Category Archives: என் ஆச ராசாவே

Munthi Munthi Song Lyrics in Tamil

முந்தி முந்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & அனுராதா ஸ்ரீராம்தேவாஎன் ஆச ராசாவே

Munthi Munthi Song Lyrics in Tamil


ஆண் : முந்தி முந்தி விநாயகனே… ஏஏ… ஏஏ…ஏ…
முப்பத்து முக்கோடி தேவர்களே… ஏஏ… ஏஏ…ஏ…
புள்ளையார் பட்டியில் வசிக்கும் விநாயகா…
உடன்குடியில் வாழ்ந்து வரும் எங்க முத்தாலம்மா…
பாட்டெடுத்து தரும் எங்க பச்சையம்மா…
வேண்டும் வரத்தக் கொடு என் தாயே வெக்காளியம்மா…
அடி உன்ன எண்ணிப் பாமரன் நான் ஆட்டம் ஆட வந்தேன்…

BGM

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

BGM

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா…
என் கூட வந்து சேந்துக்கிட்டா ஊரு ஒத்துக்குமா…

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா…
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே வேகம் வந்திருமா…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழம பாக்கனும்…

BGM

ஆண் : ஏஏஏ… எந்த கூட்டமும் பணிஞ்சு…
என்னோட ஆட்டத்தில் மயங்கும்…

BGM

பெண் : எங்கக் கோட்டைக்கு ராசாவின் கதையும்…
பாட்டுல அடங்கும்…

BGM

ஆண் : ஏழு ஊரு அட ஏழு ஊரு…

பெண் : நான் ஏழு ஊரு தண்ணி குடிச்சவங்க…
என்ன எதுத்து நிக்க ஆளு இல்லீங்க…

ஆண் : நான் நூறு சபைய பாத்து வந்தவன்டீ…
என்ன அடக்கி வைக்க ஆரும் இல்லையடி…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

BGM

பெண் : இந்தப் பூங்குயிலு ராகத்துல…
வரும் தேன் போலப் பாட்டு…

BGM

ஆண் : அதத்தான் நெனச்சு கூடவே வருவேன்…
நீ கருணை காட்டு…

BGM

பெண் : பேச்சியம்மா அடி பேச்சியம்மா…
பேச்சியம்மா மனசு வச்சாளே…
என்னப் பாடச் சொல்லி வரம் கொடுத்தாளே…

ஆண் : ஊர் உலகம் பேச வச்சாளே…
உசுர் உள்ள வர ஆட வச்சாளே…

ஆண் : பாக்கு வெத்தல மாத்தனும்…
பார்வதியப் பாக்கனும்…

பெண் : நாக்கு செவக்கப் போடனும்…
நாளும் கெழமை பாக்கனும்…

ஆண் : ஏன்டி புள்ள ஒனக்குச் சம்மதமா…
என் கூட வந்து சேந்துக்கிட்டா ஊரு ஒத்துக்குமா…

பெண் : மாமனுக்கு ஆசை முத்திருமா…
நாம வாக்கப் பட்டு சேரும் முன்னே வேகம் வந்திருமா…

BGM


Notes : Munthi Munthi Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. முந்தி முந்தி பாடல் வரிகள்.


தெற்கு தெசக் காத்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன்தேவாஎன் ஆச ராசாவே

Therku Thesa Kaathu Song Lyrics in Tamil


ஆண் : தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…

BGM

ஆண் : தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…

ஆண் : எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…

ஆண் : தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…

BGM

ஆண் : என் கை புடிச்சு நீ நடந்த…
கால்கள் கொஞ்சம் ஓயும் வர…
ஒன் கை புடிச்சு நான் நடந்தா…
தூரத்துக்கு எல்லை இல்ல…

BGM

ஆண் : என் மடியில் நீ உறங்கு…
உன் அலுப்பு தீரும் வர…
உம் மடியில் நான் இருப்பேன்…
என் வாழ்க்க தீரும் வர…

ஆண் : எட்டுத் தெச நான் ஜெயிச்சு…
கட்டி வச்ச கோட்டையில…
எப்பவும் நீ மகராச…
நான் இருப்பேன் சேவகனா…

ஆண் : நீ இருந்தா போதும் என்னோட…
ஒரு மலையக் கூட…
நான் சுமப்பேன் தோளில் தன்னால…

ஆண் : தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…

BGM

ஆண் : கரிசக் காட்டு தரிசுக்குள்ள…
மெத்த மழை பேஞ்சதையா…
மெத்த மழை பேஞ்சதுல…
சொந்தம் ஒன்னு வந்ததையா…

BGM

ஆண் : வந்த சொந்தம் ஆசையுடன்…
நேசம் வச்சு சேந்ததையா…
நேசத்துக்கு சாட்சி சொல்ல…
வாச முல்ல பூத்ததையா…

