Tag Archives: எம்.ஜி.ஸ்ரீகுமார்

கரிசல் தரிசல்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்தாஜ் மஹால்

Karisal Tharasal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
உசுர கடந்து மனசும் குதிக்க…
வரவா ஊரும் அடங்க…

பெண் : நாலு தெருவும் தொறந்து கெடக்க…
நாயும் நரியும் முழிச்சு கெடக்க…
முடியுமா என்ன நெருங்க…

ஆண் : ஊரு மலை எல்லாம் கோலி விளையாடி…
வருவேன் கோழி ஒறங்க…
கண்ணுபடுமிண்டு காத்துரூவம் கொண்டு…
வருவேன் நிலவு மயங்க…

ஆண் : கரிசல் தரிசல் நிலவு கொதிக்க…
வரவா ஊரும் அடங்க…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…

ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ஆஹான் ஆஹான் ஆகான்…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே…
பெண் : ன னா ன னா நானா…
ஆண் : ஏ மச்சக்கண்ணியே… ஏ மச்சக்கண்ணியே…

BGM

பெண் : என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…
என் அடி வயித்தில்தான் புளி கரைக்க வந்தேபுட்டான்…
என்ன கொன்னேபுட்டான்…

ஆண் : ஊரடங்கிடுச்சு போர் தொடங்கிடுச்சு…
எல்லா நெசம் இனி நீயே என் வசம்…
நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம்தான் கூரை பிரிக்கிறதோ… ஓ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

ஆண் : நான் வரவா கண்ணே நான் வரவா…
வாய்ப்பிருந்தால் வந்து வாய் தரவா…

ஆண் : ஓட்டு கூரையில என்ன நடக்கிறதோ…
கொடுக்கிற தெய்வம் தான் கூரை பிரிக்கிறதோ…
கூரை பிரிச்சபடி மேல அழைக்கிறதோ… ஓஹ்…

BGM

ஆண் : மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…
மேல் காட்டு மூலையில மேகம் இல்ல மின்னலில்ல…
பூமி நனைஞ்சிருச்சு…

ஆண் : பழம் நழுவி பாலில் விழுந்தாச்சு…
அது நழுவி வாயில் விழுந்தாச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…

ஆண் : சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…
சுண்ணாம்பு கேட்கபோயி சொக்க தங்கம் வாங்கி வந்தேன்…
காலம் கனிஞ்சிருச்சு…

பெண் : அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…
அட வானோடும் சேராம மண்ணோடும் கூடாம…
மத்தியில் மெதந்தாச்சு…


Notes : Karisal Tharasal Song Lyrics in Tamil. This Song from Taj Mahal (1999). Song Lyrics penned by Vairamuthu. கரிசல் தரிசல் பாடல் வரிகள்.


நெனச்சபடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎம்.ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீனிவாஸ், கங்கா சித்தராசு & காஞ்சனாஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Nenachapadi Song Lyrics in Tamil


BGM

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

ஆண் : என் தோள்களே தோட்டம் என்று…
என்னாளுமே தொத்திக்கொள்ளும்…
காற்றல்லவா நீ என் கண்ணே…

ஆண் : கல்யாண நாளில் மாலை கொள்ள…
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல…
அந்த வானம் நந்தவனம் ஆகும்…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

ஆண் : உன் கணவன் நாளைதான் வர வேண்டும்…
உயிர்க் காதல் நெஞ்சையே தர வேண்டும்…

ஆண் : மணப்பந்தல் தோரணம் நான் போட…
மணவாளனோடு உன் கைகூட…
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட…

BGM

ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…

BGM

ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…

ஆண் : வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக…
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக…

ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…

ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…

ஆண் : இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்…
நீ வாழ்க… நலமாக… நீ வாழ்க… நலமாக…

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

BGM

ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…

BGM

ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி…
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி…

ஆண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…

BGM

பெண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…

ஆண் : இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்…
நீ வாழ்க… நலமாக…

BGM

பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…

ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…

பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…


Notes : Nenachapadi Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. நெனச்சபடி பாடல் வரிகள்.


தாண்டியா ஆட்டமுமாட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகவிதா கிருஷ்ணமூர்த்தி, உன்னி மேனன் & எம்.ஜி. ஸ்ரீகுமார்ஏ.ஆர்.ரகுமான்காதலர் தினம்

Dhaandiya Song Lyrics in Tamil


BGM

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…

BGM

ஆண் : உன்னைக்கண்டு எண்ணம் யாவும் மெல்ல…
ஊமையாகி நின்றதென்ன சொல்ல…
நூறு வார்த்தை அல்ல அல்ல…
ஒரு வார்த்தை புரியாதா…

பெண் : எந்த வார்த்தை சொல்லவில்லையோ நீ…
அந்த வார்த்தை எந்தன் கண்களால் நான்…
நூறு ஜாடையில் சொன்னேனே…
தெரியாதா புரியாதா…

