பெண் : புத்தம் புது காலை… பொன்னிற வேளை… என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்… சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
பெண் : புத்தம் புது காலை… பொன்னிற வேளை…
—BGM—
பெண் : பூவில் தோன்றும் வாசம்… அதுதான் ராகமோ… இளம் பூவை நெஞ்சில் தோன்றும்… அதுதான் தாளமோ…
பெண் : மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்… குயிலோசையின் பரிபாஷைகள்… அதிகாலையின் வரவேற்புகள்…
பெண் : புத்தம் புது காலை… பொன்னிற வேளை…
—BGM—
பெண் : வானில் தோன்றும் கோலம்… அதை யார் போட்டதோ… பனி வாடை வீசும் காற்றில்… சுகம் யார் சேர்த்ததோ…
பெண் : வயதில் தோன்றிடும்… நினைவில் ஆனந்தம்… வளர்ந்தோடுது இசைபாடுது… வலி கூடிடும் சுவைகூடுது…
பெண் : புத்தம் புது காலை… பொன்னிற வேளை… என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்… சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…
—BGM—
Notes : Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Gangai Amaran. புத்தம் புது காலை பாடல் வரிகள்.
குழு : ஆறு கடல் வத்தி அடங்கும்… எங்க அக்கா மக வாய் தொறந்தா… ஆறு பொன்னி கொட்டம் அடங்கும்… ஓஓ…
பெண் : வாடி என் கப்பக்கிழங்கே… எங்கக்கா பெத்த முக்கா துட்டே… பாடாதே வாய தொறந்து…
—BGM—
ஆண் : கழுத கூட நல்லா பாடும்… கேட்டு பாரு உனக்கு புரியும்…
பெண் : அதுக்கு கூட இவங்க பாட… கத்துக்கொடுக்கும் வாத்தியாரு…
ஆண் : இவங்க பாடுனா நல்லா இல்ல… கேட்டு பாருடா கழுத தேவல… அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்… ஞானம் வேணும் ஞானம் வேணும்… டோய் யா…
ஆண் : ஹாங்… ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்… டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க…
—BGM—
ஆண் : ஒரு கழுத… ஒரு கழுத வயசாச்சி… மரியாத துளி கூட கொடுக்காதது… மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு… ஹே…
பெண் : ஸ்டுப்பிட்…
குழு : ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா… தாமர பப்பா தித்ததப்பா…
ஆண் : ஏபிசீடி கொப்பன் தாடி… டோய்… ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…
குழு : ஏபிசீடி கொப்பன் தாடி டோய்… நீ வந்தா வாடி வராட்டி போடி… ஈ அடிச்சான் காப்பி அடி டோய்…
ஆண் : வாடி அடி வாடி…
குழு : வாடி என் கப்பக்கிழங்கே… எங்கக்கா பெத்த முக்கா துட்டே… பாடாதே வாய தொறந்து…
ஆண் : அடி கூடு கட்டுற குயிலே… புது மேட கட்டுர மயிலே… அடி வேப்ப மரத்து வெயிலே… பல வேஷம் கட்டுர ஒயிலே…
ஆண்: உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது…
குழு : வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்கா துட்டே… பாடாதே வாய தொறந்து… ஹோய்…
Notes : Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Gangai Amaran. வாடி என் கப்பக்கிழங்கு பாடல் வரிகள்.
பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச… ம ம ப ப ப ப க ம ப க ம க ச… நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப… ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச… ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச… ம ம ப ப ப ப க ம ப க…
ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே… இரவும் பகலும் உரசிக் கொள்ளும்… அந்திப் பொழுதினில் வந்துவிடு…
பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்… உயிரைத் திருப்பித் தந்து விடு…
—BGM—
பெண் : தனன நனன நனன நனன… நனன நனன நனனா…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே… இரவும் பகலும் உரசிக் கொள்ளும்… அந்திப் பொழுதினில் வந்துவிடு… அலைகள் உரசும் கரையில் இருப்பேன்… உயிரைத் திருப்பித் தந்து விடு…
பெண் : தனன நனன நனன நனன… நனன நனன நனனா…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…
பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை… வீதியில் கேட்டால்… ஆ ஆ ஆ ஆ… உன் வெள்ளிக் கொலுசொலியை… வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்… நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு… அத்தனை திசையும் உதிக்கும்…
பெண் : நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்… ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்… நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்… பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே… விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…
பெண் : கல்வி கற்க காலை செல்ல… அண்ணன் ஆணையிட்டான்… காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை… கரையில் தூக்கிப் போட்டான்…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து… உயிரில் கலந்த உறவே…
பெண் : இரவும் பகலும் உரசிக் கொள்ளும்… அந்திப் பொழுதின் போது… அலையின் கரையில் காத்திருப்பேன்… அழுத விழிகளோடு…
பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது… இதழ் கொடுக்கும் முத்தம்… உனக்கு மட்டும் கேட்கும் எனது… உயிர் உருகும் சத்தம்…
Notes : Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. விழியில் விழுந்து பாடல் வரிகள்.
பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்… தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்… என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஆண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்… தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்… என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…
—BGM—
ஆண் : தேடினேன் ஓ என் ஜீவனே… தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…
பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்… அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்…
ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்… பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்… ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்… பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…
—BGM—
பெண் : தாங்குமோ ஓ என் தேகமே… மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே…
ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே… உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்…
பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்… ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்… பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்… ஆண் : ஓஓ…
ஆண் & பெண் : லாலாலாலலா… லாலாலாலலா… ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
Notes : Kadhal Oviyam Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் ஓவியம் பாடல் வரிகள்.