விடிகின்ற பொழுது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்ஸ்ரீ மதுமிதாயுவன் ஷங்கர் ராஜாராம்

Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil


BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…

BGM

பெண் : உன்னாலே எனக்குள் உருவான உலகம்…
பூகம்பம் இன்றி சிதறுதடா…
எங்கேயோ இருந்து நீ தீண்டும் நினைவே…
எனை இன்னும் வாழ சொல்லுதடா…

பெண் : தொடுகின்ற தூரம் எதிரே நம் காதல்…
தொடப்போகும் நேரம் மரணத்தின் வாசல்…

பெண் : காதலும் ஓர் ஆயுதமாய் மாறிடுச்சி…
மெல்ல மெல்ல என்னை கொல்ல துணிஞ்சிடுச்சி…
தீயில் என்னை நிக்க வச்சி சிரிக்கிறதே…
தீர்ப்பு என்ன எந்தன் நெஞ்சு கேட்கிறதே…

BGM

பெண் : காட்டுத்தீ போல கண்மூடி தனமாய்…
என் சோகம் சுடர் விட்டு எறியுதடா…
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம்…
வாய் பொத்தி வாய் பொத்தி கதறுதடா…

பெண் : யாரிடம் உந்தன் கதை பேச முடியும்…
வார்த்தைகள் இருந்தும் மௌனத்தில் கரையும்…

பெண் : பச்சை நிலம் பாலை வனம் ஆனதடா…
பூவனமும் போர்க்களமாய் மாறுதடா…
காலம் கூட கண்கள் மூடி கொண்டதடா…
உன்னை விட கல்லறையே பக்கமடா…

பெண் : விடிகின்ற பொழுது தெரிந்திடுமா…
கடலலை கரையை கடந்திடுமா…
காதலை உலகம் அறிந்திடுமா…
நினைப்பது எல்லாம் நடந்திடுமா…


Notes : Vidiginidra Pozhudhu Song Lyrics in Tamil. This Song from Raam (2005). Song Lyrics penned by Snehan. விடிகின்ற பொழுது பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top