Category Archives: உயிரே உனக்காக

உயிரே உனக்காக – Uyire Unakkaga (1986)

கவிதைகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil


BGM

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

BGM

ஆண் : வெள்ளித் தேரில் வரும்…
நீ முல்லைப் பூவின் சரம்…
நான் அள்ளிக் கொள்ள சுகம்…
ஒர் ஆரம்பம் ஆகாதோ…

ஆண் : மாமன் வீட்டு மகள்…
நீ எந்தன் தோட்ட மலர்…
நான் உன்னை மீட்டும் வரை…
என் ஆசைகள் நூறாகும்…

பெண் : வானம் பூத்தூவி வாழ்த்தும் நேரம்…
காதல் உள்ளம் பாடல் பாடாதோ…
முகவரி தரும் வரை சுகவரி வேண்டுமா…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

ஆண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…

BGM

பெண் : கைகள் தொட்ட இடம்…
பூந்தென்றல் தொட்ட சுகம்…
உன் பார்வை பட்டால் சுடும்…
மேலாடைகள் தாங்காது…

பெண் : நெஞ்சில் மஞ்சம் தரும்…
நான் உந்தன் வஞ்சிக் கொடி…
நீ கொஞ்சம் காலம் பொறு…
உன் தேவைகள் ஈடேறும்…

ஆண் : அந்தி இரவோடு கொஞ்சும் வேளை…
கண்டு நின்றால் மோகம் கூடாதோ…
புதுமைகள் பழகிடும் ரதி மதன் இலவள் நான்…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
இளமைகள் மலரும் வழியிலே…

ஆண் : மனம் தேடும் உறவுகளே…
தினந்தோறும் நினைவுகளே…
இனி வரும் இரவிலே இளமையின் வேதமே…

பெண் : கவிதைகள் விரியும் விழியிலே…
கனவுகள் புரியும் மொழியிலே…
ஆண் : இளமைகள் மலரும் வழியிலே…

பெண் : தோளிலே பூங்கொடி…
பூவிடும் நாளே பொன்னாளாம்…

ஆண் : கவிதைகள்…
பெண் : விரியும் விழியிலே…

பெண் : கனவுகள்…
ஆண் : புரியும் மொழியிலே…

BGM


Notes : Kavi Thaigal Veeriyum Viziyele Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by M.G. Vallaban. கவிதைகள் பாடல் வரிகள்.


கையாலே உன்னை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு… ஹேய்…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

ஆண் : உயிரே உனக்காக எதையும் செய்வேனே…
உயிரை கேட்டாலும் அதையும் தருவேனே…

பெண் : ஏகாந்த நெஞ்சில் ஏக்கம் தோன்றும் போது…
ஏதேதோ பேசும் ஆண்கள் உள்ளம் நூறு…

ஆண் : இதழே உன்னோடு இனிமை காணாது…
இளமை தூங்காது இதயம் தாங்காது…

பெண் : நீ சொல்லும் வார்த்தை…
உண்மை ஆகும் என்றால்…
நான் சொல்லும் ஒன்றை…
நீயும் கேட்க வேண்டும்…
மங்கை எந்தன் பின்னால் சுற்றும்…
வேலை வேண்டாம் போய் வா…

ஆண் : ஆஹா… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

BGM

பெண் : வழியை மறிக்காதே…
கனியை ரசிக்காதே…
திருடும் மனதோடு இனிமேல் பார்க்காதே… ஆ…

ஆண் : பழத்தோட்டம் தன்னை பார்க்கும் இந்த வேளை…
பறிக்காமல் இங்கே போவதேது காளை…

பெண் : வழக்கம் மாற்றாதே…
வழக்கும் தொடுப்பேனே…
முதுகை புண்ணாக்க முடிவு எடுக்காதே…

ஆண் : அழகான பெண்கள் ஏசும்போதும் இன்பம்…
அடிக்கின்ற போதோ கோடி கோடி இன்பம்…
பெண்ணே இன்னும் என்னை கொஞ்சம் வைதால் என்ன…
பெண் : யே…

ஆண் : கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…

பெண் : உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன் சொல்லை கேட்டு…
நான் ஓடி வந்த பாட்டு…
உன்னை நம்பி இங்கே வந்தால்…
தொல்லை தானோ சொல்லு…

ஆண் : ஹே ஹே… கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…
கையாலே உன்னை தொட்டால் போதும்…
காதல் வெள்ளம் நெஞ்சில் மோதும்…


Notes : Kaiyale Unnai Thottal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Muthulingam. கையாலே உன்னை பாடல் வரிகள்.


