Category Archives: பொல்லாதவன் (1980)

சின்னக் கண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி. சுசீலாஎம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Chinnakkannane Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…
சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…

பெண் : இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

BGM

பெண் : கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…
கோபம் உண்டாகலாமா…
கண்ணே குழந்தை தெய்வங்கள் அன்றோ…

பெண் : அந்த கோவில் வாசலில் பிள்ளை தீபம் அல்லவோ…
நல்ல ஆசை பாசமே மணியோசை அல்லவோ…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

BGM

பெண் : அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…
அணைக்கும் அன்பான கைகள்…
அங்கே சொந்தம் கொண்டாட வேண்டும்…

பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…

பெண் : வரும் நாளை வாழ்விலே…
உயர் மேன்மை காணலாம்…
நல்ல காலம் தோன்றினால்…
இந்த உலகை வெல்லலாம்…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…

பெண் : நீ தங்கம் போலே அழகு…
நீ எங்கள் வானில் நிலவு…
இளம் தாமரைப் பூவே விளையாடு…
காவிரி போலே கவி பாடு…

பெண் : சின்னக் கண்ணே சித்திரக் கண்ணே கேளம்மா…
உன்னைக் காக்கும் அம்மா என்னைப் பாரம்மா…


Notes : Chinnakkannane Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. சின்னக் கண்ணே பாடல் வரிகள்.


நானே என்றும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Naanae Endrum Raja Song Lyrics in Tamil


BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : கண்ணை கட்டி என்னை காட்டில்விட்டால்…
அங்கே கல்லை மெத்தை ஆக்கி கொள்ளும் வன்மை உண்டு…
சேலை கட்டும் இந்த பெண்ணை கண்டு…
அஞ்சும் கோழை அல்ல பேதை அல்ல வீரம் உண்டு…

ஆண் : பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…
பூப் போல கையை கொண்டு…
போனாலே நன்மை உண்டு…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா…
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : மண்ணை கொண்டு சின்ன வீட்டை கட்டி…
அங்கே மாடி மெத்தை கட்டில் போடும் மாயம் என்ன…
வானை கீரி அந்த வைகுண்டத்தை…
இந்த ஊனக் கண்ணில் காட்டும் உந்தன் லீலை என்ன…

ஆண் : தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…
தள்ளாடும் பேதை பெண்ணே…
வெள்ளாடு வேங்கை அல்ல…

ஆண் : நானே என்றும் ராஜா…
ஆனால் முள்ளில் ரோஜா
ஒண்ணா ரெண்டா எந்தன் பாதை…
பெண்ணா என்னை வெல்ல கூடும்…

BGM


Notes : Naanae Endrum Raja Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நானே என்றும் பாடல் வரிகள்.


அதோ வாரான்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & வாணி ஜெயராம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Atho Vaarandi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

BGM

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…

BGM

பெண் : நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…
நான் உங்கள் பக்கத்தில் வந்தேனென்றால்…
மாதங்கள் பனிரெண்டும் குளிரல்லவா…

பெண் : மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…
மேகங்கள் இல்லாத வானில்லையே…
நீயின்றி எப்போதும் நானில்லையே…

பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
அம்மம்மா ஏதேதோ சொன்னானம்மா…

BGM

ஆண் : வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…
வாழைப்பூ பெண்ணாக வடிவானதோ…
வாடைக்கு சுகமாக வருகின்றதோ…

ஆண் : எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…
எந்நாளும் உன் மேனி பொன்னல்லவா…
எழுதாத கதை சொல்லும் கண்ணல்லவா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

ஆண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…

BGM

பெண் : சிப்பிக்குள் முத்துக்கள் நான் பார்க்கவா…
சிந்தாத முத்தங்கள் நான் கேட்கவா…

ஆண் : எப்போது கேட்டாலும் தருவேனம்மா…
எங்கே நீ இருந்தாலும் வருவேனம்மா…

ஆண் : ஒண்ணோடு ஒண்ணாக…
கண்ணோடு கண்ணாக…

பெண் : அதோ வாரான்டி வாரான்டி…
வில்லேந்தி ஒருத்தன்…
என் மீது எய்தானம்மா…
ஆண் : அம்மாம்மா ஏதேதோ சொன்னானம்மா…

பெண் : ஒண்ணோடு ஒண்ணாக…
ஆண் : கண்ணோடு கண்ணாக…


Notes : Atho Vaarandi Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. அதோ வாரான்டி பாடல் வரிகள்.


Naan Pollathavan Song Lyrics in Tamil

நான் பொல்லாதவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்எஸ். பி. பாலசுப்ரமணியம்எம்.எஸ்.விஸ்வநாதன்பொல்லாதவன் (1980)

Naan Pollathavan Song Lyrics in Tamil


BGM

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…

BGM

ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…

ஆண் : ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்…
நான் என்ன செய்வேனடி…

ஆண் : நானுண்டு வீடுண்டு…
நாடுண்டு வாழ்வுண்டு…
என்றேதான் வாழ்ந்தேனடி…

ஆண் : நாளாக நாளாக தாளாத கோபத்தில்…
நான் வேங்கை ஆனேனடி…

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…

BGM

ஆண் : நீ என்ன நான் என்ன…
நிஜம் என்ன பொய் என்ன…
சந்தர்ப்பம் பெரிதாம்மடி…

ஆண் : ஏதேதோ நடக்கட்டும்…
எங்கேயோ கிடக்கட்டும்…
எனக்கென்ன உனக்கென்னடி…

ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்…
உலகத்தில் கிடையாதடி…
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக…
இது போல ஆனேனடி…

ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…

ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…

ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…

ஆண் : டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி…
பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே…

BGM


Notes : Naan Pollathavan Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நான் பொல்லாதவன் பாடல் வரிகள்.