பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ரா | இளையராஜா | புது புது அர்த்தங்கள் |
Guruvayurappa Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…
ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…
ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…
பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
—BGM—
ஆண் : தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில்…
நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்…
பெண் : தினம் தோறும் இரவில்…
நடு ஜாமம் வரையில்…
நான்தானே அதைக் கேட்டிருந்தேன்…
ஆண் : அரங்கேற்றம்தான் ஆகாமல்தான்…
அலைபாயும் என் ஜீவன்தான்…
பெண் : வா வா என் தேவா செம்பூவா…
என் தேகம் சேராதோ உன் கைகளிலே…
ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
—BGM—
பெண் : ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும்…
என் மேல் ஒரு போர் தொடுக்க…
ஆண் : எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு…
மானே வா உனை யார் தடுக்க…
பெண் : பரிமாறலாம் பசியாறலாம்…
பூமாலை நீ சூடும் நாள்…
ஆண் : மாது உன் மீது இப்போது…
என் மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே…
ஆண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி…
ஆண் : ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன…
நான் போகும் பாதை…
என்னாளும் உன் பாதை…
பெண் : குருவாயூரப்பா குருவாயூரப்பா…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
ஆண் : நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி…
Notes : Guruvayurappa Song Lyrics in Tamil. This Song from Pudhu Pudhu Arthangal (1989). Song Lyrics penned by Vaali. குருவாயூரப்பா பாடல் வரிகள்.