ambikapathy-song-lyrics-in-tamil

அம்பிகாபதி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துநரேஷ் ஐயர்ஏ.ஆர்.ரகுமான்அம்பிகாபதி

Ambikapathy Song Lyrics in Tamil


ஆண் : ஓ… கங்கையிலே ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…
அந்த பறவை கரை வந்ததே…
அந்த பறவை கரை வந்ததே…
அதிசயமான தேவதையா…

BGM

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதிதான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

BGM

ஆண் : அடி எனக்கு எனக்கு என்று…
துடிக்கும் துடிக்கும் மனம்…
உனக்கு உனக்கு என்றதே…

ஆண் : தினம் தனக்கு தனக்கு என…
தவிக்கும் தவிக்கும் உள்ளம்…
நமக்கு நமக்கு என்று சொல்லுதே…

ஆண் : என்னை கவிஞன் கவிஞன் என்று…
கருதி கிடந்த ஒரு கர்வம்…
அழிந்து விட்டதே…

ஆண் : உன்னை கடக்கும் பொழுது…
கண்ணில் அடிக்கும் அழகு…
என்னை கடையன் கடையன் என்று தள்ளுதே…

ஆண் : காசி நகர் வீதி பக்கம் வாடி…
கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
ஓ… அமராவதியா கேளு…

BGM

ஆண் : பல குழிகள் கடந்து வலி…
நடந்து நடந்து மனம்…
விழியில் விழுந்து விடுமே…

ஆண் : சிறு பூக்கள் தொடுப்பதற்க்கு…
கத்தி உனக்கெதற்க்கு…
ஊசி ஒன்று போதுமே…

ஆண் : உன்னை நினைத்து நினைத்து…
விழி நனைத்து நனைத்து…
உடல் இளைத்து இளைத்துவிட்டதே…

ஆண் : உயிர் தெரிக்க தெரிக்க…
உன்னை துரத்தி துரத்தி…
எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே…

ஆண் : மண்ணில் வந்தோம்…
இன்னொரு பாதி தேடி…
நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…

ஆண் : அவளா அவளா பாரு…
அவள் அமராவதியா கேளு…
அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…

ஆண் : அம்பிகாபதிதான் நானு…
அமராவதிதான் யாரோ…
ஓ… அமராவதி தான் யாரோ…

ஆண் : அந்த கங்கை ஆற்றில்…
ஒரு வண்ண பறவை…
மூழ்கியதே நீரோடு…

ஆண் : அது கரையில் வந்ததே…
கரையில் வந்ததே…
கண்கள் கூசும் தேவதையாக…


Notes : Ambikapathy Song Lyrics in Tamil. This Song from Ambikapathy (2013). Song Lyrics penned by Vairamuthu. அம்பிகாபதி பாடல் வரிகள்.