பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | இளையராஜா & பி.எஸ்.சசிரேகா | இளையராஜா | அலைகள் ஓய்வதில்லை |
Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil
பெண் : ச த ம ப நி ச ச நி ப ம த ச…
ம ம ப ப ப ப க ம ப க ம க ச…
நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச…
ம ம ப ப ப ப க ம ப க…
ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…
—BGM—
பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதினில் வந்துவிடு…
அலைகள் உரசும் கரையில் இருப்பேன்…
உயிரைத் திருப்பித் தந்து விடு…
பெண் : தனன நனன நனன நனன…
நனன நனன நனனா…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
ஆண் : தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதகதகதக தோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
தகதோம் தகதோம் தகதோம்…
—BGM—
பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால்… ஆ ஆ ஆ ஆ…
உன் வெள்ளிக் கொலுசொலியை…
வீதியில் கேட்டால் அத்தனை ஜன்னலும் திறக்கும்…
நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு…
அத்தனை திசையும் உதிக்கும்…
பெண் : நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்…
ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்…
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்…
பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
பெண் : கல்வி கற்க காலை செல்ல…
அண்ணன் ஆணையிட்டான்…
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றை…
கரையில் தூக்கிப் போட்டான்…
பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து…
உயிரில் கலந்த உறவே…
பெண் : இரவும் பகலும் உரசிக் கொள்ளும்…
அந்திப் பொழுதின் போது…
அலையின் கரையில் காத்திருப்பேன்…
அழுத விழிகளோடு…
பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது…
இதழ் கொடுக்கும் முத்தம்…
உனக்கு மட்டும் கேட்கும் எனது…
உயிர் உருகும் சத்தம்…
Notes : Vizhiyil Vizhundhu Song Lyrics in Tamil. This Song from Alaigal Oivathillai (1981). Song Lyrics penned by Vairamuthu. விழியில் விழுந்து பாடல் வரிகள்.