yaar-vazhiyil-song-lyrics

யார் வழியில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்தனுஷ்ராதன்சில நேரங்களில் சில மனிதர்கள்

Yaar Vazhiyil Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் வழியில்…
யார் மொழியில்…
யார் துணையில்…
விடைகள் வந்து சேருமோ…

ஆண் : யார் விதியில்…
யார் சதியில்…
யார் மதியில்…
தடைகள் வந்து நேருமோ…

ஆண் : தீர்வுகள் இன்றியே…
பயணம்தான் நீளுமோ…
தொடர்ந்திடும் துன்பத்தை…
இதயம்தான் தாங்குமோ…

ஆண் : எத்திசை எமக்கென…
விடியல்தனை காட்டுமோ…
எவ்வழி நம்பிக்கை…
நம்மை வந்து சேருமோ…

குழு (பெண்கள்) : எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்…
யாவும் பொய்தானோ…
விதியே வென்று தீரும் என படித்தோம்…
யாவும் மெய்தானோ…

குழு (பெண்கள்) : யாரிடம் முறையிட…
யாருமில்லை விடையை சொல்லிட…

குழு (பெண்கள்) : யாரோ தொடர்ந்த வழக்கு…
விடியல்தனை தருமா நமக்கு…
பாவம் நமது இலக்கு…
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு…

ஆண் : முன்வினை என்பது…
பின்வினை தேடுமோ…
ஒருவழி பாதையில்…
வாழ்க்கைதான் ஓடுமோ…

ஆண் : காரணம் யாரென்று…
கடவுளை கேட்பதா…
காலத்தை கேட்பதா…
யார் இங்கு பேசுவார்…

ஆண் : ஆகாயம் போலத்தான்…
அடங்காத கேள்விகள்…
விடைதேட தேடத்தான்…
விரிசல்கள் நூறு…

ஆண் : பலநேரம் வாழ்க்கைக்கு…
பலியாகும் மானுடம்…
பறிபோன யாவையும்…
கிடைக்காது மீண்டும்…

BGM

ஆண் : நாளைகள் என்பது…
எதுவரையில் நீளுமோ…
நம்பிக்கை கீற்றுகள்…
அதுவரையில் வாழுமோ…

ஆண் : சிலந்தியின் கூடென…
சிந்தனைகள் யாவுமே…
சிக்கல்களில் ஆடுதே…
சிதறிதான் போகுதே…

ஆண் : எழுதாத நாடகம்…
இயக்குவது யாரிங்கே…
முடிவென்ன என்பதும்…
யார் சொல்வாரோ…

ஆண் : தெரியாத பாதையில்…
புரியாத தேடல்கள்…
எங்கெங்கோ போகுதே…
விடை இங்கு இல்லையே…

குழு (பெண்கள்) : எதுவும் கடந்து போகும் என நினைத்தோம்…
யாவும் பொய்தானோ…
விதியே வென்று தீரும் என படித்தோம்…
யாவும் மெய்தானோ…

குழு (பெண்கள்) : யாரிடம் முறையிட…
யாருமில்லை விடையை சொல்லிட…

குழு (பெண்கள்) : யாரோ தொடர்ந்த வழக்கு…
விடியல்தனை தருமா நமக்கு…
பாவம் நமது இலக்கு…
நடை தளர்ந்து முடமாய் கிடக்கு…

ஆண் : யார் வழியில்…
யார் மொழியில்…
யார் துணையில்…
விடைகள் வந்து சேருமோ…

ஆண் : யார் விதியில்…
யார் சதியில்…
யார் மதியில்…
தடைகள் வந்து நேருமோ…


Notes : Yaar Vazhiyil Song Lyrics in Tamil. This Song from Sila Nerangalil Sila Manidhargal (2022). Song Lyrics penned by Snehan. யார் வழியில் பாடல் வரிகள்.