Category Archives: அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை – Alaigal Oivathillai (1981)

புத்தம் புது காலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். ஜானகிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : பூவில் தோன்றும் வாசம்…
அதுதான் ராகமோ…
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்…
அதுதான் தாளமோ…

பெண் : மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்…
குயிலோசையின் பரிபாஷைகள்…
அதிகாலையின் வரவேற்புகள்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : வானில் தோன்றும் கோலம்…
அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்…
சுகம் யார் சேர்த்ததோ…

பெண் : வயதில் தோன்றிடும்…
நினைவில் ஆனந்தம்…
வளர்ந்தோடுது இசைபாடுது…
வலி கூடிடும் சுவைகூடுது…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

BGM


Notes : Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Gangai Amaran. புத்தம் புது காலை பாடல் வரிகள்.


வாடி என் கப்பக்கிழங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜா, கங்கை அமரன், பாஸ்கரன் & ஜென்சி அந்தோணிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil


ஆண் : ஆஹான்… ஆஹா வாடி என் கப்பக்கிழங்கே…
குழு : ஆ ஆ ஆஹா…

ஆண் : எங்க அக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி வாடி… அடி வாடி…
அடி வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே ஹே ஹே…

BGM

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே…
புது மேட கட்டுற மயிலே…

ஆண் : அடி வேப்ப மரத்து வெயிலே…
பல வேஷம் கட்டுற ஒயிலே…

ஆண் : உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹே…

BGM

பெண் : சரசுவதி இவளோட திருவாயில்…
திருவாயில் குடியேறி இருக்காங்கடா…
மட பசங்க இவ படிச்சா அவ தவிப்பா…

ஆண் : ஆறு கடல் வத்தி அடங்கும்…
ஹே ஹே ஹே ஹே ஹே…

குழு : ஆறு கடல் வத்தி அடங்கும்…
எங்க அக்கா மக வாய் தொறந்தா…
ஆறு பொன்னி கொட்டம் அடங்கும்… ஓஓ…

பெண் : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

BGM

ஆண் : கழுத கூட நல்லா பாடும்…
கேட்டு பாரு உனக்கு புரியும்…

பெண் : அதுக்கு கூட இவங்க பாட…
கத்துக்கொடுக்கும் வாத்தியாரு…

ஆண் : இவங்க பாடுனா நல்லா இல்ல…
கேட்டு பாருடா கழுத தேவல…
அட அதுக்கெல்லாம் ஞானம் வேணும்…
ஞானம் வேணும் ஞானம் வேணும்… டோய் யா…

ஆண் : ஹாங்… ஞானமா அட நம்ம ஞானபிரகாசம்…
டேய் ஞானபிரகாசம் இங்கே ஓடி வாடா கூப்பிட்றாங்க…

BGM

ஆண் : ஒரு கழுத… ஒரு கழுத வயசாச்சி…
மரியாத துளி கூட கொடுக்காதது…
மனசுக்குள்ளே மலை அளவு திமிர் இருக்கு… ஹே…

பெண் : ஸ்டுப்பிட்…

குழு : ஆ கக்கரபப்பா சிப்பாரப்பா…
தாமர பப்பா தித்ததப்பா…

ஆண் : ஏபிசீடி கொப்பன் தாடி… டோய்…
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்…

குழு : ஏபிசீடி கொப்பன் தாடி டோய்…
நீ வந்தா வாடி வராட்டி போடி…
ஈ அடிச்சான் காப்பி அடி டோய்…

ஆண் : வாடி அடி வாடி…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்கக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து…

ஆண் : அடி கூடு கட்டுற குயிலே…
புது மேட கட்டுர மயிலே…
அடி வேப்ப மரத்து வெயிலே…
பல வேஷம் கட்டுர ஒயிலே…

ஆண்: உன்னை கண்டதும் நெஞ்சில நிம்மதி வந்தது…

குழு : வாடி என் கப்பக்கிழங்கே…
எங்க அக்கா பெத்த முக்கா துட்டே…
பாடாதே வாய தொறந்து… ஹோய்…


Notes : Vaadi En Kappa Kelange Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Gangai Amaran. வாடி என் கப்பக்கிழங்கு பாடல் வரிகள்.


