்சா…
எடுத்துக்க நல்லபடி…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

BGM

பெண் : தூதுவிட்ட அலை அட எந்த அலையோ…
என்ன வந்து சேரலையே…

ஆண் : தூதுவந்த அலை எல்லாம் உன்னை கண்டதும்…
சோகப்பட்டு ஒடஞ்சிருச்சே…

பெண் : வலி வந்தாலும் மொழி சொல்லாம…
நான் நின்னேனே ஊமையா…

ஆண் : நீ பொண்ணல்ல ஒரு தெய்வம்தான்…
இந்த கண்ணீரு தேவையா…

பெண் : கடல் தண்ணீர் அடிக்கிற அலையில…
கரையே மூழ்கிடுமோ…

ஆண் : உன் கண்ணீர் அடிக்கிற அலையில…
கடலே மூழ்கிடுமோ…

ஆண் : கடலம்மா கடலம்மா முத்துக் கடலம்மா…
என் கட்டுமரம் இன்னைக்கு கரை எட்டுமா…

ஆண் : அவ உச்சி பாற ஓரமா…
குழு : ஓரமா ஓரமா…
ஆண் : நான் தண்ணிக்குள்ளே தூரமா…
குழு : தூரமா தூரமா…

பெண் : நான் ரெண்டு கண்ணில் உப்பு காச்சி…
உள்ளங்கையில் கஞ்சி காச்சி…
வச்சிருக்கேன் ரொம்ப நேரமா…
நீயும் வந்து சேரும் யோகம் வருமா…

BGM


Notes : Kadalamma Kadalamma Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. கடலம்மா கடலம்மா பாடல் வரிகள்.


சந்திர மண்டலத்தை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய், ஹரிணி & எஸ்.பி.பி. சரண்வித்யாசாகர்நிலாவே வா

Chandira Mandalathai Song Lyrics in Tamil


BGM

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…

BGM

ஆண் : வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

குழு : ஹேய்… சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

பெண் : கண்ணில் ஒரு கள்ளம் இல்லை…
விண்வெளியில் பறக்க…
ஒரு விசா தேவையில்லை…
கை விலங்கு ஏதும் இல்லை…

ஆண் : பூமி ஒரு பள்ளிக்கூடம்…
பூவை மட்டும் படித்திருப்போம்…
புத்தகம் தேவையில்லை…
எங்கள் புத்தியில் பாரமில்லை…

பெண் : ஆணும் பெண்ணும் அன்பால் அன்பால்…
நட்பை வளக்கலாம்…

ஆண் : ஹேய்… காதலையும் கடந்து…
ஒரு கற்பை வளர்க்கலாம்…

பெண் : நாம் கண்டோம் புதிய இயக்கம்…
ஆண் : இது கண்ணீர் துளியை ஒழிக்கும்…

பெண் & ஆண் : நாம் காணும் கனவு பலிக்கும்…
எங்களுக்கும் ரெக்கை முளைத்திடும்…

பெண் : சந்திர மண்டலத்தை…
ஆண் : சுத்தம் செய்து சாலைகள் இட்டு வைப்போம்…
பெண் : வார்த்தைகள் கோலமிட்டு…
ஆண் : புத்தம் புது வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

BGM

ஆண் : ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டால்…
கட்டுக்கதை கட்டி இந்த ஊரும் சிரிக்குமே…
அது உண்மையை எரிக்குமே…

பெண் : தண்ணீரிலே தன்னை சுற்றி…
தவளைகள் கத்தும் போதும் தாமரை மலருமே…
ஆண் : ஹூம் ஹூம்… தாமரை மலருமே…

ஆண் : வானில் விடும் பட்டம் போலே…
வட்டம் அடிக்கலாம்… ஹேய்…

பெண் : வால் முளைத்த ஜீவன் போலே…
கொட்டம் அடிக்கலாம்…

ஆண் : இனி போதாதிந்த உலகம்…
பெண் : நாம் காண்போம் பத்தாம் கிரகம்…
ஆண் : அங்கு இல்லை இல்லை மரணம்…
குழு : எங்கள் இனம் காலத்தை வெல்லட்டும்…

ஆண் : சந்திர மண்டலத்தை சுத்தம் செய்து…
சாலைகள் இட்டு வைப்போம்…
வார்த்தைகள் கோலமிட்டு புத்தம் புது…
வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்…

பெண் : இந்த பூமியை மெல்ல மெல்ல மாற்றுவோம்…
ஆண் : அந்த பூமியை நிலவுக்கு ஏற்றுவோம்…
குழு : புத்துலகம் கண்டு வைப்போம்…

BGM


Notes : Chandira Mandalathai Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. சந்திர மண்டலத்தை பாடல் வரிகள்.