ஆண் : ஓஓ… மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
மையைப்போல நானும் கண்ணில் சேர வேண்டும்…
பூவைப்போல நானும் உந்தன் கூந்தல் சேர வேண்டும்…

பெண் : ஓ… கண்ணில் வைத்த மையும் கரைந்து போகக்கூடும்…
கூந்தல் வைத்த வண்ணப் பூவும் வாடிப் போகக்கூடும்…

ஆண் : சிறு காதல் நெஞ்சை நான் தரலாமா…
உன் கணவனாக நான் வரலாமா…

பெண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : உயிரே வா…
பெண் : அன்பே வா…

ஆண் : தாண்டியா ஆட்டமுமாட தசராக் கூட்டமும் கூட…
குஜராத் குமரிகளாட காதலன் காதலிய தேட…
அவள் தென்படுவாளோ எந்தன் கண் மறைவாக…
இன்று காதல் சொல்வாளோ நெஞ்சோடு…
அவள் எங்கே என காணாமல் வாட…
என்னைத்தான் ஏங்க வைப்பாளோ…

BGM

பெண் : காதல் பார்வைகள் எல்லாமே அழகு…
காதல் வார்த்தைகள் எல்லாமே கவிதை…
காதல் செய்வதே எந்நாளும் தெய்வீகம் தெய்வீகம்…

ஆண் : காதல் என்பதைக் கண்டு பிடித்தவன்…
காலம் முழுவதும் நன்றிக்குரியவன்…
காதல் இல்லையேல் என்னாகும் பூலோகம் பூலோகம்…

பெண் : ஓஹோ… உள்ளம் என்ற ஒன்றை உன்னிடத்தில் தந்தேன்…
தந்த உள்ளம் பத்திரமா தெரிந்துகொள்ள வந்தேன்…

ஆண் : ஓஹோ… என்னைப் பற்றி நீதான் எண்ணியது தவறு…
என்னைவிட உந்தன் உள்ளம் என்னுடைய உயிரு…

பெண் : இரு உயிர்கள் என்பதே கிடையாது…
இதில் உனது எனது எனப் பிரிவேது…

ஆண் : இந்த வார்த்தை மட்டுமே நிஜமானால்…
ஒரு ஜென்மம் போதும்…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

பெண் : உயிரே வா…
ஆண் : அன்பே வா…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் : வாலிப நெஞ்சங்கள் உறவு கொண்டாட…
வந்தது இங்கொரு ராத்திரி…
தாண்டியா என்றொரு ராத்திரி…

ஆண் & பெண் : துணை செய்ய நாங்கள் உண்டு தோழரே…
துணிந்து நீ காதல் செய்வாய் தோழியே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM

ஆண் & பெண் : உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…
உங்களாலே என்றும் மண்ணில் காதல் வாழுமே…

BGM


Notes : Dhaandiya Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. தாண்டியா ஆட்டமுமாட பாடல் வரிகள்.


Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics in Tamil

சின்னச் சின்ன மழைத்துளிகள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி.ஸ்ரீகுமார்ஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண் கண்…
ஒரு துளி விழுது…
ஒரு துளி விழுது…
கண் கண் கண் கண்…
ஒரு துளி விழுது…
ஒரு துளி விழுது…

ஆண் : ஒரு துளி இரு துளி…
சில துளி பல துளி…
படபட தடதட சடசடவென சிதறுது…

BGM

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…
சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

BGM

ஆண் : சிறு பூவினிலே விழுந்தால்…
ஒரு தேன் துளியாய் வருவாய்…
சிறு சிப்பியிலே விழுந்தால்…
ஒரு முத்து எனவே முதிர்வாய்…

ஆண் : பயிர் வேரினிலே விழுந்தால்…
நவதானியமாய் விளைவாய்…
என் கண்விழிக்குள் விழுந்ததனால்…
கவிதையாக மலர்ந்தாய்…

ஆண் : அந்த இயற்கை அன்னை படைத்த…
ஒரு பெரிய ஷவர் இது…
அட இந்த வயது கழிந்தால்…
பிறகெங்கு நனைவது…

ஆண் : இவள் கன்னியென்பதை…
இந்த மழை கண்டறிந்து சொல்லியது…

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

BGM

ஆண் : மழை கவிதை கொண்டு வருது…
யாரும் கதவடைக்க வேண்டாம்…
ஒரு கருப்புக்கொடி காட்டி…
யாரும் குடை பிடிக்க வேண்டாம்…

ஆண் : இது தேவதையின் பரிசு…
யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்…
நெடுஞ்சாலையிலே நனைய…
ஒருவர் சம்மதமும் வேண்டாம்…

ஆண் : அந்த மேகம் சுரந்த பாலில்…
ஏன் நனைய மறுக்கிறாய்…
நீ வாழவந்த வாழ்வில்…
ஒரு பகுதி இழக்கிறாய்…

ஆண் : நீ கண்கள் மூடிக் கரையும்போது…
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்…
நீ கண்கள் மூடிக் கரையும்போது…
மண்ணில் சொர்க்கம் எய்துவாய்…

BGM

ஆண் : சக்கரவாகமோ மழையை அருந்துமாம்…
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ…
மழையின் தாரைகள் வைர விழுதுகள்…
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ…

ஆண் : சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…
சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ…
மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ…

BGM


Notes : Chinna Chinna Mazhai Thuligal Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. சின்னச் சின்ன மழைத்துளிகள் பாடல் வரிகள்.


