செந்தாழம் பூவில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமுள்ளும் மலரும்

Senthazham Poovil Song Lyrics in Tamil


BGM

ஆண் : செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…

BGM

ஆண் : வளைந்து நெளிந்து போகும் பாதை…
மங்கை மோக கூந்தலோ…

BGM

ஆண் : மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்…
பருவ நாண ஊடலோ…

ஆண் : ஆலங்கொடி மேலே கிளி…
தேன் கனிகளை தேடுது…
ஆசை குயில் பாஷை இன்றி…
ராகம் என்ன பாடுது…
காடுகள் மலைகள் தேவன் கலைகள்…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : அழகு மிகுந்த ராஜகுமாரி…
மேகமாக போகிறாள்…

BGM

ஆண் : ஜரிகை நெளியும் சேலை கொண்டு…
மலையை மூட பார்க்கிறாள்…

ஆண் : பள்ளம் சிலா் உள்ளம் என…
ஏன் படைத்தான் ஆண்டவன்…
பட்டம் தர தேடுகின்றேன்…
எங்கே அந்த நாயகன்…
மலையின் காட்சி இறைவன் ஆட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில்…வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

BGM

ஆண் : இளைய பருவம் மலையில் வந்தால்…
ஏகம் சொர்க்க சிந்தனை…
இதழை வருடும் பனியின் காற்று…
கம்பன் செய்த வர்ண்தனை…

ஆண் : ஓடை தரும் வாடை காற்று…
வான் உலகை காட்டுது…
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று…
எங்கோ என்னை கூட்டுது…
மறவேன் மறவேன் அற்புத காட்சி…

ஆண் : செந்தாழம் பூவில்…
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்…
என் மீது மோதுதம்மா…

ஆண் : பூ வாசம் மேடை போடுதம்மா…
பெண்போல ஜாடை பேசுதம்மா…
அம்மம்மா ஆனந்தம்…
அம்மம்மா ஆனந்தம்…


Notes : Senthazham Poovil Song Lyrics in Tamil. This Song from Mullum Malarum (1978). Song Lyrics penned by Kannadasan. செந்தாழம் பூவில் பாடல் வரிகள்.


Scroll to Top