யார் இவன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கேபர் வாசுகிகேபர் வாசுகியுவன் ஷங்கர் ராஜாஇரும்புத்திரை

Yaar Ivan Song Lyrics in Tamil


BGM

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

ஆண் : காதோரம் வாய் வச்சு…
காத்தோட நீ பேசு…
சத்தம் போட்ட வார்த்தை எல்லாம்…
அவன் சிறையில செத்திடுச்சு…

ஆண் : எங்க போய் ஒழிஞ்சாலும்…
ஏதோ ஒன்னு பாக்குது…
யார்கிட்ட பேசினாலும்…
ஏதோ ஒன்னு கேட்குது…

ஆண் : அடிமையாக வோங்கிருந்தா…
அடிதடினு இறங்கலாம்…
ஆசயத்தான் காட்டி இப்போ…
குழு : கால வாரி வெட்டுறான்…

ஆண் : யார் இவன் தூணிலும் துரும்பிலும்…
கண்கள் வைத்து கொண்டு பார்ப்பவன்…
வான் கடல் மண்ணிலும் மனதிலும்…
காதை வாய்த்துக்கொண்டு கேட்பவன்…

BGM

ஆண் : வேஷத்தை இழந்தாச்சு…
வானம் பாத்து கைய கட்டு…
உத்தமன்தான் இல்லையினு…
வங்கியில வட்டி கட்டு…

ஆண் : எப்பபயோ செஞ்சதெல்லாம்…
எங்கெங்கேயோ பதியிது…
கோட்ட விட்டு தோத்த பின்தான்…
ஆட்டமே புரியுது…

ஆண் : எங்கிருந்து அடிக்கிறான்னு…
தேடி பாக்க போயிதான்…
உருவமில்லா மிருகமாத்தான்…
கற்பனைல சிரிக்கிறான்…

ஆண் : யார் இவன்… யார் இவன்…

BGM

ஆண் : கருவிய கையில பிடிச்சு…
கனவு கூச்சம் காசையெல்லாம் பொதச்சு…
ரகசியம் பூட்டித்தான் அடச்சு…
யாருக்கும் தெரியாம மறச்சு…

ஆண் : இலவசம் விளம்பரமின்னு…
அதன் வாசம் இழுத்திச்சு…
எல்லை இல்ல ஆசைபடுன்னு…
கூச்சமில்லாம சொல்லிச்சு…

ஆண் : சாக்கு இப்போ இருக்குது…
சாவி இன்னும் பொருந்துது…
பூட்டிருக்க பூட்டிருக்க…
வச்ச சரக்கு மட்டும் கரையிது…

BGM


Notes : Yaar Ivan Song Lyrics in Tamil. This Song from Irumbu Thirai (2018). Song Lyrics penned by Kaber Vasuki. யார் இவன் பாடல் வரிகள்.