பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர்(கள்) | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & சுனந்தா | எம்.எஸ்.விஸ்வநாதன் & இளையராஜா | செந்தமிழ்ப் பாட்டு |
Solli Solli Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
ஆண் : நான் வணங்கும் தெய்வத்தின் விழியில்…
நிழல் போல் சோகம் ஆடும்…
நடந்த சேதி நான் ஒன்றும் அறியேன்…
எதைத்தான் இதயம் பாடும்…
ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ் பாட்டு…
அன்னை மனம் ஆணையிட…
இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு…
—BGM—
ஆண் : அம்மா உன் வார்த்தை வேதம் என்றெண்ணும்…
மகனும் நான்தானம்மா…
உலவும் என் கோயில் பேசும் என் தெய்வம்…
உலகில் நீதானம்மா…
ஆண் : தாயே உன் கண்ணில் துளி நீர் கண்டாலும்…
இதயம் தாங்காதம்மா…
ஏதோ உன் நெஞ்சில் துயரம் என்றாலும்…
விழிகள் தூங்காதம்மா…
ஆண் : வண்ண முகம் வாடி நிற்க…
பார்த்ததில்லை நானும் எந்நாளும்…
வாடை கொஞ்சும் கூந்தலை…
ஆடைகொண்டு மூடிட வருத்தமென்ன இந்நேரம்…
ஆண் : சொல்லி சொல்லி வந்ததில்லை…
இந்த பிள்ளையின் செந்தமிழ்… பா பா பா…
பெண் : காதல் என்னென்று நீயும் காணாமல்…
வளர்த்தேன் நான்தானடா…
விதியும் கை நீட்ட காதல் தீ மூட்ட…
விழுந்தாய் நீதானடா…
பெண் : ஏழை உன் மோகம் கானல் என் ராகம்…
முடிவை கண்டேனடா…
மகனே உன் ஆசை முடிக்க நான் இன்று…
முடியை தந்தேனடா…
பெண் : காதல் கொண்டு லாபம் என்ன…
பார்த்ததுண்டு நானும் அந்நாளில்…
அன்னை கண்ட நாடகம் அன்பு மகன் வாழ்விலும்…
நடந்திடுமோ இந்நாளில்…
பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்…
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு…
—BGM—
பெண் : பிள்ளைக்கென பாடுகிறாள்…
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு…
—BGM—
பெண் : நீ வணங்கும் தெய்வத்தின் விழியில்…
நிழல் போல் சோகம் ஆடும்…
நடந்த சேதி நான் இன்னும் சொன்னால்…
மகனே மனம்தான் வாடும்…
பெண் : சொல்ல சொல்ல நீ அறிவாய்…
இந்த அன்னையின் செந்தமிழ் பாட்டு…
பிள்ளைக்கென பாடுகிறாள்…
உன்னை பெற்றவள் செந்தமிழ் பாட்டு…
Notes : Solli Solli Song Lyrics in Tamil. This Song from Senthamizh Paattu (1992). Song Lyrics penned by Vaali. சொல்லி சொல்லி பாடல் வரிகள்.