விழியில் விழுந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஇளையராஜா & பி.எஸ்.சசிரேகாஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil


பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச…
ம ம ப ப ப ப க ம ப க ம க ச…
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ம ம ப ப ப ப க ம ப க…

ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…

பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…

BGM

பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…

பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

ஆண் : தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதோம் தகதோம்…

BGM

பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால்… ஆ ஆ ஆ ஆ…
உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்…
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு…
அத்தனை திசையும் உதிக்கும்…

பெண் : நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்…
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்…
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்…
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

பெண் : கல்வி கற்க காலை செல்ல…
அண்ணன் ஆணையிட்டான்…
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை…
கரையில் தூக்கிப் போட்டான்…

பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…

பெண் : இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதின் போது…
அலையின் கரையில் காத்திருப்பேன்…
அழுத விழிகளோடு…

பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது…
இதழ் கொடுக்கும் முத்தம்…
உனக்கு மட்டும் கேட்கும் எனது…
உயிர் உருகும் சத்தம்…


Notes : Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. விழியில் விழுந்து பாடல் வரிகள்.


ஆயிரம் தாமரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Aayiram Thamarai Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

BGM

ஆண் : ஓஓஓ… கொத்து மலரே அமுதம் கொட்டும் மலரே…
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று…

பெண் : ஆஆ ஆஆ… கொத்துமலரே அமுதம் கொட்டும் மலரே…
இங்கு தேனை ஊற்று இது தீயின் ஊற்று…

ஆண் : உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்…
பெண் : புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்…
ஆண் : அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…
ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

BGM

ஆண் : ஹே… வீட்டுக்கிளியே கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே…
ஒரு காதல் பாரம் இரு தோளில் ஏறும்…

பெண் : புல்வெளியின் மீது ரெண்டு பூ மாலை…
ஒன்றை ஒன்று சூடும் இது பொன் மேடை…

ஆண் : கல் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்…

குழு : ஆயிரம் தாமரை…
பெண் : நன நன…
குழு : ஆயிரம் தாமரை…
பெண் : நனநனநன நனநனநன நனநனநன…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…

பெண் : இங்கிரண்டு ஜாதி மல்லிகை…
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை…
கோவிலில் காதல் தொழுகை…

குழு : ஆயிரம் தாமரை மொட்டுகளே…
வந்து ஆனந்த கும்மிகள் கொட்டுங்களே…


Notes : Aayiram Thamarai Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. ஆயிரம் தாமரை பாடல் வரிகள்.


காதல் ஓவியம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்இளையராஜா & ஜென்சி அந்தோனிஇளையராஜாஅலைகள் ஓய்வதில்லை

Kadhal Oviyam Song Lyrics in Tamil


குழு : ஓம் சதபானம் பவதி சதாயொப் புருஷ ஷதேந்த்ரியா…
ஆயுட்ஷே வேந்ரியே ப்ரதிதிஷ்டதி…

BGM

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

ஆண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…
தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…

பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

ஆண் : தேடினேன் ஓ என் ஜீவனே…
தென்றலிலே மிதந்து வரும் தேன்மலரே…

பெண் : நீ என் நாயகன் காதல் பாடகன்…
அன்பில் ஓடி இன்பம் கோடி என்றும் காணலாம்…

ஆண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
பெண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
ஆண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
பெண் : ஓ… காதல் ஓவியம் பாடும் காவியம்…

BGM

பெண் : தாங்குமோ ஓ என் தேகமே…
மன்மதனின் மலர் கணைகள் தோள்களிலே…

ஆண் : மோகம் தீரவே வா என் அருகிலே…
உள்ளம் கோயில் கண்கள் தீபம் பூஜை காணலாம்…

பெண் : காதல் ஓவியம் பாடும் காவியம்…
ஆண் : தேன் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜியம்…
பெண் : என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம்…
ஆண் : ஓஓ…

ஆண் & பெண் : லாலாலாலலா… லாலாலாலலா…
ஹ்ம்ம் ம்ம் ம்ம்… ஹ்ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Kadhal Oviyam Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Panchu Arunachalam. காதல் ஓவியம் பாடல் வரிகள்.