பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | பி. சுசீலா | இளையராஜா | உயர்ந்த உள்ளம் |
Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil
—BGM—
பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…
பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
—BGM—
பெண் : குயில்கள் மரக்கிளையில் சுரங்கள் சேர்க்கும்…
மலர்கள் பனித்துளியில் முகங்கள் பார்க்கும்…
பெண் : தினந்தோறும் புது கோலம் எழுதும் வானம்…
இரவிலே நட்சத்திரம் இருந்ததே எங்கே…
பனிதுளிகளாய் புல்வெளியில் விழுந்ததோ இங்கே…
பெண் : இந்த இன்பம் இதம் பதம்…
இது ஒன்றே ஜீவிதம்…
பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
—BGM—
பெண் : உறங்கும் மானுடனே உடனே வா வா…
போர்வை சிறையை விட்டு வெளியே வா வா…
பெண் : அதிகாலை உன்னை பார்த்து வணக்கம் சொல்லும்…
காலையின் புதுமையை அறியவே இல்லை…
இயற்கையின் பாஷைகள் புரியவே இல்லை…
பெண் : இந்த இன்பம் கொள்ளை கொள்ளை…
நெஞ்சில் ஒரே பூ மழை…
பெண் : காலை தென்றல் பாடி வரும்…
ராகம் ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
பறக்கவே தோன்றும் சிறகுகள் வேண்டும்…
சிறகுகள் வேண்டும்…
பெண் : காலை தென்றல் பாடி வரும் ராகம்…
ஒரு ராகம் ராகம் ஒரு ராகம்…
Notes : Kalaithendral Paadivarum Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. காலை தென்றல் பாடல் வரிகள்.