அக்குதே அக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவித்யாசாகர், எஸ்.என்.சுரேந்தர் & கோபால் ராவ்வித்யாசாகர்நிலாவே வா

Akkuthe Akkuthe Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

ஆண் : இக்குதே இக்குதே இக்குதே இக்குதே…
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே…
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே…
அசத்வோமா…

ஆண் : அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

ஆண் : ஹேய்… அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

BGM

ஆண் : சர்ச்ச தேடி போனதில்ல…
பள்ளிவாசல் பாத்ததில்ல…
கோயில் குளத்தில் விழுந்ததில்ல…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : லேடீஸ் காலேஜ் வாசலிலே…
பாடிகார்டா அணி வகுப்போம்…
போலீஸ்காரன் கண்களுக்கு…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : லேடீஸ் கேரேஜில் டராவல் பண்ண வேனும்…
அதுக்காக டி டி ஆர் ட்ரைனிங் எடுக்க வேனும்…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

BGM

ஆண் : செல்லு போனு உலகத்திலே…
பேஜெர் கொடுக்கும் காலத்திலே…
லெட்டெர் போட்டு காதலிச்சா…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : இங்கிலேண்டில் பொண் இருந்தா…
இன்டெர்னெட்டில் நியுஸ் அனுப்பி…
ஈச்சங்க்காட்டுக்கு வரவழைப்போம்…
குழு : நாங்க பேட் பாய்ஸ்தான்…

ஆண் : ராவோடு ராவாக ராக்கெட் ஏரும் மனசு…
செவ்வாய்யில் கேர்ல்ஸ் உண்டா தேடி பார்க்கும் வயசு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…

ஆண் : அக்குதே அக்குதே அக்குதே அக்குதே…
அதுக்கு மீனிங் அக்குதே அக்குதே…
அசத்த போறோம் அக்குதே அக்குதே…
அசத்வோமா…

ஆண் : இக்குதே இக்குதே இக்குதே இக்குதே…
இதுக்கு மீனிங் இக்குதே இக்குதே…
இஞ்சின் வெயிட்டும் இக்குதே இக்குதே…
அசத்வோமா…

ஆண் : அம்மை அப்பன் கண்களுக்கு…
அடுத்த வீட்டு அங்கிளுக்கு…
அம்சமான பிகருக்கு…
அவலோட பாதருக்கு…

குழு : வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…
வீ ஆர் பேட் பேட் பேட் பேட் பேட் பாய்ஸ்…


Notes : Akkuthe Akkuthe Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. அக்குதே அக்குதே பாடல் வரிகள்.


நிலவே நிலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & அனுராதா ஸ்ரீராம்வித்யாசாகர்நிலாவே வா

Nilave Nilave Song Lyrics in Tamil


BGM

ஆண் : நிலவே நிலவே நிலவே நிலவே…
நில்லு நில்லு…
திருவாய் மொழிகள் சொல்லு சொல்லு…

ஆண் : மலரே மலரே மலரே மலரே…
சொல்லு சொல்லு…
மனதை தமிழில் சொல்லு சொல்லு…

ஆண் : கண்கள் சொல்கின்ற பாஷை எல்லாம்…
கண்டு தெளிகின்ற ஞானம் இல்லை…
தங்கச் செவ்வாயின் தாழ் திறந்து…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

BGM

பெண் : கொடி கொண்ட அரும்பு மலர்வதற்கு…
கொடியோடு மனுக்கள் கொடுப்பதில்லை…
பழங்கள் பழுத்தும் பறவைக்கெல்லாம்…
மரங்கள் தந்தி ஒன்றும் அடிப்பதில்லை…

பெண் : மௌனத்தைப் போல் பெண்ணின் மனம் உரைக்க…
மனிதரின் பாஷைக்கு வலிமை இல்லை…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…

