பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | கே.ஜே. யேசுதாஸ் & எஸ்.ஜானகி | இளையராஜா | உயர்ந்த உள்ளம் |
Engey En Jeevaney Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
—BGM—
ஆண் : கையில் தீபம் இருந்தும் நான்…
கண்ணில்லாமல் வாழ்ந்தேன்…
பெண் : கண்ணை தந்து உன்னை நான்…
அன்னை போல காப்பேன்…
ஆண் : வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
வாழ்க்கை என்னும் பள்ளியில்…
என்னை சேர்க்க வா…
பெண் : விழிகள் ரெண்டும் பள்ளிக்கூடம்…
தொடங்கு கண்ணா புதிய பாடம்…
ஆண் : மடியில் சாய்ந்து படிக்க வேண்டும்…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
ஆண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
பெண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் : என்னை தந்தேனே…
—BGM—
பெண் : முத்தம் போடும் வேளையில்…
சத்தம் ரொம்ப தொல்லை…
ஆண் : பூக்கள் பூக்கும் ஓசைகள்…
காதில் கேட்பதில்லை…
பெண் : காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
காம பாணம் பாய்வதால் காயமாகுமே…
ஆண் : கலசம் இங்கு கவசமாகும்…
காமன் அம்பு முறிந்துபோகும்…
பெண் : மலர்ந்த தேகம் சிவந்து போகும்…
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
என்னை தந்தேனே…
பெண் : தேரில் வந்த தெய்வமே…
தேவ பந்தமே…
ஆண் : எங்கே என் ஜீவனே உன்னில் கண்டேனே…
ஆண் & பெண் : என்னை தந்தேனே…
Notes : Engey En Jeevaney Song Lyrics in Tamil. This Song from Uyarndha Ullam (1985). Song Lyrics penned by Vaali. எங்கே என் ஜீவனே பாடல் வரிகள்.