Category Archives: அன்னை ஓர் ஆலயம்

நதியோரம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. சுசீலா & எஸ்.பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Nadhiyoram Song Lyrics in Tamil


BGM

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நாணல் ஒன்று நாணம் கொண்டு…
நாட்டியம் ஆடுது மெல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…

BGM

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம் நீயும் ஒரு நாணல் என்று…
நூலிடை என்னிடம் சொல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…

BGM

பெண் : வெண்ணிற மேகம் வான் தொட்டிலைவிட்டு…
ஓடுவதென்ன மலையை மூடுவதென்ன…

BGM

பெண் : முகில்தானோ துகில்தானோ…
முகில்தானோ துகில்தானோ…

பெண் : சந்தனக்காடிருக்கு தேன் சிந்துற கூடிருக்கு…
தேன் வேண்டுமா நான் வேண்டுமா…
நீ எனைக் கைகளில் அள்ள…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

ஆண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம்… ம்ம்…

BGM

ஆண் : தேயிலைத் தோட்டம் நீ தேவதையாட்டம்…
துள்ளுவதென்ன நெஞ்சை அள்ளுவதென்ன…

BGM

ஆண் : பனி தூங்கும் பசும்புல்லே…
பனி தூங்கும் பசும்புல்லே…
மின்னுது உன்னாட்டம்…
நல்ல முத்திரைப் பொன்னாட்டம்…

ஆண் : கார்காலத்தில் ஊர்கோலத்தில்…
காதலன் காதலி செல்ல…
நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…

பெண் : நதியோரம்… ம்ம்ம்ம்…
நதியோரம்… ம்ம்…

ஆண் : நீயும் ஒரு நாணல் என்று…
நூலிடை என்னிடம் சொல்ல…

பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…
ஆண் & பெண் : நான் அந்த ஆனந்தம் என் சொல்ல…


Notes : Nadhiyoram Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. நதியோரம் பாடல் வரிகள்.


amma-nee-summandha-pillai-song-lyrics

அம்மா நீ சுமந்த பிள்ளை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம்.சௌந்தரராஜன்இளையராஜாஅன்னை ஓர் ஆலயம்

Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil


ஆண் : அம்மா…

BGM

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…
மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது…
மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது…

ஆண் : அன்னை சொன்ன வார்த்தை இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின் வடிவில் வந்தது….
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…

BGM

ஆண் : வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…
வாழவைத்த தெய்வம் இன்று வானம் சென்றதேனோ…
உலகிலே உன் மகன் நீர் இல்லாத மீனோ…

ஆண் : மீண்டும் இந்த மண்ணில் வந்து…
தோன்ற வேண்டுமே…
வாழ்க வாழ்க மகனே என்று…
வாழ்த்த வேண்டுமே…
எங்கே… எங்கே…

ஆண் : அம்மா… நீ சுமந்த பிள்ளை…
சிறகொடிந்த கிள்ளை…
என் கண்களும் என் நெஞ்சமும் கொண்டாடும் தெய்வம் தாயே…
அன்னை ஒர் ஆலயம்…
அன்னை ஒர் ஆலயம்…


Notes : Amma Nee Summandha Pillai Song Lyrics in Tamil. This Song from Annai Oru Aalayam (1979). Song Lyrics penned by Vaali. அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் வரிகள்.