வானுயர்ந்த சோலையிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பாவலர் வரதராஜன்எஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாஇதய கோயில்

Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

BGM

ஆண் : வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…
வாழ்வான வாழ்வெனக்கு வந்ததென்று நானிருந்தேன்…
பாழான நாளிதென்று பார்த்தவர்கள் கூறவில்லை…

ஆண் : தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
தேனாகப் பேசியதும் சிரித்து விளையாடியதும்…
வீணாகப் போகும் என்று யாரேனும் நினைக்கவில்லை…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன்…
நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…

BGM

ஆண் : ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…
ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற நேரத்திலே…
வீற்றிருந்த மணற்பரப்பு வேதனையைத் தூண்டுதடி…

ஆண் : பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பூத்திருந்த மலரெடுத்து பூங்குழலில் சூடிவைத்து…
பார்த்திருந்த கோலமெல்லாம் பழங்கதை ஆனதடி…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…
நானிருந்து வாடுகின்றேன் நாவறண்டு பாடுகின்றேன்…

ஆண் : வானுயர்ந்த சோலையிலே…


Notes : Vaanuyarntha Solaiyile Song Lyrics in Tamil. This Song from Idaya Kovil (1985). Song Lyrics penned by Pavalar Varadharajan. வானுயர்ந்த சோலையிலே பாடல் வரிகள்.