Category Archives: சிறையில் பூத்த சின்ன மலர்

ஆலோலம் பாடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & எஸ். ஜானகிஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Aalolam Paadum Song Lyrics in Tamil


ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…

BGM

ஆண் : ஆகாயம் தேடும் திங்களே…

BGM

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…
சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

BGM

ஆண் : உச்சி வெயில் சூடு பட்டு…
வங்கக்கடல் காய்வதில்லை…
வீசும் புயல் காற்றடித்து…
வெள்ளி மலை சாய்வதில்லை…

ஆண் : சந்திரனைப் போல இங்கு…
சூரியனும் தேய்வதில்லை…
மானிடரைப் போல இங்கு…
காதல் என்றும் மாய்வதில்லை…

ஆண் : நேச மனம் சேர்ந்திருக்க…
காசு பணம் கேட்குமா…
பேசுகின்ற பேதம் எல்லாம்…
பாசங்களை தாக்குமா…

ஆண் : வாழலாம் கூட வா…
வாழலாம் கூட வா…
நாளெலாம் நான் சூடும் பூவே…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…

BGM

பெண் : உன்னை ஒரு நாள் மறந்து…
என் மனது வாழ்ந்ததில்லை…
உச்சரிக்கும் வார்த்தை எல்லாம்…
உன்னை அன்றி வேறு இல்லை…

பெண் : பொன்னை அள்ளி நான் கொடுக்க…
என்னிடத்தில் ஏதும் இல்லை…
என்னை அள்ளி நான் கொடுத்தேன்…
உன்னுடைய கைகளிலே…

பெண் : கண் இரண்டில் காதல் என்னும்…
கோட்டை கட்டி வாழ்கிறேன்…
ஊரறிய மாலை இட்டு…
உன் மடியில் சேர்கிறேன்…

பெண் : காலமே கூடலாம்…
காலமே கூடலாம்…
மார்பிலே நான் மஞ்சம் போட…

ஆண் : ஆலோலம் பாடும் தென்றலே…
பெண் : ஆகாயம் தேடும் திங்களே…

ஆண் : வட்ட வட்டப் பொட்டு வைத்து…
வண்ண வண்ணப் பூ முடிக்க வா… ஆ…

பெண் : சின்னச் சின்ன கன்னங்களில்…
உண்ணுகின்ற தேனெடுத்து வா… ஆ…

ஆண் & பெண் : ஆலோலம் பாடும் தென்றலே…
ஆகாயம் தேடும் திங்களே…


Notes : Aalolam Paadum Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Vaali. ஆலோலம் பாடும் பாடல் வரிகள்.


அதிசய நடமிடும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ராஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Athisaya Nadamidum Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

BGM

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

BGM

ஆண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன எனக்கென பிறந்தவளோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

BGM

ஆண் : நெஞ்சை அள்ளும் ஆடை கொண்ட தஞ்சை கோபுரம் நீ…
நேரில் வந்து தாகம் தீர்க்கும் தீர்த்தப் பாத்திரம்…

பெண் : வண்டு வந்து தங்கத்தானே வண்ணத்தாமரை…
ஓர் தண்டு கொண்டு நீரில் நிற்கும் உள்ள நாள் வரை…

ஆண் : அந்தி வெய்யில் சாயும்போது…
அன்பு வெள்ளம் பாயும்போது…
சிந்து ஒன்று பாட துணை நான் இல்லையோ…

பெண் : தொட்டு தொட்டு நீயும் கெஞ்ச…
விட்டு விட்டு நானும் கொஞ்ச…
கட்டில் ஒன்று போட மணநாள் இல்லையோ…

ஆண் : திருமணம் புரிவது என்று…
துடிக்கிது இளமனம் இன்று…
அதுவரை உணர்ச்சிகள் அடங்கிடுமோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

பெண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
இவளென்ன உனக்கென பிறந்தவளோ…

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

BGM

பெண் : கண்கள் என்ன நெஞ்சில் பாயும் காம பாணமோ…
உன் சொற்கள் என்ன போதை ஏற்றும் சோம பானமோ…

