நீ கவிதை எனக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்கிரிஷ் & மேகாவிஜய் ஆண்டனிநான் அவன் இல்லை

Nee Kavithai Song Lyrics in Tamil


BGM

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

ஆண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல் இரவே…

ஆண் : ஓஹோஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

ஆண் : சத்தம் போடும் உந்தன் வளையல்…
காலை வரைக்கும் வேண்டாமே…
குத்தும் சின்ன மூக்குத்தியும் இனிமேல்…
தேவை இல்லைதானோ…

பெண் : கூந்தல் அதில் சிக்கிமாட்டிக்கொள்வதால்…
கம்மல் கூட வேண்டாமா…
ஆண் : ஓ ஹோ…
பெண் : இன்னும் கையில் இடஞ்சல்கள் செய்யுதே…
மோதிரங்கள் ஏனோ…

ஆண் : ஒட்டிக்கொண்டு ஊஞ்சலாடும் இந்தப் பொன் வேளையில்…
ஒட்டியாணம் தேவைதானா உந்தன் பொன் மேனியில்…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…
நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

BGM

பெண் : ஹா ரா ரா ரா… ஆ தள்ளி போடா…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…
வேணாம் வேணாம் வேணாம் வேணாம் வேணாம்…

ஆண் : வேணும் வேணும் வேணும்…
பெண் : தள்ளிப் போடா போடா…

பெண் : காதல் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காமம் இல்ல ஆரம்பம்…
ஆண் : ஓ ஹோ…

பெண் : காமம் வந்து முடிகின்ற இடத்தில்…
ஆண் : இடத்தில்…
பெண் : காதல் மீண்டும் தோன்றும்…

ஆண் : ஆ ஆசை வந்து வழிகின்ற இடத்தில்…
கூச்சல் போட சந்தோஷம்…
ஆடை வந்து நழுவிடும் இடத்தில்…
மௌனம்தானே பேசும்…

பெண் : மெத்தை கூட இந்த நேரம் மூச்சுதான் வாங்குது…
வேகத்துக்கு தேகம் தானே போர்வையாய் மாறுது…

பெண் : நீ கவிதை எனக்கு நான் ரசிகை உனக்கு…
பாபம் பா பா பா பம்…

ஆண் : நீ பறவை எனக்கு நான் சிறகு உனக்கு…
பா பா பா பம் பா பா பா பம்…

பெண் : உடல் முழுக்க நனைக்கும் மழையே…
நகம் எடுத்து செதுக்கும் கலையே…
சுகம் கொடுத்து எடுக்கும் நிலையே முதல்இரவே…

ஆண் : ஓ ஹோ ஓ… உடை அணிந்து உருளும் நிலவே…
தடை கடந்து திரளும் வளைவே…
எடை மறந்து சுமந்தாய் எனையே துணையே…


Notes : Nee Kavithai Song Lyrics in Tamil. This Song from Naan Avanillai (2007). Song Lyrics penned by Pa. Vijay. நீ கவிதை எனக்கு பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top