Category Archives: முந்தானை முடிச்சு

முந்தானை முடிச்சு – Mundhanai Mudichu (1983)

வெளக்கு வச்ச

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. காமராசன்எஸ். ஜானகி & இளையராஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Velakku Vetcha Song Lyrics in Tamil


பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

BGM

ஆண் : உச்சி வெயில் சாயும் நேரம்…
உதட்டோரம் ஈரம் ஏறும்…

பெண் : பச்சைப் புல்லும் பாயா மாறும்…
பசியேக்கம் தானாத் தீரும்…

ஆண் : ஓர விழி பார்க்கும் பார்வை…
போதை ஏறுது…

பெண் : நூறு முறை சேர்ந்த போதும்…
ஆசை கூடுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…

BGM

ஆண் : நித்தம் புது ராகம் கண்டு…
நான் பாடும் பாடல் நூறு…

பெண் : நீ படிச்ச வேகம் கண்டு…
நிலை மாறும் தேகம் பாரு…

ஆண் : நீல மயில் தோகை சூடி…
ஜாகை தேடுது…

பெண் : ஜாதி மலர் தேனில் ஊற…
ஜாடை கூறுது…

ஆண் : பொழுதாச்சு விளையாட…
ஒரு வாடைக் காத்து சூடு ஏத்தும்…

ஆண் : வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானன்னா…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தரன்னான்னன்னா…

பெண் : நான் கொடுக்க அவன் குடிக்க…
அந்த நேரம் தேகம் சூடு ஏற…

பெண் : வெளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தான்…
மறைஞ்சு நின்னு பார்க்கையிலே தாகம் என்றான்…


Notes : Velakku Vetcha Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Na. Kamarasan. வெளக்கு வச்ச பாடல் வரிகள்.


அந்தி வரும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Andhi Varum Song Lyrics in Tamil


BGM

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததோரு ராகம்…

BGM

பெண் : மந்திரங்கள் ஒலித்தது…
மங்கை உடல் சிலிர்த்தது…
சங்கமத்தின் சுகம் நினைத்து…

BGM

ஆண் : சிந்து கவி பிறந்தது…
சிந்தனைகள் பறந்தது…
சந்தனத்து உடல் அணைத்து…

பெண் : இதழில் ஒரு ஓலை…
எழுதும் இந்த வேளை…

ஆண் : இளமை என்னும் சோலை…
முழுதும் இன்ப லீலை… ஹான்…

பெண் : நீராடுது மாந்தளிர் தேகம்…
போராடுது காதலின் வேகம்…
என்றென்றும் ஆனந்த யோகம்…

ஆண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM

ஆண் : இன்பத்துக்கு முகவுரை…
என்றுமில்லை முடிவுரை…
நீயிருக்க ஏது குறை…

BGM

பெண் : பாதம் முதல் தலை வரை…
பார்த்து நின்ற தலைவனை…
பாட வந்தேன் நூறு முறை…

ஆண் : அணைத்தால் தேவ லோகம்…
அருகே வந்து சேரும்…

பெண் : நினைத்தால் இங்கு யாவும்…
இனிமை என்று கூறும்…

ஆண் : ஆஹாஹ்… இது மார்கழி மாதம்…
அம்மாடியோ முன்பனி வீசும்…
சூடேற்றும் பூ முல்லை வாசம்…

பெண் : அந்தி வரும் நேரம் வந்ததொரு ராகம்…
ஆண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

ஆண் & பெண் : ஏதேதோ மோகம் இனி தீராதோ தாகம்…

BGM


Notes : Andhi Varum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. அந்தி வரும் பாடல் வரிகள்.


வா வா வாத்தியாரே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாமுந்தானை முடிச்சு

Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil


BGM

பெண் : வா வா… வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

ஆண் : அடடாடா வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

BGM

ஆண் : தங்க நிறம் இடுப்புல தாமரப்பூ சிரிப்புல…
சிக்கிகிட்டு ஆடுதடி இந்த மனசு…

BGM

பெண் : சம்மதிச்சேன் மறுக்கல சத்தியமா வெறுக்கல…
உன்ன எண்ணி ஏங்குது இந்த வயசு…

ஆண் : ஏய்… வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
பெண் : ஹோய்…
ஆண் : கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…
பெண் : ஹான்…

பெண் : வெட்ட வெளி புல்லுதான் கட்டில் எதுக்கு…
கொட்டி வச்ச மல்லிகை மெத்த இருக்கு…

ஆண் : ஏய்… தொட்டுக்குவோம் ஒட்டிக்குவோம்…
தூக்கத்துல கட்டிக்குவோம்…
யாரு நம்ம கேக்குறது ஜாடையில பாக்குறது…

பெண் : வா வா… வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு… ஹோய்…

BGM

பெண் : ஆசைக்கொரு வேலி இல்லை…
அங்க நின்னா ஜாலி இல்லை…
இப்போ வேற வேலை இல்ல ரெண்டு பேருக்கும்…

BGM

ஆண் : ஆத்தங்கரை ஓரத்துல யாருமில்லா நேரத்துல…
கண்டு விட வேணுமடி அந்த நெருக்கம்…

பெண் : மன்மதனும் இருப்பான் உன்னிறத்திலே…
உன் மகனும் பொறப்பான் என் வயத்துலே…

ஆண் : ஹா… மன்மதனும் இருப்பான் என்னிறத்திலே…
என் மகனும் பொறப்பான் உன் வயத்துலே…

பெண் : ஆதி முதல் அந்தம் வர பாக்க இங்கு வந்தவரை…
ஆதரிக்க ஆசை உண்டு ஆனந்தமும் கோடி உண்டு…

