பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வாலி | எம்.ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீனிவாஸ், கங்கா சித்தராசு & காஞ்சனா | ஏ.ஆர்.ரகுமான் | காதலர் தினம் |
Nenachapadi Song Lyrics in Tamil
—BGM—
பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
ஆண் : என் தோள்களே தோட்டம் என்று…
என்னாளுமே தொத்திக்கொள்ளும்…
காற்றல்லவா நீ என் கண்ணே…
ஆண் : கல்யாண நாளில் மாலை கொள்ள…
கண்ணாளனின் பூஞ்சோலை செல்ல…
அந்த வானம் நந்தவனம் ஆகும்…
பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…
பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…
ஆண் : உன் கணவன் நாளைதான் வர வேண்டும்…
உயிர்க் காதல் நெஞ்சையே தர வேண்டும்…
ஆண் : மணப்பந்தல் தோரணம் நான் போட…
மணவாளனோடு உன் கைகூட…
உன் தந்தை உள்ளந்தான் ஊஞ்சல் ஆட…
—BGM—
ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…
—BGM—
ஆண் : காதலெனும் சொல்லை நானும் சொல்லவில்லை…
சொல்ல வந்த நேரம் காதல் எந்தன் கையிலில்லை…
ஆண் : வாழ்வு தந்த வள்ளல் வாங்கிக்கொண்டு போக…
வாழ்த்துச் சொல்ல நானும் வந்தேன் கண்கள் ஈரமாக…
ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…
ஆண் : என்றும் எனது கண்ணிலே உன் பிம்பம்…
உன்னை எண்ணி வாழ்வதே என் இன்பம்…
ஆண் : இங்கு நீ சிரிக்க நான் பார்த்தாலே எந்தன் காதல் வாழும்…
நீ வாழ்க… நலமாக… நீ வாழ்க… நலமாக…
பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
—BGM—
ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…
—BGM—
ஆண் : அல்லி விழியோரம் அஞ்சனத்தைத் தீட்டி…
அந்தி வண்ணப் பின்னல் மீது தாழை மலர் சூட்டி…
ஆதி முதல் அந்தம் ஆபரணம் பூட்டி…
அன்னமிவள் மேடை வந்தால் மின்னல் முகம் காட்டி…
ஆண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…
—BGM—
பெண் : கெட்டி மேளம் கொட்டிட மணப்பெண்ணை…
தொட்டுத் தாலி கட்டினான் மாப்பிள்ளை…
ஆண் : இந்த ஏழை நெஞ்சமும் நீ வாழ என்றும் பூக்கள் தூவும்…
நீ வாழ்க… நலமாக…
—BGM—
பெண் : நெனச்சபடி நெனச்சபடி மாப்பிள்ள அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
உனக்கெனப் பிறந்தானோ உயிருடன் கலந்தானோ…
ஆண் & பெண் : நெனச்சபடி நெனச்சபடி மணப்பொண்ணு அமைஞ்சதடி…
உனக்கெனப் பிறந்தாளோ உயிருடன் கலந்தாலோ…
பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…
பெண் : மருதாணிக் கோலம் போட்டு…
மணிக்கையில் வளையல் பூட்டு…
இந்த ரோஜாவுக்கு ரோஜாப்பூ நீ சூட்டு…
Notes : Nenachapadi Song Lyrics in Tamil. This Song from Kadhalar Dhinam (1999). Song Lyrics penned by Vaali. நெனச்சபடி பாடல் வரிகள்.