ஆண் : மகனே ஒன் ஒறவு நான் ஒறங்கும் ஆலமரம்…
தனியா நான் இருந்தா நாதி இல்லா வேல மரம்…
ஒன் ஒறவு போதுமையா மகனே…
அது ஒன்னிருந்தா ஊர் உறவு சேந்து வரும் மகனே…

ஆண் : தெற்கு தெசக் காத்து தேடி வந்து வீச…
பத்து வகப் பாட்டு நானெடுத்துப் பாட…

ஆண் : எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…
எப்பவும் நீ எனக்கு என் உசுரப் போல…
பக்கமா நான் இருப்பேன் உன் நெழலில் வாழ…


Notes : Therku Thesa Kaathu Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. தெற்கு தெசக் காத்து பாடல் வரிகள்.


மயங்காத மயங்காத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & தேவி நீத்தியார்தேவாஎன் ஆச ராசாவே

Mayangatha Mayangatha Song Lyrics in Tamil


BGM

ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி…

BGM

ஆண் : மயங்காத மயங்காத மனசாடும் மகராணி…
மனம் போல ஒண்ணு சேந்து…
மல போல வாழ்ந்திருப்போம்…

BGM

பெண் : மகராசா மகராசா எனக்கேத்த மகராசா…
மகராசா மகராசா எனக்கேத்த மகராசா…
தனியாளா நான் இருக்கேன்…
வர வேணும் மகராசா…

BGM

ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு…
மலக் கோட்ட கரைஞ்சிருமா…

BGM

ஆண் : மழை பேஞ்சு மழை பேஞ்சு…
மலக் கோட்ட கரைஞ்சிருமா…
மழை பேஞ்சு காத்தடிச்சா…
நான் வருவேன் மகராணி…

BGM

பெண் : வகுடெடுத்து தல சீவி…
வகை வகையா பூ முடிச்சு…
வகுடெடுத்து தல சீவி…
வகை வகையா பூ முடிச்சு…
வழி மேல கண்ணு வச்சு…
காத்திருக்கேன் மகராசா…

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்…
கொல கொலையா காய்ச்சிருக்கு…

BGM

ஆண் : தெக்க வனம் தோப்பெல்லாம்…
கொல கொலையா காய்ச்சிருக்கு…
காய்ச்ச மரம் மேலே இப்போ…
கண்ணு பட்டு போனதம்மா…

BGM

பெண் : பூவுலேயும் சாதிப் பூவு…
பொட்டுலேயும் செந்துருக்கம்…
பூவுலேயும் சாதிப் பூவு…
பொட்டுலேயும் செந்துருக்கம்…
சீலையிலே கூரப் பட்டு…
தந்தவரே மகராசா…


Notes : Mayangatha Mayangatha Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. மயங்காத மயங்காத பாடல் வரிகள்.


கட்டுனேன் கட்டுனேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாமலேசியா வாசுதேவன் & சுவர்ணலதாதேவாஎன் ஆச ராசாவே

Kattanum Kattanum Song Lyrics in Tamil


BGM

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…

BGM

ஆண் : சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
இங்கே நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு பேர் என்னம்மா…
சந்தனக் காத்துக்கு சங்கடம் ஏனம்மா…
சக்கம்மா சக்திய நீ கொடம்மா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்ட ஒன்னு…
அதக் கட்டிக் காக்க ஒரு காவல் இல்ல…
சுத்துனேன் சுத்துனேன் பூமி எல்லாம்…
என்ன சுத்துன சொந்தத்தப் பாக்கவில்லே…

BGM

ஆண் : சொத்து சொகம் தேடவில்ல…
இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா…

BGM

ஆண் : கத்த வித்த தோற்க்கவில்ல…
அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா…

BGM

பெண் : சொத்து சொகம் தேடவில்ல…
இது சொந்தத்தத் தேடித்தான் போனதம்மா…
கத்த வித்த தோற்க்கவில்ல…
அதக் காட்டத்தான் இப்பவும் வந்ததம்மா…

ஆண் : கட்டளை இட்டது தாயம்மா…
அட கை கட்டி நின்னது சேயம்மா…

பெண் : கட்டளை இட்டது தாயம்மா…
அட கை கட்டி நின்னது சேயம்மா…

ஆண் : வேஷம் போட்டதுல…
ஒரு நோக்கம் இருக்கம்மா…
பாசம் பொய் ஆகுமா…
அதில் மாசு வந்திருமா…

ஆண் : கட்டுன கட்டுன கோட்டையில…
இப்ப கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…

BGM

பெண் : நீ சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா ஒனக்கு பேரும் உண்டு…

BGM

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
எங்கப்பன் வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா…

பெண் : சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா…
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…

