விடிகின்ற பொழுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாராம்

Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்…
பூகம்பம் இன்றி சிதறுதடா…
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே…
எனை இன்னும் வாழ சொல்லுதடா…

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்…
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்…

பெண் : காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி…
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி…
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே…
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே…

BGM

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்…
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா…
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்…
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா…

பெண் : யாரிடம் உந்தன் கதை பேச முடியும்…
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்…

பெண் : பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா…
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா…
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா…
உன்னை விட கல்லறையே பக்கமடா…

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…


Notes : Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. விடிகின்ற பொழுது பாடல் வரிகள்.