காலை தென்றல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலாஇளையராஜாஉயர்ந்த உள்ளம்

Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil


BGM

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…

BGM

பெண் : குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்…
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்…

பெண் : தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம்…
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே…
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே…

பெண் : இந்த இன்பம் இதம் பதம்…
இது ஒன்றே ஜீவிதம்…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…

BGM

பெண் : உறங்கும் மானுடனே உடனே வா வா…
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா…

பெண் : அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்…
காலையின் புதுமையை அறியவே இல்லை…
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை…

பெண் : இந்த இன்பம் கொள்ளை கொள்ளை…
நெஞ்சில் ஒரே பூ மழை…

பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…

பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம்…
ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…


Notes : Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. காலை தென்றல் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top