| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| கண்ணதாசன் | எஸ். பி. பாலசுப்ரமணியம் | எம்.எஸ்.விஸ்வநாதன் | பொல்லாதவன் (1980) |
Naan Pollathavan Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…
—BGM—
ஆண் : வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…
வானத்தில் வல்லூறு வந்தாலே கோழிக்கும்…
வீரத்தை கண்டேனடி…
ஆண் : ஞானத்தை பாதிக்கும் மானத்தை சோதித்தால்…
நான் என்ன செய்வேனடி…
ஆண் : நானுண்டு வீடுண்டு…
நாடுண்டு வாழ்வுண்டு…
என்றேதான் வாழ்ந்தேனடி…
ஆண் : நாளாக நாளாக தாளாத கோபத்தில்…
நான் வேங்கை ஆனேனடி…
ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்… ஹ்ம்ம் ஆ…
—BGM—
ஆண் : நீ என்ன நான் என்ன…
நிஜம் என்ன பொய் என்ன…
சந்தர்ப்பம் பெரிதாம்மடி…
ஆண் : ஏதேதோ நடக்கட்டும்…
எங்கேயோ கிடக்கட்டும்…
எனக்கென்ன உனக்கென்னடி…
ஆண் : எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்போர்கள்…
உலகத்தில் கிடையாதடி…
இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக…
இது போல ஆனேனடி…
ஆண் : நான் பொல்லாதவன்…
பொய் சொல்லாதவன்…
ஆண் : என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்…
வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்…
ஆண் : கை கட்டி வாய்மூடி யார் முன்னும்…
நான் நின்று ஆதாயம் தேடாதவன்…
அந்த ஆகாயம் போல் வாழ்பவன்…
ஆண் : டன் டன் ட ட ட ட ட டஹ் பிபரி பிபரி பிபரி…
பஹ் பஹ் ப ப ப ப ப பஹ் பிபரி பிபரி அஹே…
—BGM—
Notes : Naan Pollathavan Song Lyrics in Tamil. This Song from Polladhavan (1980). Song Lyrics penned by Kannadasan. நான் பொல்லாதவன் பாடல் வரிகள்.
