வானம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்அனந்துசீன் ரோல்டன்ப. பாண்டி

Vaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

ஆண் : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

ஆண் : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

குழு : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

குழு : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப் பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM

ஆண் : வாழ்க்கையே என்றுமே…
எதையோ தேடும் பயணம்…
இறுதியில் அடைக்கலம்…
பேரன் பேத்தி ஜனனம்…

குழு : தேடினோம் ஓடினோம்…
எத்தனை கனவு…
ஓய்ந்து போய் சாய்வது…
குழந்தை இருக்கும் கூடு…

ஆண் : இதுதான் சுகமா…
கடவுளின் வரமா…
கண்களின் கண்ணீர் தாலாட்டுமா…

ஆண் : தாயும் இல்லை…
தாரமும் இல்லை…
மகனின் மகளே நீ ஓடி வா…

ஆண் : தோளில் ஒன்று…
மடியில் ஒன்று…
உணர்ந்தால் மட்டும் புரியும்…
உயிர் மட்டும் இது போதும்…

ஆண் : வானம் பறந்து பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…
ஓடும் நதியினிலே ஓடம்…
ஓய்ந்து கரையை தேடுதாம்…

குழு : என்றும் இவனும் குழந்தையா…
வார்த்தை இன்னும் மழலையாய்…
சிரிப்பில் இதயம் பொங்குமே…
கருணை சிந்துதே…

குழு : காற்று மலையில் மோதலாம்…
அந்த கடலில் சேரலாம்…
இந்த குழந்தைக் கூட்டத்தில்…
இவனும் தென்றலே…

ஆண் : மன்னாதி மன்னா…
வீராதி வீரா…
எங்கள் நண்பா பாண்டி…

ஆண் : விளையாடும் சிங்கம்…
விலையில்லா தங்கம்…
எங்கள் நண்பா…
குழு : பவர் பாண்டி…

ஆண் : புதிய வானம் பறந்துப்பார்க்க ஏங்கும்…
பூக்கள் சிறகை நீட்டுதாம்…

BGM


Notes : Vaanam Song Lyrics in Tamil. This Song from Power Paandi (2017). Song Lyrics penned by Selvaraghavan. வானம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top