பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
கங்கை அமரன் | வாணி ஜெயராம் | இளையராஜா | முள்ளும் மலரும் |
Nitham Nitham Song Lyrics in Tamil
பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
—BGM—
பெண் : பச்சரிசி சோறு உப்பு கருவாடு…
சின்னமனூரு வாய்க்கா சேலு கெண்ட மீனு…
குருத்தான மொளை கீரை வாடாத சிறு கீரை…
நெனைக்கையிலே எனக்கு இப்போ எச்சி ஊறுது…
அள்ளி தின்ன ஆசை வந்து என்னை மீறுது…
பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
—BGM—
பெண் : பாவக்கா கூட்டு பருப்போட சேத்து…
பக்குவத்த பாத்து ஆக்கி முடிச்சாச்சு…
சிறுகாலான் வருத்தாச்சு பதம் பாத்து எடுத்தாச்சு…
கேழ்வெரகு கூழுக்கது ரொம்ப பொருத்தமைய்யா…
தெனங்குடிச்சா ஒடம்பு இது ரொம்ப பெறுக்குமைய்யா…
பெண் : நித்தம் நித்தம் நெல்லு சோறு…
நெய் மணக்கும் கத்திரிக்கா…
நேத்து வச்ச மீன் கொழம்பு…
என்ன இழுக்குதைய்யா…
நெஞ்சுக்குள்ள அந்த நெனப்பு…
வந்து மயக்குதைய்யா…
—BGM—
பெண் : பழையதுக்கு தோதா புளிச்சி இருக்கும் மோறு…
பொட்டுகள்ள தேங்கா போட்டறச்ச தொவயலு…
சாம்பாரு வெங்காயம் சலிக்காது தின்னாலும்…
அதுக்கு இணை ஒலகத்துல இல்லவே இல்ல…
அள்ளி தின்னேன் எனக்கு இன்னும் அலுக்கவே இல்ல…
பெண் : இத்தனைக்கும் மேலிருக்கு…
நெஞ்சுக்குள்ளே ஆச ஒன்னு…
சூசகமா சொல்ல போறேன் பொம்பள தாங்க…
சூடாக இருக்குறப்போ சாப்பிட வாங்க…
—BGM—
Notes : Nitham Nitham Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Gangai Amaran. நித்தம் நித்தம் பாடல் வரிகள்.