BGM

ஆண் : கட்டபொம்மன் கோட்டையிலே…
வந்து காலடி வச்சது கன்னுக் குட்டி…

BGM

ஆண் : கெட்ட வழி போனதில்லே…
இது அப்பன மீறாத சிங்கக் குட்டி…

—BGM—

ஆண் : கட்டபொம்மன் கோட்டையிலே…
வந்து காலடி வெச்சது கன்னுக் குட்டி…
கெட்ட வழி போனதில்லே…
இது அப்பன மீறாத சிங்கக் குட்டி…

ஆண் : எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்…
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்…
எப்பவும் உன் புள்ள சுத்தம்தான்…
இது மொத்தமும் அப்பனின் ரத்தம்தான்…

ஆண் : கோயில் வாசலுல…
அட நீதி தோக்கணுமா…
நாலும் பாத்து நின்னா…
அது நியாயம் ஆயிருமா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு…
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…
சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு…

ஆண் : சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…
நான் வாழ்ந்த வாழ்க்கைக்குப் பேர் உண்டம்மா…
சந்தனக் காத்துக்கு சங்கடம் சேருமா…
சக்கம்மா சக்கம்மா நீ சொல்லம்மா…

ஆண் : கட்டுனேன் கட்டுனேன் கோட்டை ஒன்னு…
அதை கட்டிக் காக்க இங்க காவல் உண்டு…
சுத்துன சுத்துன பூமி எல்லாம்…
ரொம்ப சுத்தமா எனக்கு பேரும் உண்டு…

BGM


Notes : Kattanum Kattanum Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. கட்டுனேன் கட்டுனேன் பாடல் வரிகள்.


சோளக் காட்டு பாதையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாபி. உன்னிகிருஷ்ணன் & சுவர்ணலதாதேவாஎன் ஆச ராசாவே

Sola Kaattu Pathayila Song Lyrics in Tamil


BGM

பெண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

BGM

பெண் : சோளக் காட்டு பாதையில…
வண்டி ஓட்டி போற மச்சான்…
சோடிக் குயில் பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…

BGM

பெண் : நான் பாடும் பாட்டுக்கு…
பதில் இருக்கா…

ஆண் : எம் பாட்டு வீசுற காத்து…
நீ காத்துல ஆடுற நாத்து…
அடி நீயா போட்டிக்கு சரி சோடி…
அடி போடி நீ வெறும் வாயாடி…

ஆண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

BGM

பெண் : வைகை ஆத்துத் தண்ணி…
பையப் பாயும் நின்னு…
பொன்னு வெளையும் எங்க மண்ணு…
பாக்கணும் ஆயிரம் கண்ணு… ஓஓ…

BGM

ஆண் : ஆன கட்டி உழுது…
ஆடி மாசம் வெதச்சு…
ஆயிரம் பேரு அறுவடை செஞ்சு…
எங்க ஊருக்குப் பேரு… ஓ…

பெண் : எங்க ஊரச் சுத்தி மரமெல்லாம்…
குயிலுக் கூட்டம் பாடும்…

ஆண் : எங்க ஓடக்குள்ள மரமெல்லாம்…
பாட்டுக்குத் தாளம் போடும்…

பெண் : சல சலக்கும் ஆத்துத் தண்ணி…
சிலு சிலுன்னு பாட்டு படிக்கும்…

ஆண் : கல கலக்கும் கரும்புச் சோல…
தெனம் புதுசா பாட்டு எடுக்கும்…

BGM

பெண் : சோளக் காட்டு பாதையில… ஏஏ…

BGM

குழு : கட்டான மயிலு…
மச்சானத் தேடுது…

BGM

குழு : மச்சானின் பார்வ…
எம் மேல பாயுது…

BGM

குழு : பொல்லாத நோக்கம் உண்டாகுது…
கல்யாண ஆசையில் திண்டாடுது…

குழு : ஆளான பருத்தி தானாக வெடிக்கும்…
கல்யாண மனசு தானாக பழுக்கும்…

BGM

பெண் : சிங்கம் புலியக் கண்டா…
மொறைச்சு நிப்பா பொண்ணு…
தெக்குச்சீம பேரக் கேளு…
வீரம் வெளஞ்ச மண்ணு… ஓஓஓ…

BGM

ஆண் : கம்பெடுத்து நிப்பான்…
எங்க ஊரு ஆளு…
வெள்ளக்காரன் பயந்து ஓடுன…
கதையக் கொஞ்சம் கேளு… ஓஓஓ…

