Category Archives: செந்தமிழ்ப் பாட்டு

செந்தமிழ்ப் பாட்டு – Senthamizh Paattu (1992)

காலையில் கேட்டது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுவர்ணலதாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Kalaiyil Kettathu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

BGM

ஆண் : மோகம் என்னென்ன மந்திரம் போட்டதோ…
தேகம் எங்கெங்கும் மின்னல்கள் பாய்ந்ததோ…

பெண் : தேவனின் கைவிரல் பாவை மேல் பட்டது…
ஆண் : தேவியின் கண்விழி பானம்தான் விட்டது…

பெண் : புதுவித அனுபவம்…
ஆண் : அஹ… அஹஹா…

பெண் : முதல் முதல் அறிமுகம்…
ஆண் : ஓஹ் ஓஹஹொ…

பெண் : புதுவித அனுபவம் முதல் முதல் அறிமுகம்…
தேனும் பாலும் தொட தொட ஊறுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

BGM

பெண் : தூக்கம் கண்விட்டு சென்றதே ராத்திரி…
நெஞ்சம் புண்பட்டு நின்றதே பூச்செடி…

ஆண் : ஏக்கமா கண்மணி காய்ந்ததோ செவ்விழி…
பெண் : காதலா என் மனம் சேர்ந்ததே உன் வழி…

ஆண் : ரகசியம் புரிந்தது…
பெண் : அஹஆ… அஹஹா…

ஆண் : அதிசயம் தெரிந்தது…
பெண் : ஓஹ் ஓஹஹொ…

ஆண் : ரகசியம் புரிந்தது அதிசயம் தெரிந்தது…
காற்றும் பூவும் கலந்துறவாடுது…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…

பெண் : பாதையில் ஏதோ ஒரு காவல் இனி…
தோள்களில் சாய்ந்தது காதல்கனி…

ஆண் : காலையில் கேட்டது கோயில் மணி…
கேட்டதும் பூத்தது கண்ணின் மணி…


Notes : Kalaiyil Kettathu Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. காலையில் கேட்டது பாடல் வரிகள்.


சொல்லி சொல்லி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுனந்தாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Solli Solli Song Lyrics in Tamil


BGM

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…

ஆண் : நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்…
நிழல் போல் சோகம் ஆடும்…
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்…
எதைத்தான் இதயம் பாடும்…

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…

BGM

ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும்…
மகனும் நான்தானம்மா…
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்…
உலகில் நீதானம்மா…

ஆண் : தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும்…
இதயம் தாங்காதம்மா…
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்…
விழிகள் தூங்காதம்மா…

ஆண் : வண்ண முகம் வாடி நிற்க…
பார்த்ததில்லை நானும் எந்நாளும்…
வாடை கொஞ்சும் கூந்தலை…
ஆடைகொண்டு மூடிட வருத்தமென்ன இந்நேரம்…

ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ்… பா பா பா…

பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல்…
வளர்த்தேன் நான்தானடா…
விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட…
விழுந்தாய் நீதானடா…

பெண் : ஏழை உன் மோகம் கானல் என் ராகம்…
முடிவை கண்டேனடா…
மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று…
முடியை தந்தேனடா…

பெண் : காதல் கொண்டு லாபம் என்ன…
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்…
அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும்…
நடந்திடுமோ இந்நாளில்…

பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்…
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு…

BGM

பெண் : பிள்ளைக்கென பாடுகிறாள்…
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு…

BGM

பெண் : நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்…
நிழல் போல் சோகம் ஆடும்…
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்…
மகனே மனம்தான் வாடும்…

பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்…
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு…
பிள்ளைக்கென பாடுகிறாள்…
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு…


Notes : Solli Solli Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. சொல்லி சொல்லி பாடல் வரிகள்.


