குருவாயூரப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாபுது புது அர்த்தங்கள்

Guruvayurappa Song Lyrics in Tamil


BGM

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

BGM

ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்…
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்…

பெண் : தினம் தோறும் இரவில்…
நடு ஜாமம் வரையில்…
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்…

ஆண் : அரங்கேற்றம்தான் ஆகாமல்தான்…
அலைபாயும் என் ஜீவன்தான்…

பெண் : வா வா என் தேவா செம்பூவா…
என் தேகம் சேராதோ உன் கைகளிலே…

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

BGM

பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்…
என் மேல் ஒரு போர் தொடுக்க…

ஆண் : எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு…
மானே வா உனை யார் தடுக்க…

பெண் : பரிமாறலாம் பசியாறலாம்…
பூமாலை நீ சூடும் நாள்…

ஆண் : மாது உன் மீது இப்போது…
என் மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே…

ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…

ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…

பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…

ஆண் : நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…


Notes : Guruvayurappa Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. குருவாயூரப்பா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top