Category Archives: முள்ளும் மலரும்

நித்தம் நித்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாமுள்ளும் மலரும்

Nitham Nitham Song Lyrics in Tamil


பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…

பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

BGM


Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.


அடி பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பஞ்சு அருணாச்சலம்ஜென்சி அந்தோணிஇளையராஜாமுள்ளும் மலரும்

Adi Penney Song Lyrics in Tamil


BGM

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே…
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…

BGM

பெண் : வானத்தில் சில மேகம்…
பூமிக்கோ ஒரு தாகம்…
பாவை ஆசை என்ன…

BGM

பெண் : பூங்காற்றில் ஒரு ராகம்…
பொன் வண்டின் ரீங்காரம்…
பாடும் பாடல் என்ன…

பெண் : சித்தாடை கட்டாத செவ்வந்தியே…
சிங்காரம் பார்வை சொல்லும் சேதி என்னவோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

BGM

பெண் : நீரோடும் ஒரு ஓடை…
மேலாடும் திருமேடை…
தேடும் தேவையென்ன…

BGM

பெண் : பார்த்தாலோ ஒரு ராணி…
பாலாடை இவள் மேனி…
கூறும் ஜாடை என்ன…

பெண் : ஒன்றோடு ஒன்றான எண்ணங்களே…
கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ…

பெண் : அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை…
வண்ணங்கள் தோன்றும் இயற்கை…
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில்…
கொண்டாடுதே சுகம் கோடி என்றதே…
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே…

பெண் : அடி பெண்ணே… அடி பெண்ணே…

BGM


Notes : Adi Penney Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Panchu Arunachalam. அடி பெண்ணே பாடல் வரிகள்.


Raman Aandalum Song Lyrics in Tamil

ராமன் ஆண்டாலும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாமுள்ளும் மலரும்

Raman Aandalum Song Lyrics in Tamil


BGM

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
அம்மனைக் கும்பிட்டா…
நமக்கெல்லாம் நல்லதே நடக்குமே…
கெட்டதை அம்மனும் கொடுக்காதே…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

BGM

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

BGM

ஆண் : யானையக் கொண்டாங்க…
குதுரையக் கொண்டாங்க…
நானும் ஊர்கோலம் போக…

BGM

ஆண் : யானையக் கொண்டாங்க…
குதுரையக் கொண்டாங்க…
நானும் ஊர்கோலம் போக…

ஆண் : வாழை தென்னை மாவிலையெல்லாம்…
தொங்கணும் தோரணமாக…
ஏன்டா டேய் ராணியக் கூப்பிடு…
அவளோட சேடியும் கூப்பிடு…
ஏ… மதுர ராஜ்ஜியம் என்னுது…
ஒனக்கொரு பாதியக் கொடுக்கிறேன்டா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
சந்தனம் பூசுங்க…
சாமிய நேரில பாருங்க…
என்ன வேணும் அத கேளுங்க…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

ஆண் : பொன்னா பூப்பூத்து வைரம் காயாக…
காய்க்கும் என்னோட தோட்டம்…

BGM

ஆண் : பொன்னா பூப்பூத்து வைரம் காயாக…
காய்க்கும் என்னோட தோட்டம்…

ஆண் : மாசம் மூணு போகம் வெளையும்…
லாபம் மேலும் கூடும்…
கையிருக்கு உழச்சி காட்டுறேன்…
மனசிருக்கு பொழச்சி பாக்குறேன்…
ஏய் போனா போகுது வேல…
ஒனக்கொரு வேலையக் கொடுக்கிறேன்டா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே…

குழு : லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…
பொன்னான பல்லக்கு…
முல்லப்பூ மாலையும் சாமிக்கு…
போட்டுட்டு சொல்லி சொல்லி பாடுங்க…
லே லே லே லே லே லே லே லே…
லே லே லே லே லே லே லே லே…

BGM

ஆண் : ஊரும் கொண்டாட…
உலகம் கொண்டாட…
ஊர்கோலம் போகும் சாமி…

BGM

ஆண் : ஊரும் கொண்டாட…
உலகம் கொண்டாட…
ஊர்கோலம் போகும் சாமி…

ஆண் : நாடும் வீடும் நல்லா வாழ…
நீதான் நேர்வழி காமி…
சாதி சனம் ஒன்னாக சேந்தது…
சாமியத்தான் எல்லாரும் கேக்குது…
நீ கேட்டா கேட்டதை கொடுக்கற…
சாமியப் பாத்து கேளுங்கடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே… ஹோய்…

ஆண் : நான்தான்டா என் மனசுக்கு ராஜா…
வாங்குங்கடா வெள்ளியில் கூஜா…
நீ கேட்டா கேட்டதை கொடுப்பேன்…
கேக்குற வரத்தை கேட்டுக்கோடா…

ஆண் : ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…
எனக்கொரு கவலையில்லே… ஹோய்…

BGM


Notes : Raman Aandalum Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. ராமன் ஆண்டாலும் பாடல் வரிகள்.


செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

BGM

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

BGM

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

BGM

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…


Notes : Senthazham Poovil Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Kannadasan. செந்தாழம் பூவில் பாடல் வரிகள்.