ஒரு நாளுக்குள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்கார்த்திக் & ரீட்டாயுவன் ஷங்கர் ராஜாயாரடி நீ மோகினி

Oru Naalaikkul Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகின்ற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு…
ஓஓ ஓஓஹோ…

பெண் : ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம்…
இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம்…
இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம்…
என்றாலும் கால்கள் மிதக்கும்… ஓஹோ…

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நடை உடைகள் பாவனை மாற்றி வைத்தாய்…
நான் பேசிட வார்த்தைகள் நீ குடுத்தாய்…
நீ காதலா இல்லை கடவுளா…
புரியாமல் திணறிப் போனேன்…

ஆண் : யாரேனும் அழைத்தால் ஒரு முறைதான்…
நீதானோ என்றே திரும்பிடுவேன்…
தினம் இரவினில் உன் அருகினில்…
உறங்காமல் உறங்கிப் போவேன்…

பெண் : இது ஏதோ புரியா உணர்வு
இதைப் புரிந்திட முயன்றிடும் பொழுது…
ஒரு பனிமலை ஒரு எரிமலை…
விரல் கோர்த்து ஒன்றாய் சிரிக்கும்…

BGM

ஆண் : ஒரு நாளுக்குள் எத்தனை கனவு…
உன் பார்வையில் விழுகிற பொழுது…
தொடு வானத்தைத் தொடுகிற உறவு…
ஓஓ ஓஓ… ஓஹோ ஓ ஓ ஓ…

BGM

ஆண் : நதியாலே பூக்கும் மரங்களுக்கு…
நதி மீது இருக்கும் காதலினை…
நதி அறியுமா கொஞ்சம் புரியுமா…
கரையோட கனவுகள் எல்லாம்…

ஆண் : உனக்காக ஒரு பெண் இருந்து விட்டால்…
அவள் கூட உன்னையும் விரும்பி விட்டால்…
நீ பறக்கலாம் உன்னை மறக்கலாம்…
பிறக்காத கனவுகள் பிறக்கும்…

பெண் : தன் வாசனை பூ அறியாது…
கண்ணாக்கு கண் கிடையாது…
அது புரியலாம் பின்பு தெரியலாம்…
அது வரையில் நடப்பது நடக்கும்…

BGM


Notes : Oru Naalaikkul Song Lyrics in Tamil. This Song from Yaaradi Nee Mohini (2008). Song Lyrics penned by Na. Muthu Kumar. ஒரு நாளுக்குள் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top