ஆண் : சின்னப்பெண்ணின் வார்த்தை என்ன சங்கப் பாடலோ…
நீ சிந்துகின்ற பார்வை என்ன ஸ்வர்க்க வாசலோ…

பெண் : என்றும் உள்ள சொந்தம் என்று…
ஏழு ஜென்ம பந்தம் என்று…
நெஞ்சில் கொண்ட நேசம் இது நீங்காதது…

ஆண் : அன்றில் ரெண்டு ஒன்றை ஒன்று…
அட்டைப்போல ஒட்டிக்கொண்டு…
இன்று காணும் இன்பம் நிறம் மாறாதது…

பெண் : வளருது வளருது மோகம்…
விளையுது விளையுது தாகம்…
இனி இந்த விழிகளில் உறக்கமுண்டோ…

ஆண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
பெண் : நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…

ஆண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…

பெண் : சுதியொடு லயங்களும் கூட…
சலங்கைகள் ஜதி ஸ்வரம் பாட…
ஆண் : இவளென்ன எனக்கென பிறந்தவளோ…

பெண் : அதிசய நடமிடும் அபிநய சரஸ்வதியோ…
ஆண் : நகை அரும்பிய திருமுகம் அழகிய முழுமதியோ…


Notes : Athisaya Nadamidum Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Vaali. அதிசய நடமிடும் பாடல் வரிகள்.


Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil

வாச கருவேப்பிலையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்அருண்மொழி & எஸ். ஜானகிஇளையராஜாசிறையில் பூத்த சின்ன மலர்

Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

BGM

ஆண் : நிலவு சேலை கட்டி நடக்குது பொண்ணா…
உலக அதிசயத்தில் இப்படி ஒண்ணா…

பெண் : நடந்தா தென்மதுரை பாண்டியன் போல…
நழுவுது பார்த்ததுமே இடுப்பில சேலை…

ஆண் : நன்றி கெட்ட சேலை…
அது வேணா விட்டுருடி…
கண்ணே உந்தன் சேலை…
இனி நான்தான் கட்டிக்கடி…

பெண் : எட்டி நில்லு சாமி…
நீ தொட்ட ஒட்டிகுவேன்…
தொட்டில் ஒன்னு போட…
ஒரு தோது பண்ணிக்குவேன்…

ஆண் : இப்போதே அம்மாவா நீ ஆனா…
என் பாடு என்னாகும் வாம்மா…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

BGM

ஆண் : ஒடம்போ தங்கத்தில வார்த்தது போல…
உதடும் முள்முருங்க பூத்தது போல…

பெண் : கருப்பு வைரத்தில செஞ்சது தேகம்…
கண்டதும் இளசுகெல்லாம் வந்திடும் மோகம்…

ஆண் : எந்த பொண்ணு கையும்…
என்னை இன்னும் தொட்டதில்ல…
இன்று மட்டும் கண்ணே…
நம்ம கற்பும் கெட்டதில்ல…

பெண் : கற்பு உள்ள ராசா…
நான் உன்ன மெச்சிக்குறேன்…
கட்டிகையா தாலி…
உன்ன நல்ல வச்சுகிறேன்…

ஆண் : கல்யாணம் கச்சேரி ஊர்கோலம்…
கையோடு கை சேர்த்து போவோம்…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…

ஆண் : வாசக் கருவேப்பில்லையே…
என் மாமன் பெத்த மல்லிகையே…

பெண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

ஆண் : ஊதக்குளிரு காத்து…
அது ஊசி குத்துற போது…
உன்ன நினைச்சு தூக்கம் போச்சு போச்சு…

பெண் : வாசக் கருவேப்பில்லையே…
என் அத்தை பெத்த மன்னவனே…


Notes : Vasa Karuveppilaiye Song Lyrics in Tamil. This Song from Sirayil Pootha Chinna Malar (1990). Song Lyrics penned by Pulamaipithan. வாச கருவேப்பிலையே பாடல் வரிகள்.