thoovaanam-song-lyrics

தூவானம் தூவத் தூவ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஷால் டட்லணி & சுனிதா சாரதிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Thoovaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : குயிலென மனம் கூவும்…
மயிலெனத் தரைத் தாவும்…
என்னோடு நீ நிற்கும் வேளையில்…
புழுதியும் பளிங்காகும்…
புழுக்களும் புனுகாகும்…
கால் வைத்து…
நீ செல்லும் சாலையில்…

ஆண் : யார் தீங்கு செய்தாலும்…
மன்னிக்கத் தோன்றும்…
நீ தந்த இம்மாற்றம்…
என் வெட்கம் தூண்டும்…
காதல்… வந்தால்…
கோபம்… எல்லாமே…
காற்றோடு காற்றாகப் போகின்றதே…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : இரவுகள் துணை நாடும்…
கனவுகள் கடைப் போடும்…
நீ இல்லை என்றால் நான் காகிதம்…
விரல்களில் விரல் கோர்க்க…
உதட்டினை உவா்பாக்க…
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்…

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை…
ரிங்காரம்தான் செய்து…
கொல்கின்ற ஆணை…
நீ தான் கைத் தூக்க…
வேண்டும் என் கண்ணே…
கை நீட்டு தாலாட்டு…
கண் மூடுவேன்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

BGM


Notes : Thoovaanam Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Thamarai. தூவானம் தூவத் தூவ பாடல் வரிகள்.