கல்யாண மாலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாபுது புது அர்த்தங்கள்

Kalyanamalai Song Lyrics in Tamil


BGM

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM

ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்…
ஆனாலும் அன்பு மாறாதது…
மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்…
பிரிவென்னும் சொல்லே அறியாதது…

ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி…
அமைந்தாலே பேரின்பமே…
மடிமீது துயில சரசங்கள் பயில…
மோகங்கள் ஆரம்பமே…

ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி…
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி…
சந்தோஷ சாம்ராஜ்யமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM

ஆண் : கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து…
பாடென்று சொன்னால் பாடாதம்மா…
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி…
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா…

ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்…
காவல்கள் எனக்கில்லையே…
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்…
சிரிக்காத நாளில்லையே…

ஆண் : துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்…
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே…
என் சோகம் என்னோடுதான்…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…
சுருதியோடு லயம் போலவே…
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே…

ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே…
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

BGM


Notes : Kalyanamalai Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. கல்யாண மாலை பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top