ஆண் : வா வா அடி ஆத்தி ஆத்தி…
வஞ்சிக்கொடி என் கொஞ்சும் கிளி…
உன் இஸ்டப்படி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

பெண் : வா வா வா வாத்தியாரே வா…
வஞ்சிக்கொடி உன்கொஞ்சும் கிளி…
உன் இஸ்டபடி என்னை கட்டிப்புடி…
அட நீயாச்சி நானாச்சு…

குழு : தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…
தன தன்னானனா தன தன்னானனா…
தன தன்னான தனானா…


Notes : Vaa Vaa Vaathiyare Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. வா வா வாத்தியாரே பாடல் வரிகள்.


கண்ண தொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகி & மலேசியா வாசுதேவன்இளையராஜாமுந்தானை முடிச்சு

Kanna Thorakanum Song Lyrics in Tamil


பெண் : ஆரீராரிரோ ஆரீராரிரோ…
ஆரீரோ ஆராரோ ஆரிராரோ…

BGM

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…
கண்ண தொறக்கணும் சாமி…
கைய புடிக்கணும் சாமி…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…

BGM

பெண் : சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

BGM

பெண் : வாலிபம் வாடுமே வாடையும் கூடுமே…
சாமிய கூடினா சங்கடம் ஓடுமே…

பெண் : தயக்கம் ஆகாது தாமதம் கூடாது…
தேகம்தான் வாடுது வாங்களேன்…

பெண் : அருள் தரும் திருக்கடலே…
அரிக்குது என் உடலே…
மோகம் தீர மோட்சம் தாராயோ…

ஆண் : வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

ஆண் : ஏய் வேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஆ…
ஆண் : வாங்காத என்னோட சாபம் ஏய்…

ஆண் : கலையாது எந்தவம் அடியே…
இறங்காது பாய்மர கொடியே…

ஆண் : ஹேய்… வேணாண்டி ஆம்பளை பாவம்…
வாங்காத என்னோட சாபம்…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…

BGM

பெண் : முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

BGM

பெண் : மெத்த நான் போடுறேன் பித்தனே ஓடிவா…
முத்தமே மாலையாய் மொத்தமா சூட வா…

ஆண் : ஹேய் பக்தி மாறாது பஜனையும் நிக்காது…
என் தேகம் தீண்டாதே மயிலே…

பெண் : புடிச்சது புடிச்சதுதான்… ஏய் ஏய் ஏய் ஏய்…
புரிஞ்சிக்க என் குணம்தான்…

ஆண் : பாதை மாறி போக மாட்டேண்டீ…
பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…

ஆண் : அடிவேணாண்டி ஆம்பளை பாவம்…
பெண் : ஹா…
ஆண் : வாங்காத என்னோட சாபம்…

பெண் : இது வானம் பாக்குற பூமி…
வந்து சேர்ந்து விளச்சல காமி…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி…
ஆண் : ஹைய்யோ…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : எம்மா…

பெண் : கண்ண தொறக்கணும் சாமி …
ஆண் : ம்ம்ஹும்…
பெண் : கைய புடிக்கணும் சாமி…
ஆண் : அய்யோ…


Notes : Kanna Thorakanum Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Gangai Amaran. கண்ண தொறக்கணும் பாடல் வரிகள்.


சின்னஞ்சிறு கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாமுந்தானை முடிச்சு

Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil


பெண் : ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…
ஆரிராரிரோ ஆரிராரிரோ…

BGM

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
அன்னை மணம் ஏங்கும் தந்தை மணம் தூங்கும்…
நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

பெண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

பெண் : சுகமே நினத்து சுயம்வரம் தேடி…
உடனே தவிக்கும் துயரங்கள் கோடி…
மழை நீர் மேகம் விழிகளில் மேவும்…

பெண் : இந்த நிலை மாறுமோ…
அன்பு வழி சேருமோ…
கண்கலங்கி பாடும் எனது பாசம் உனக்கு வேஷமோ…
வாழ்ந்தது போதுமடா வாழ்க்கை இனியேன்…

பெண் : சின்னஞ்சிறு…
ஆண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
வேதனை பாரடா வேடிக்கை தானடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…

BGM

ஆண் : மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை…
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை…
என்னை நீ தேடி இணைந்தது பாவம்…
எல்லாம் நீயே எழுதிய கோலம்…

ஆண் : இந்த நிலை காணும் பொழுது…
நானும் அழுது வாழ்கிறேன்…
காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ… ஓஓ…

பெண் : சின்னஞ்சிறு கிளியே சித்திரப்பூவிழியே…
ஆண் : உன்னை எண்ணி நானும் உள்ளம் தடுமாறும்…
பெண் : நாடகம் ஏனடா நியாயத்தை கேளடா…

ஆண் : சின்னஞ்சிறு கிளியே…
பெண் : சித்திரப்பூவிழியே…


Notes : Chinnanjiru Kiliyae Song Lyrics in Tamil. This Song from Mundhanai Mudichu (1983). Song Lyrics penned by Muthulingam. சின்னஞ்சிறு கிளியே பாடல் வரிகள்.