பறவையே எங்கு இருக்கிறாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாகற்றது தமிழ்

Paravaiye Engu Irukkirai Song Lyrics in Tamil


ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

ஆண் : அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீதானே…
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீதானே…

ஆண் : பார்க்கும் திசைகள் எல்லாம்…
பாவை முகம் வருதே…
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ…

ஆண் : நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…

ஆண் : பறவையே எங்கு இருக்கிறாய்…
பறக்கவே என்னை அழைக்கிறாய்…
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

BGM

ஆண் : உன்னோடு நானும் போகின்ற பாதை…
இது நீளாதோ தொடு வானம் போலவே…
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்…
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்…

ஆண் : இந்த புல் பூண்டும் பறவையாவும் போதாதா…
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா…

ஆண் : முதல் முறை வாழப் பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…

ஆண் : முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…

BGM

ஆண் : ஏழை காதல் மலைகள் தன்னில்
தோன்றுகின்ற ஒரு நதியாகும்…
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்…

ஆண் : இதோ இதோ இந்த பயணத்திலே…
இது போதும் கண்மணி…
வேறென்ன நானும் கேட்பேன்…
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…

ஆண் : இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா…

ஆண் : முதல் முறை வாழப் பிடிக்குதே…
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே…
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே…

ஆண் : முதல் முறை கதவு திறக்குதே…
முதல் முறை காற்று வருகுதே…
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…


Notes : Paravaiye Engu Irukkirai Song Lyrics in Tamil. This Song from Kattradhu Thamizh (2007). Song Lyrics penned by Na. Muthukumar. பறவையே எங்கு இருக்கிறாய் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top