Category Archives: உன்னால் முடியும் தம்பி

Unnal Mudiyum Thambi Song Lyrics in Tamil

உன்னால் முடியும் தம்பி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Unnal Mudiyum Thambi Song Lyrics in Tamil


ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…
உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

ஆண் : தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
உன் தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
எதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்…

ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

ஆண் : நாளைய நாட்டின் தலைவனும் நீயே…
நம்பிகை கொண்டு வருவாயே…
உனக்கென்ன ஓர் சரித்திரமே எழுதும் காலம் உண்டு…

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
அட உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

ஆண் : ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்…
சாராய கங்கை காயாதடா…
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்…
காசுள்ள பக்கம் பாயாதடா…

ஆண் : குடிச்சவன் போதையில் நிப்பான்…
குடும்பத்தை வீதியில் வைப்பான்…
தடுப்பது யார் என்று கொஞ்சம் நீ கேளாடா…

ஆண் : கள்ளு கடை காசிலேதான்டா…
கட்சி கொடி ஏறுது போடா…
கள்ளு கடை காசிலே தான்டா…
கட்சி கொடி ஏறுது போடா…
மண்ணோடு போகாமல் நம் நாடு திருந்த செய்யணும்…

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

BGM

ஆண் : கல்லூரி பள்ளி இல்லாத ஊரை…
கையோடு இன்றே தீ மூட்டுவோம்…
கல்லாத பேர்கள் இல்லாத நாடு…
நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்…

ஆண் : இருக்கிற கோவிலை எல்லாம்…
படிக்கிற பள்ளிகள் செய்வோம்…
அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்…

ஆண் : வானம் உங்கள் கைகளில் உண்டு…
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு…
வானம் உங்கள் கைகளில் உண்டு…
ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு…
நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளனும்…

BGM

ஆண் : உன்னால் முடியும்…
அட உன்னால் முடியும்…
ஆஹா… உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…

ஆண் : தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
உன் தோளை உயர்த்து…
தூங்கி விழும் நாட்டை எழுப்பு…
ஏதையும் முடிக்கும் இதயம் உன்னில் கண்டேன்…

ஆண் : உன்னால் முடியும் தம்பி தம்பி…
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…


Notes : Unnal Mudiyum Thambi Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. உன்னால் முடியும் தம்பி பாடல் வரிகள்.


இதழில் கதை எழுதும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
முத்துலிங்கம்எஸ். பி. பாலசுப்ரமணியம் & கே.எஸ். சித்ராஇளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil


BGM

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…

BGM

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…
மனதில் சுகம் மலரும் மாலையிது…

BGM

ஆண் : இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே…
இரு கரம் துடிக்குது தனிமையும் நெருங்கிட…
இனிமையும் பிறக்குது…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…

BGM

ஆண் : காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு…
ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்…

பெண் : நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது…
நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்…

ஆண் : இனிய பருவமுள்ள இளங்குயிலே…
இனிய பருவமுள்ள இளங்குயிலே…
ஏன் இன்னும் தாமதம்…
மன்மதக் காவியம் என்னுடன் எழுத…

பெண் : நானும் எழுதிட இளமையும் துடிக்குது…
நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது…

ஆண் : ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி…
ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி…

பெண் : காலம் வரும் வரை பொறுத்திருந்தால்…
கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே…

ஆண் : காலம் என்றைக்கு கனிந்திடுமோ…
காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ…

பெண் : மாலை மலா் மாலை இடும்…
வேளை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும்…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…

BGM

ஆண் : தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்…
கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே…

பெண் : பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும்…
அந்த மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா…

ஆண் : அழகைச் சுமந்து வரும் அழகரசி…
அழகைச் சுமந்து வரும் அழகரசி…
ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ…