BGM

ஆண் : ரதியே ரதியே ரதியே ரதியே…
காதல் எண்ணம் கனிவாய் மொழியில் சொன்னால் சொன்னால்…

ஆண் : வளரும் பிறையே பிறையே பிறையே…
வானம் எட்டி தொடவும் முடியும் என்னால் என்னால்…

ஆண் : வாயில் வரைந்த ஒரு வார்த்தை சொன்னால்…
காற்றை கடன் வாங்கி பறந்து போவேன்…
கால வெளியோடு கரைந்து போவேன்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

BGM

பெண் : வண்டுகள் ஒலி செய்து கேட்டதுண்டு…
மலர்கள் சத்தமிட்டு பார்த்ததுண்டா…
நதிகள் சொற்பொழிவு செய்வதுண்டு…
கரைகளின் மௌனம் என்றும் கலைந்ததுண்டா…

பெண் : சொல்கிற மொழிகள் தீர்ந்து விடும்…
சொல்லாத காதல் தீர்வதுண்டா…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…

BGM

ஆண் : நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே…
கெஞ்ச கெஞ்ச இன்னும் மௌனம் என்ன என்ன…
கனவே கனவே கனவே கனவே…
கண்ணீர் வற்றி கண்ணில் ஜீவன் மின்ன மின்ன…

ஆண் : வார்த்தை உன் வார்த்தை நின்று போனால்…
வாழ்க்கை என் வாழ்க்கை நின்று போகும்…
உடலை என் ஜீவன் உதறிப் போகும்…
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு…

BGM

பெண் : உள்ளங்கள் பேசும் மொழி அறிந்தால்…
உன் ஜீவன் தொலைக்க தேவை இல்லை…
இரு கண்கள் பேசும் பாஷைகளை…
இரு நூறு மொழிகள் சொல்வதில்லை…

பெண் : தான் கொண்ட காதல் மொழிவதற்கு…
தமிழ் நாட்டுப் பெண்கள் துணிவதில்லை…

பெண் : மொழியே போ போ போ…
அழகே வா வா வா…
மொழியே போ போ போ…
அழகே வா வா வா…


Notes : Nilave Nilave Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. நிலவே நிலவே பாடல் வரிகள்.


nee-kaatru-naan-maram-song-lyrics-in-tamil

நீ காற்று நான் மரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.எஸ். சித்ரா & ஹரிஹரன்வித்யாசாகர்நிலாவே வா

Nee Kaatru Naan Maram Song Lyrics in Tamil


ஆண் : நீ காற்று…

BGM

ஆண் : நான் மரம்…

BGM

ஆண் : என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

BGM

ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

ஆண் : நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…

ஆண் : நீ இரவு நான் விண்மீன்…
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்…

ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

BGM

பெண் : நீ அலை நான் கரை…
என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்…

ஆண் : நீ உடல் நான் நிழல்…
நீ விழவேண்டாம் நான் விழுவேன்…

பெண் : நீ கிளை நான் இலை…
உன்னை ஒட்டும் வரைக்கும்…
நான் உயிர்த்திருப்பேன்…

ஆண் : நீ விழி நான் இமை…
உன்னை சேரும் வரைக்கும்…
நான் துடித்து இருப்பேன்…

பெண் : நீ சுவாசம் நான் தேகம்…
நான் உன்னை மட்டும்…
உயிர் தொட அனுமதிப்பேன்…

ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

BGM

ஆண் : நீ வானம் நான் நீலம்…
உன்னில் நானாய் கலந்திருப்பேன்…

பெண் : நீ எண்ணம் நான் வார்த்தை நீ…
சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்…

ஆண் : நீ வெயில் நான் குயில்…
உன் வருகை பார்த்துதான்…
நான் இசைப்பேன்…

பெண் : நீ உடை நான் இடை…
உன்னை உறங்கும் பொழுதும்…
நான் உடுத்திருப்பேன்…

ஆண் : நீ பகல் நான் ஒளி…
என்றும் உன்னை மட்டும்…
சார்ந்தே நான் இருப்பேன்…

பெண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…

ஆண் : நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…

பெண் : நீ இரவு நான் விண்மீன்…
நீ இருக்கும் வரைதான் நான் இருப்பேன்…

ஆண் : நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…


Notes : Nee Kaatru Naan Maram Song Lyrics in Tamil. This Song from Nilaave Vaa (1998). Song Lyrics penned by Vairamuthu. நீ காற்று நான் மரம் பாடல் வரிகள்.