தேனூறும் ராகம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Thenuram Ragam Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆரீராரோ ஆரிராரிரோ…
ஆரீராரோ ஆரிராரிரோ…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆடாத தீபந்தான் என் இல்லம்…
பூங்காற்றுக்கும் தாங்காது என் உள்ளம்…

பெண் : உன் அன்பாலே பொங்காதோ…
ஆனந்த வெள்ளம்…
கனவுகளே கனவுகளே இரவென்னும் தீபம்…
எரிகின்ற நேரம்…

பெண் : உறவைத் தேடி வாருங்கள்…
கண்களில் தென்றல் வீசும்…
கண்ணுறங்கு உன்னை நீயே மறந்துறங்கு…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
ஆரீராரோ ஆரிராரிரோ…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

BGM

பெண் : ஆகாயம் மண் மீது வீழாது…
நம் சொந்தங்கள் எந்நாளும் மாறாது…

பெண் : இனி என் போன்ற அன்னைக்கு…
ஏகாந்தம் ஏது…
உறவுகளால் ஒரு உலகம்…
இது ஒரு தோட்டம் கிளிகளின் கூட்டம்…

பெண் : ஆட்டம் பாட்டம் ஆர்பாட்டம் கேட்கலாம்…
அன்னை நெஞ்சில் சாய்ந்திடுங்கள்…
இன்னும் கொஞ்சம் ஓய்வெடுங்கள்…

பெண் : தேனூறும் ராகம்…
நான் பாடும் நேரம்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…

பெண் : உல்லாச மேகம் ஊர்கோலம் போகும்…
விண்மீன்கள் வானின் மேலே தூங்குதே…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…
கண்ணின் மணியே நீயும் உறங்கு…

பெண் : ஆரீராரோ… ம்ம்ம் ம்ம்ம் லால லலலா…


Notes : Thenuram Ragam Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. தேனூறும் ராகம் பாடல் வரிகள்.


பல்லவி இல்லாமல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம்லக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil


BGM

ஆண் : பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…
பல்லவி இல்லாமல் பாடுகிறேன்…
பாதை இல்லாமல் ஓடுகிறேன்…

ஆண் : ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
ஊமை காற்றாய் வீசுகிறேன்…
உறங்கும் போதும் பேசுகிறேன்…
இந்த ராகம் தாளம் எதற்காக…

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

BGM

ஆண் : உயிரே உனக்காக…
உயிரே உனக்காக…

BGM


Notes : Pallavi Ellamal Padukeran Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vairamuthu. பல்லவி இல்லாமல் பாடல் வரிகள்.


ஓடோடி விளையாடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி. வல்லபன்எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, தினேஷ் பாபு, பொன்னுசாமி & பத்மாலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Ododi Vilaiyaadu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓடோடி விளையாடு…
ஓடோடி விளையாடு…
பாடம்மா பாடம்மா…
என்னோடு பாடம்மா…
அத்தானும் கூடதான்…
எல்லோரும்… ஆஹா ஹோய்…

பெண் : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடம்மா என்னோடு…
பாடம்மா அத்தானும்…
கூடதான் எல்லோரும்… ஆஹா…

BGM

பெண் : மாமன் வீட்டு தோட்டமாம்…
மல்லிகை பூ கொட்டமாம்…

BGM

பெண் : நான் பறிக்க போனதும்…
நாய் குறைத்து வந்ததாம்…

BGM

பெண் : நாலு கல்லு மோதிரம்…
இந்த நாதனாருகோசரம் நாதனாருகோசரம்…
வாங்கி வச்சேன் திண்ணையிலே…
வந்து பாத்தா கண்ணாலே…
வந்து பாத்தா கண்ணாலே…

