azhagaai-pookkuthey-song-lyrics-in-tamil

அழகாய் பூக்குதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்ஜானகி ஐயர் & வி.வி. பிரசன்னாவிஜய் ஆண்டனிநினைத்தாலே இனிக்கும்

Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…
காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : கடவுளின் கனவில்…
இருவரும் இருப்போமே… ஓஹோ…
கவிதையின் வடிவில்…
வாழ்ந்திட நினைப்போமே… ஓஹோ…

ஆண் : இருவரும் நடந்தால்…
ஒரு நிழல் பார்ப்போமே… ஓஹோ…
ஒரு நிழல் அதிலே…
இருவரும் தெரிவோமே… ஓஹோ…

பெண் : சிலநேரம் சிரிக்கிறேன்…
சில நேரம் அழுகிறேன்…
உன்னாலே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

BGM

பெண் : ஒருமுறை நினைத்தேன்…
உயிர்வரை இனித்தாயே… ஓஹோ…
மறுமுறை நினைத்தேன்…
மனதினை வதைத்தாயே ஓஹோ…

ஆண் : சிறு துளி விழுந்து…
நிறைகுடம் ஆனாயே… ஓஹோ…
அரை கணம் நொடியில்…
நரை விழ செய்தாயே… ஓஹோ…

பெண் : நீ இல்லா நொடி முதல்…
உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே…

ஆண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…

ஆண் & பெண் : அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

பெண் : அழகாய் பூக்குதே…
சுகமாய் தாக்குதே…
அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல்…
உள்ளங்கள் பந்தாடுதே…

ஆண் : ஆசையாய் பேசிட வார்த்தை மோதும்…
அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்…

பெண் : காதலன் கைச்சிறை காணும் நேரம்…
மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்…


Notes : Azhagaai Pookkuthey Song Lyrics in Tamil. This Song from Ninaithale Inikkum (2009). Song Lyrics penned by Kalaikumar. அழகாய் பூக்குதே பாடல் வரிகள்.