பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | டி.எம்.சௌந்தரராஜன் & எஸ்.ஜானகி | எம்.எஸ்.விஸ்வநாதன் | பாபு |
Idho Endhan Deivam Song Lyrics in Tamil
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
—BGM—
ஆண் : அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…
அவன் பூ விரியும் சோலையிலே மணப்பான்…
இசைப் பூங்குயிலின் தேன் குரலில் இருப்பான்…
ஆண் : குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…
குளிர் மேகமென தாகத்தையே தணிப்பான்…
தளிர்க்கொடி விளையும் கனிகளிலே இனிப்பான்…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
—BGM—
ஆண் : பல நூல் படித்து நீ அறியும் கல்வி…
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்…
ஆண் : பிறர் உயர்வினிலே உனக்கு இருக்கும் இன்பம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
—BGM—
ஆண் : தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை…
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை…
அவன் இதழ் மலரும் சிரிபொலியாய் கேட்டேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்…
ஆண் : பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்…
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்…
ஆண் : இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…
நான் ஓரே ஒரு புன்னகையில் கண்டேனே…
ஹாஆஅ… ஹாஆஅ… ஹோ ஓஒ… ஹோ ஓஓ…
Notes : Idho Endhan Deivam Song Lyrics in Tamil. This Song from Babu (1971). Song Lyrics penned by Vaali. இதோ எந்தன் தெய்வம் பாடல் வரிகள்.