Vaanam Song Lyrics in Tamil

வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்அனந்துசீன் ரோல்டன்ப. பாண்டி

Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

ஆண் : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

ஆண் : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

குழு : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

குழு : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM

ஆண் : வாழ்க்கையே என்றுமே…
எதையோ தேடும் பயணம்…
இறுதியில் அடைக்கலம்…
பேரன் பேத்தி ஜனனம்…

குழு : தேடினோம் ஓடினோம்…
எத்தனை கனவு…
ஓய்ந்து போய் சாய்வது…
குழந்தை இருக்கும் கூடு…

ஆண் : இதுதான் சுகமா…
கடவுளின் வரமா…
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா…

ஆண் : தாயும் இல்லை…
தாரமும் இல்லை…
மகனின் மகளே நீ ஓடி வா…

ஆண் : தோளில் ஒன்று…
மடியில் ஒன்று…
உணர்ந்தால் மட்டும் புரியும்…
உயிர் மட்டும் இது போதும்…

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

குழு : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

குழு : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

ஆண் : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

ஆண் : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
குழு : பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM


Notes : Vaanam Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Selvaraghavan. வானம் பாடல் வரிகள்.