பெண் : நாளும் நிலவது தேயுது மறையுது…
நங்கை முகமென யாரதைச் சொன்னது…

ஆண் : மங்கை உன் பதில் மனதினைக் கவருது…
மாரன் கணை வந்து மார்பினில் பாயுது…

பெண் : காமன் கனைகளைத் தடுத்திடவே…
காதல் மயில் துணை என வருகிறது…

ஆண் : மையல் தந்திடும் வார்த்தைகளே…
மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது…

பெண் : மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு…
ஜீவ நதி அருகினில் இருக்குது…

பெண் : மனதில் சுகம் மலரும் மாலையிது…
மான் விழி மயங்குது… ஆஆ… ஆஆ…

ஆண் : இதழில் கதை எழுதும் நேரமிது…
இன்பங்கள் அழைக்குது… ஆஆ… ஆஆ…
இதழில் கதை எழுதும் நேரமிது…


Notes : Ithazhil Kathai Ezhuthum Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Muthulingam. இதழில் கதை எழுதும் பாடல் வரிகள்.


புஞ்சை உண்டு நஞ்சை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஉன்னால் முடியும் தம்பி

Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தானா…
ஹோய்… தந்தன் னானா தந்தன் னானா…
தந்தன் னானா தந்தன் னானா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

ஆண் : வீதிக்கொரு கட்சி உண்டு…
சாதிக்கொரு சங்கம் உண்டு…
நீதி சொல்ல மட்டும் இங்கு நாதி இல்லே…
சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லே…

ஆண் : இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்லே வெறும் காடா…
இதக் கேக்க யாரும் இல்லே தோழா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

BGM

ஆண் : வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை…
யாரிங்கு கட்டி வைத்துக் கொடுத்தது…
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமோ…
வீடின்றி வாசலின்றித் தவிக்குது…

ஆண் : எத்தனை காலம் இப்படிப் போகும்…
என்றொரு கேள்வி நாளை வரும்…
உள்ளவை எல்லாம் யாருக்கும் சொந்தம்…
என்றிங்கு வாழும் வேளை வரும்…

ஆண் : ஆயிரம் கைகள் கூடட்டும்…
ஆனந்த ராகம் பாடட்டும்…
நாளைய காலம் நம்மோடு…
நிச்சயம் உண்டு போராடு…
வானகமும் வையகமும் எங்கள் கைகளில் என்றாடு…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

BGM

ஆண் : ஆத்துக்குப் பாதை இங்கு யாரு தந்தது…
தானாகப் பாதை கண்டு நடக்குது…
காத்துக்குப் பாட்டுச் சொல்லி யாரு தந்தது…
தானாகப் பாட்டு ஒண்ணு படிக்குது…

ஆண் : எண்ணிய யாவும் கைகளில் சேரும்…
நம்பிக்கை வேண்டும் நெஞ்சுக்குள்ளே…
காலையில் தோன்றும் சூரியன் போலே…
பொன்னொளி வேண்டும் கண்ணுக்குள்ளே…

ஆண் : சேரியில் தென்றல் வீசாதா…
ஏழையை வந்து தீண்டாதா…
கங்கையும் தெற்கே பாயாதா…
காவிரியோடு சேராதா…
பாடுபடும் தோழர்களின் தோள்களில் மாலை சூடாதா…

ஆண் : புஞ்சை உண்டு நஞ்சை உண்டு…
பொங்கி வரும் கங்கை உண்டு…
பஞ்சம் மட்டும் இன்னும் இங்கு மாறவில்லே…
எங்க பாரதத்தின் சோத்துச் சண்டை தீரவில்லே…

ஆண் : இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…
இது நாடா இல்ல வெறும் காடா…
இத கேக்க யாரும் இல்லே தோழா…


Notes : Punjai Undu Nanjai Undu Song Lyrics in Tamil. This Song from Unnal Mudiyum Thambi (1988). Song Lyrics penned by Pulamaipithan. புஞ்சை உண்டு நஞ்சை உண்டு பாடல் வரிகள்.