பெண் : எங்க ஆத்தா குடுத்தது தாய்ப் பாலு…
எப்பவும் படிப்பேன் பாட்டு…

ஆண் : எங்க அப்பன் குடுத்தது தமிழ்ப் பாலு…
எப்பவும் நெலைக்கும் எம் பாட்டு…

பெண் : நான் பரம்பரையா பாட்டுக்காரி…
வெவரம் உள்ள கெட்டிக்காரி…

ஆண் : பண்ணபுரம் ஊருக்காரன்…
பாட்டுல நான் கெட்டிக்காரன்…

BGM

ஆண் : சோளக் காட்டு பாதையில…
பாட்டு கட்டிப் பாடும் குயிலே…
நானும் கூட பாடும் பாட்டு…
காதில் கேக்குதா…

BGM

ஆண் : நான் பாடும் பாட்டுக்கு பதில் இருக்கா…

BGM

பெண் : உம் பாட்டு வீசுற காத்து…
நான் காத்துல ஆடுற நாத்து…
அட நானா போட்டிக்கு சரி சோடி…
எம் மாமா நான் வெறும் வாயாடி…

BGM


Notes : Sola Kaattu Pathayila Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. சோளக் காட்டு பாதையில பாடல் வரிகள்.


பத்து ரூவா ரவிக்கைதுணி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கஸ்தூரி ராஜாஅருண்மொழி & கே.எஸ். சித்ராதேவாஎன் ஆச ராசாவே

Pathu Rooba Ravikkai Song Lyrics in Tamil


BGM

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…

பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…

ஆண் : ஹொய்… பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏ… பச்சப் பாசி பல்லழகி…
நீ பம்பரத்து கண்ணழகி…
அச்சடிச்ச முத்தழகி…
அத்த பெத்த பொன்னழகி…
ஒன்ன விட்டு எங்க போவேண்டி…

பெண் : ஏ… வெள்ளரிக்கா மூக்கழகா…
ஏ… வெங்கலத்து பேச்சழகா…
வெட்டருவா மீசை வச்சு…
வீச்சருவா கையில் வச்சு…
கிட்ட வந்தா ஆசை வருமா…

ஆண் : ஏன்டி மொறைக்கிற…
என்னாடி என் கொற…
என்ன விட்டு எங்க ஓடுற…

பெண் : நீ வீணா பசப்புற…
வீராப்பா பேசுற…
வேலையத்த வேல செய்யுற…

ஆண் : என்ன பாத்தா எதுக்குற…
நீயா ஒதுக்குற…
அப்பறமும் எனக்கு சலிக்கல…

பெண் : என்ன பாடா படுத்துற…
மாடா நடத்துற…
துப்புரவா எனக்குப் புடிக்கல…

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

BGM

ஆண் : ஏ… கண்ணாடி வளவி போட்டு…
ஒன் காலுக்கு கொலுசு போட்டு…
ஒன்னோட ஒடம்பெல்லாம்…
பொன்னால நான் போத்துறேன்…
என்னோட நீ வாடி ராசாத்தி…

பெண் : என்னோட தகப்பன் சொல்ல…
நான் கொன்னாலும் ஒதுக்க மாட்டேன்…
யாருக்கும் தெரியாம…
ஒன்னோட நான் வந்தாக்கா…
மானம் கெடும் நான் வர மாட்டேன்…

ஆண் : என் கண்ணா மதிக்கிறேன்…
பொன்னா எழக்கிறேன்…
சொன்னாக் கேளு என்னோட பேச்ச…

பெண் : நல்லாவே பேசுற…
என்ன நீ ஏய்க்கிற…
ஒம் பேச்சுல நான் விழ மாட்டேன்…

ஆண் : அய்யோ கஞ்சி குடிக்கல…
கண்ணு மூடி தூங்கல…
கட்டழகி நெனப்பு போகல…

பெண் : என் நெஞ்சு பொறுக்கல…
நேசம் மறக்கல…
ஒன்ன விட்டு வேற தேடல…

ஆண் : பத்து ரூவா லவுக்கத் துணி…
பட்டணத்து சிலுக்குத் துணி…
பக்குவமா எடுத்துத் தரேன்…
பக்கத்துல வாடி…

பெண் : கம்பிக் கறை வேட்டி கட்டி…
கக்கத்துல கொட இடுக்கி…
பத்துத் தரம் சுத்தி வந்தாலும்…
சம்மதிக்க மாட்டேன்…

ஆண் : அட கொஞ்சம் கூட எரக்கம் இல்லையா…
அடி பஞ்சவர்ணம்…
எம் மேலதான் ஆசை வல்லையா…

பெண் : உன் சூட்சுமம்தான்…
என் கிட்ட நடக்குமா…
கொஞ்சம் சூதானமா…
இருந்துக்கிட்டா எடக்கு நடக்குமா…

BGM


Notes : Pathu Rooba Ravikkai Song Lyrics in Tamil. This Song from En Aasai Rasave (1998). Song Lyrics penned by Kasthuri Raja. பத்து ரூவா ரவிக்கைதுணி பாடல் வரிகள்.