கூட்டுக்கொரு பாட்டிருக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிமனோஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Kootukoru Paatirukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
இணையா இருக்க இசைதான் படிக்க…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…

BGM

ஆண் : சின்ன சின்ன பறவை கூட்டம்…
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்…
சின்ன சின்ன பறவை கூட்டம்…
என் பாட்டுக்கு தலையை ஆட்டும்…

ஆண் : கட்டுகளும் காவல்களும்…
ஆத்தாடி இங்கே இல்லை…
கொத்து கொத்தா நோட்டு விழும்…
ஆனந்தம் நெஞ்சுக்குள்ளே…

ஆண் : கூண்டு கிளி போலிருந்தா…
கொஞ்சும் கிளி வாடுமம்மா…
கூண்டை விட்டு வாடி அம்மா…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…

BGM

ஆண் : சங்கீதத்தை விலையை போட்டா…
சந்தையிலே வாங்க கூடும்…
சங்கீதத்தை விலையை போட்டா…
சந்தையிலே வாங்க கூடும்…

ஆண் : சாமி தந்த செல்வம் இது…
வேறென்ன வேணும் சொல்லு…
சிந்துகளை அள்ளி தர்றேன்…
நாள்தோறும் வாங்கிச் செல்லு…

ஆண் : நான் அறிஞ்ச பாட்டு எல்லாம்…
நீ அறிஞ்சு பாட வேணும்…
பொங்கி பொங்கி ஓட வேணும்…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
இணையா இருக்க இசைதான் படிக்க…

ஆண் : கூட்டுக்கொரு பாட்டிருக்கு கேட்டுக்கம்மா…
கேட்டு கொஞ்சம் காதில் வாங்கி போட்டுக்கம்மா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…
பெண்புறா வெண்புறா மீட்டுதே தம்புரா…


Notes : Kootukoru Paatirukku Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. கூட்டுக்கொரு பாட்டிருக்கு பாடல் வரிகள்.


சின்னச் சின்ன தூறல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்(கள்)திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & அனுராதா ராஜ்கிருஷ்ணாஎம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜாசெந்தமிழ்ப் பாட்டு

Chinna Chinna Thooral Song Lyrics in Tamil


BGM

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்ன சின்ன…

BGM

ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்…
தீண்டும் மேகம் சிலிர்க்குதம்மா…

பெண் : அது தீண்டும் மேகமில்ல…
தேகம் சிலிர்க்குதம்மா…

ஆண் : உனது தூறலும் இனிய சாரலும்…
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா…
நனைந்த பொழுதிலும் குளிர்ந்த மனதினில்
ஏதோ ஆசை துடிக்குதம்மா…

ஆண் : மனித ஜாதியின் பசியும் தாகமும்…
உன்னால் என்றும் தீருமம்மா…
வாரித் தந்த வள்ளல் என்று…
பாரில் உன்னைச் சொல்வதுண்டு…

ஆண் : இனமும் குலமும் இருக்கும் உலகில்…
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே…
சின்ன சின்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…

BGM

ஆண் : பிழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்…
நீயோ இங்கே வருவதில்லை…

பெண் : படிச்சவன் பாட்டை கெடுத்த கதையால்ல இருக்கு…
பிழைக்கும்ன்னு எழுதலையே…
மழைக்குன்னுதானே எழுதியிருக்கேன்…

ஆண் : ஓஹோ… மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில்…
நீயோ இங்கே வருவதில்லை…
வெடித்த பூமியும் மானம் பார்க்கையில்…
நீயோ கண்ணில் தெரிவதில்லை…
உனது சேதியை பொழியும் தேதியை…
முன்னால் இங்கே யாரறிவார்…

ஆண் : நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும்…
நீயும் வந்தால் பொன்னாய் மின்னும்…
உனது பெருமை உலகம் அறியும்…
இடியென்னும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே…
சின்ன சின்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…

ஆண் : சின்னச் சின்ன தூறல் என்ன…
என்னைக் கொஞ்சும் சாரல் என்ன…
சிந்தச் சிந்த என் ஆவல் பின்ன…
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன…
சின்ன சின்ன…


Notes : Chinna Chinna Thooral Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. சின்னச் சின்ன தூறல் பாடல் வரிகள்.