பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | மனோ & எஸ். ஜானகி | இளையராஜா | சிறையில் பூத்த சின்ன மலர் |
Aalolam Paadum Song Lyrics in Tamil
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
—BGM—
ஆண் : ஆகாயம் தேடும் திங்களே…
—BGM—
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
—BGM—
ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு…
வங்கக்கடல் காய்வதில்லை…
வீசும் புயல் காற்றடித்து…
வெள்ளி மலை சாய்வதில்லை…
ஆண் : சந்திரனைப் போல இங்கு…
சூரியனும் தேய்வதில்லை…
மானிடரைப் போல இங்கு…
காதல் என்றும் மாய்வதில்லை…
ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க…
காசு பணம் கேட்குமா…
பேசுகின்ற பேதம் எல்லாம்…
பாசங்களை தாக்குமா…
ஆண் : வாழலாம் கூட வா…
வாழலாம் கூட வா…
நாளெலாம் நான் சூடும் பூவே…
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
—BGM—
பெண் : உன்னை ஒரு நாள் மறந்து…
என் மனது வாழ்ந்ததில்லை…
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்…
உன்னை அன்றி வேறு இல்லை…
பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க…
என்னிடத்தில் ஏதும் இல்லை…
என்னை அள்ளி நான் கொடுத்தேன்…
உன்னுடைய கைகளிலே…
பெண் : கண் இரண்டில் காதல் என்னும்…
கோட்டை கட்டி வாழ்கிறேன்…
ஊரறிய மாலை இட்டு…
உன் மடியில் சேர்கிறேன்…
பெண் : காலமே கூடலாம்…
காலமே கூடலாம்…
மார்பிலே நான் மஞ்சம் போட…
ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
பெண் : ஆகாயம் தேடும் திங்களே…
ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…
ஆண் & பெண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…
Notes : Aalolam Paadum Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Vaali. ஆலோலம் பாடும் பாடல் வரிகள்.