Category Archives: உயர்ந்த உள்ளம்

உயர்ந்த உள்ளம் – Uyarndha Ullam (1985)

ஓட்ட சட்டிய

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉயர்ந்த உள்ளம்

Ottachattiya Vechikittu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : நீயும் நானும் ஒன்னாகணும்…
சம நீதி நியாயம் உண்டாகணும்…
சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
அட உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

குழு : ஐஸ்லக்கா ஐஸ்லக்கா ஐஸ்லக்கா ஐஸ்லக்கா…

BGM

ஆண் : கட்டில்கள் மெத்தைகள் மேல் மாடி…
எல்லாம் நான் பார்த்தேன்டா முன்னாடி…
அங்கெல்லாம் இல்லாத சந்தோசம்…
இங்கே நான் கண்டேனே இந்நேரம்…

ஆண் : மலர் மஞ்சம் போட்டு நான் படுத்தேன்டா நேத்து…
அதில் ஒரு நாளும் தூக்கம் வரல… ஹேய் ஹேய்…
தரை மேலேதானே இங்கு படுத்தேன்டா நானே…
அட இது போல இன்பம் இல்ல…

ஆண் : அட வீட்ட விட்டதும் வெளிய வந்தது தெரிஞ்சது…
ஊரு உலகம் இருக்கும் இருப்பு புரிஞ்சது…
தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
ஹே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
ததிகின தக்க தின்ன தின்ன…
உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…

BGM

ஆண் : முப்பாத்தம்மன்தானே தாயாட்டம்…
நாம் எல்லாம் அவ பெத்த சேயாட்டும்…
குப்பத்தில் இப்பதான் கொண்டாட்டம்…

ஆண் : காப்பாத்தும் ஆத்தா இரு கண்ணால பார்த்தா…
அட எந்நாளும் துன்பம் இல்ல…
கீழ் வர்க்கம் என்ன இதில் மேல் வர்க்கம் என்ன…
அட எல்லோரும் ஒரு தாய்பிள்ள…

ஆண் : குழந்தை குட்டிகள் இருக்க வேணும் அளவுல…
குடும்ப நடத்தை நினைக்க வேணும் மனசில…
தெரிஞ்சதா புரிஞ்சதா எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
உருட்டு தாளம் போடாதே…
பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு…
பழைய பாட்ட பாடாதே…

ஆண் : நீயும் நானும் ஒன்னாகணும்…
சம நீதி நியாயம் உண்டாகணும்…
சோறும் நீரும் எல்லாருக்கும்…
வந்து சேரந்தா பூமி நல்லாருக்கும்…
இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்…

ஆண் : ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…
உருட்டு தாளம் போடாதே…
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்…


Notes : Ottachattiya Vechikittu Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. ஓட்ட சட்டிய பாடல் வரிகள்.


காலை தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil


BGM

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…

BGM

பெண் : குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்…
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்…

பெண் : தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம்…
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே…
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே…

பெண் : இந்த இன்பம் இதம் பதம்…
இது ஒன்றே ஜீவிதம்…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…

BGM

பெண் : உறங்கும் மானுடனே உடனே வா வா…
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா…

பெண் : அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்…
காலையின் புதுமையை அறியவே இல்லை…
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை…

பெண் : இந்த இன்பம் கொள்ளை கொள்ளை…
நெஞ்சில் ஒரே பூ மழை…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…

பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம்…
ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…


Notes : Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. காலை தென்றல் பாடல் வரிகள்.


எங்கே என் ஜீவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகிஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Engey En Jeevaney Song Lyrics in Tamil


BGM

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

BGM

ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…

பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…

ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…

பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…

BGM

பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…

ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…

பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…

ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…

பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…

ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…


Notes : Engey En Jeevaney Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. எங்கே என் ஜீவனே பாடல் வரிகள்.


வந்தாள் மகாலக்ஷ்மியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉயர்ந்த உள்ளம்

Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil


ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என்றும் அவள் ஆட்சியே…

BGM

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே… ஆஆஆ…

BGM

ஆண் : பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…
பக்தனின் வீட்டோடு தங்கிவிட்டாள்…
பண்டிகை நாள் பார்த்து பொங்கலிட்டாள்…

ஆண் : காமாட்சியோ மீனாட்சியோ…
அபிராமியோ சிவகாமியோ…
அம்பிகை இங்கொரு கன்னிகை என்றொரு…
உருவம் எடுத்து உலவி நடந்து…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

BGM

ஆண் : நண்பா பெண்பாவை கண்வண்ணம்…
கள்ளம் இல்லாத பூவண்ணம்…
கண்டேன் சிங்கார கைவண்ணம்…
தொட்டால் எல்லாமே பொன்வண்ணம்…

ஆண் : பந்தம் சொந்தம் இல்லாமல்…
வந்தது இங்கொரு வண்ணமயில்…
வீடு வாசல் எல்லாமே…
மின்னுது மின்னுது புன்னகையில்…
மயங்கினேன்… சபாஷ்…

BGM

ஆண் : என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…
என் வழி நேராக ஆக்கி வைத்தாள்…
என்னையும் சீராக மாற்றி வைத்தாள்…

ஆண் : தெய்வீகமே பெண்ணானதோ…
நான் காணவே தேன் வந்ததோ…
மங்களம் பொங்கிடும் மந்திர புன்னகை…
இதழில் வடிய இனிமை விளைய…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

ஆண் : அடியேனின் குடி வாழ தனம் வாழ…
குடித்தனம் புக…

ஆண் : வந்தாள் மகாலக்ஷ்மியே…
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே…

BGM


Notes : Vanthal Mahalakshmiye Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. வந்தாள் மகாலக்ஷ்மியே பாடல் வரிகள்.