நித்தம் நித்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்வாணி ஜெயராம்இளையராஜாமுள்ளும் மலரும்

Nitham Nitham Song Lyrics in Tamil


பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…

பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…

பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…

BGM

பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…

பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…

BGM


Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top