BGM

பெண் : அத்தை மாமா அத்தானும்…
சேர்ந்து பாடு எல்லோரும்…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடையா என்னோடு…
பாடையா சும்மா…
நீ பாடையா… ஹ்ம்ம் பாடு மாமா…

{ ஆண் : தங்கச்சி தங்கச்சி…
நானும் இங்கே உன் கட்சி…
ஆடி பாட முடியாது…
அம்பத்தாறு வயசாச்சு… } * (2)

BGM

பெண் : பாலு அண்ணா பாடனும்…
மீச மாமா கேட்கணும்…

BGM

பெண் : ஆசை அத்தான் பாடையிலே…
கேட்டு அக்கா ஆடனும்…

BGM

ஆண் : கஞ்சாகுட்டி காஞ்சனா…
கமருகட்டு வாங்கினா…
கமருகட்டு வாங்கினா…
கண்ணு ரெண்டும் மூடினா…
காக்கா கொத்தி போச்சுதாம்…
காக்கா கொத்தி போச்சுதாம்…

BGM

பெண் : அத்தை மாமா அத்தானும்…
சேர்ந்து பாடும் எல்லோரும்…

குழு : ஓடோடி விளையாடு…
ஓரமாக விளையாடு…
நேரம் காலம் பார்க்காம…
ஆடி பாடு விளையாடு…

பெண் : பாடம்மா என்னோடு…
பாடம்மா சும்மா நீ பாடம்மா…
ஹ்ம்ம் பாடு அத்தே… ஹ்ம்ம் ஹ்ம்ம்…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…
மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…

பெண் : தங்க கையாலே வீட்டில் தீபம்…
ஏற்ற வந்த தேவதையே…
உங்க கல்யாணம் காண தானே…
காத்திருக்கேன் பூ விழியே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

பெண் : இந்த அம்மாவின் நெஞ்சில்…
எத்தனை ஆசையிருக்கு ஆண்டவனே…
இங்கு எல்லோரும் நல்லா இருக்க வேண்டும்…
செந்தூர் வேலவனே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

பெண் : பெத்த தெல்லாம் மூணுதானே…
பிள்ளை சுகம் ஆறுதானே…
அண்ணன் கூட பிள்ளையானா…
ஆறு பேருக்கும் அன்னைதானே…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
எங்க கூட…
அம்மா பாடு சும்மா பாடு…
எங்க கூட…

குழு : மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…
மெல்ல பாடு மெல்ல பாடு…
அம்மா பாடு சும்மா பாடு…


Notes : Ododi Vilaiyaadu Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by M.G. Vallaban. ஓடோடி விளையாடு பாடல் வரிகள்.


பன்னீரில் நனைந்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். ஜானகிலக்ஷ்மிகாந்த் & பியாரேலால்உயிரே உனக்காக

Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil


BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…

BGM

பெண் : நானும் ஓர் தென்றல்தான்…
ஊரெல்லாம் சோலைதான்…
எங்குமே ஓடுவேன்…

பெண் : நதியிலே நீந்துவேன்…
மலர்களை ஏந்துவேன்…
எண்ணம் போல் வாழுவேன்…

பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
இளமைக் காலம் மிக இனிமையானது…
உலகம் யாவும் மிகப் புதுமையானது…

BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பார்த்து ரசிப்பேன்…

BGM

பெண் : மாளிகைச் சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே…
சுதந்திரம் இல்லையே…

பெண் : விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது…
பறந்தது கிள்ளையே…

பெண் : தந்தனத் தானா தந்தனத் தானனா…
நிலமும் நீரும் இந்த அழகுச் சோலையும்…
எளிமையான அந்த இறைவன் ஆலயம்…

BGM

பெண் : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…

பெண் : வசந்தம் வரும் காலம்…
விழியில் வண்ணக் கோலம்…
கூகூ குக்கு கூ கூகூ குக்கு கூ…
சத்தம் கொண்டு சந்தம் கண்டு பாட்டுப் பாடு குயிலே…

BGM

{ குழு : பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க…
பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க…
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க… } * (2)


Notes : Panneril Nanaintha Pookkal Song Lyrics in Tamil. This Song from Uyire Unakkaga (1986). Song Lyrics penned by Vaali. பன்னீரில் நனைந்த பாடல் வரிகள்.