தூவானம் தூவத் தூவ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைவிஷால் டட்லணி & சுனிதா சாரதிடி. இமான்ரோமியோ ஜூலியட்

Thoovaanam Song Lyrics in Tamil


BGM

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை…
நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : குயிலென மனம் கூவும்…
மயிலெனத் தரைத் தாவும்…
என்னோடு நீ நிற்கும் வேளையில்…
புழுதியும் பளிங்காகும்…
புழுக்களும் புனுகாகும்…
கால் வைத்து…
நீ செல்லும் சாலையில்…

ஆண் : யார் தீங்கு செய்தாலும்…
மன்னிக்கத் தோன்றும்…
நீ தந்த இம்மாற்றம்…
என் வெட்கம் தூண்டும்…
காதல்… வந்தால்…
கோபம்… எல்லாமே…
காற்றோடு காற்றாகப் போகின்றதே…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…

BGM

ஆண் : இரவுகள் துணை நாடும்…
கனவுகள் கடைப் போடும்…
நீ இல்லை என்றால் நான் காகிதம்…
விரல்களில் விரல் கோர்க்க…
உதட்டினை உவா்பாக்க…
நீ வந்தால் நான் வண்ண ஓவியம்…

ஆண் : நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை…
ரிங்காரம்தான் செய்து…
கொல்கின்ற ஆணை…
நீ தான் கைத் தூக்க…
வேண்டும் என் கண்ணே…
கை நீட்டு தாலாட்டு…
கண் மூடுவேன்…

ஆண் : தூவானம் தூவத் தூவ…
மழைத் துளிகளில்…
உன்னைக் கண்டேன்…
என் மேலே ஈரம் ஆக…
உயிர் கரைவதை நானேக் கண்டேன்…

ஆண் : கடவுள் வரங்கள்…
தரும் பல கதைக் கேட்டேன்…
அவரே வரமாய் வருவதை…
இங்குப் பார்த்தேன்…
வேறு என்ன வேண்டும் வாழ்வில்…

BGM


Notes : Thoovaanam Song Lyrics in Tamil. This Song from Romeo Juliet (2015). Song Lyrics penned by Thamarai. தூவானம் தூவத் தூவ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top