என் சுவாசக் காற்றே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎம்.ஜி. ஸ்ரீகுமார் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

En Swasa Kaatre Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி…
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி…

ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம்…
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்…

ஆண் : கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…
காதல் தோன்றுமா…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…

BGM

ஆண் : இதயத்தைத் திருடிக் கொண்டேன்…
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்…
இதயத்தைத் திருடிக் கொண்டேன்…
என் உயிரினைத் தொலைத்துவிட்டேன்…
தொலைந்ததை அடையவே மறுமுறை காண்பேனா…

BGM

ஆண் : என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…
உன் நினைவுகள் என் சுவாசமானது ஏனடி…
நான் பாடும் பாட்டே பன்னீர் ஊற்றே நீயடி…

ஆண் : முதல் முதல் வந்த காதல் மயக்கம்…
மூச்சுக் குழல்களின் வாசல் அடைக்கும்…

ஆண் : கைகள் தீண்டுமா…
கண்கள் காணுமா…
காதல் தோன்றுமா…
என் சுவாசக் காற்றே சுவாசக் காற்றே நீயடி…

BGM


Notes : En Swasa Kaatre Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. என் சுவாசக் காற்றே பாடல் வரிகள்.


நெஞ்சினிலே நெஞ்சினிலே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்து & கிரீஷ் புத்தஞ்சேரிஎம்.ஜி.ஸ்ரீகுமார் & எஸ் .ஜானகிஏ.ஆர்.ரகுமான்உயிரே

Nenjinile Nenjinile Song Lyrics in Tamil


பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே…
நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…

குழு (ஆண்கள்) : கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ…
முந்திரி முத்தொளி சிந்திக்கோ…
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே…
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே… ஹோய்…

குழு (ஆண்கள்) : கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ…
முந்திரி முத்தொளி சிந்திக்கோ…
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே…
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க நிலாவே… ஹோய்…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி… ஹோய்…

BGM

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே… ஊஞ்சலே…

BGM

பெண் : ஓரப் பார்வை வீசுவான்…
உயிரின் கயிறில் அவிழ்குமே…
ஓரப் பார்வை வீசுவான்…
உயிரின் கயிறில் அவிழ்குமே…

பெண் : செவ்விதழ் வருடும்போது தேகத்தங்கம் உருகுமே…
உலகின் ஓசை அடங்கும்போது…
உயிரின் ஓசை தொடங்குமே…
வான் நிலா நாணுமே…
முகில் இழுத்துக் கண் மூடுமே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

பெண் : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே ஊஞ்சலே…

குழு (ஆண்கள்) : ஹேய்… குருவாரி கிளியே… குருவாரி கிளியே…
குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை…
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே…

குழு (ஆண்கள்) : குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை…
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே…
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி… ஹோய்…

குழு (பெண்கள்) : தங்கக் கொலுசல்லி…
கொலுங் குயில்லல்லி…
மாரன மயில்லல்லி…

பெண் : குங்குமம் ஏன் சூடினேன்…
கோலமுத்தத்தில் கலையத்தான்…
கூறைப்பட்டு ஏன் உடுத்தினேன்…
கூடல் பொழுதில் கசங்கத்தான்…

பெண் : மங்கைக் கூந்தல் மலர்கள் எதற்கு…
கட்டில்மேலே நசுங்கத்தான்…
தீபங்கள் அணைப்பதே…
புதிய பொருள் நாம் தேடத்தான்…

குழு (பெண்கள்) : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…

குழு (பெண்கள்) : நெஞ்சினிலே நெஞ்சினிலே ஊஞ்சலே…
நாணங்கள் என் கண்ணிலே…
சிவந்ததே என் மஞ்சளே…
கல்யாணக் கல்யாணக் கனவு என் உள்ளே…
நெஞ்சினிலே ஊஞ்சலே…
ஊஞ்சலே…


Notes : Nenjinile Nenjinile Song Lyrics in Tamil. This Song from Uyire (1998). Song Lyrics penned by Vairamuthu & Gireesh Puthenchery. நெஞ்சினிலே நெஞ்சினிலே பாடல் வரிகள்.