Tag Archives: அனிதா கார்த்திகேயன்

Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil

புத்தம் புது காலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்அனிதா கார்த்திகேயன்இளையராஜாமேகா

Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil


BGM

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : பூவில் தோன்றும் வாசம்…
அதுதான் ராகமோ…
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்…
அதுதான் தாளமோ…

பெண் : மனதின் ஆசைகள் மலரின் கோலங்கள்…
குயிலோசையின் பரிபாஷைகள்…
அதிகாலையின் வரவேற்புகள்…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…

BGM

பெண் : வானில் தோன்றும் கோலம்…
அதை யார் போட்டதோ…
பனி வாடை வீசும் காற்றில்…
சுகம் யார் சேர்த்ததோ…

பெண் : வயதில் தோன்றிடும்…
நினைவில் ஆனந்தம்…
வளர்ந்தோடுது இசைபாடுது…
வலி கூடிடும் சுவைகூடுது…

பெண் : புத்தம் புது காலை…
பொன்னிற வேளை…
என் வாழ்விலே தினந்தோறும் தோன்றும்…
சுகராகம் கேட்கும் எந்நாளும் ஆனந்தம்…

BGM


Notes : Putham Pudhu Kaalai Song Lyrics in Tamil. This Song from Megha (2014). Song Lyrics penned by Gangai Amaran. புத்தம் புது காலை பாடல் வரிகள்.


ராக்காச்சி ரங்கம்மா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்அனிதா கார்த்திகேயன்சித்து குமார்சிவப்பு மஞ்சள் பச்சை

Raakaachi Rangamma Song Lyrics in Tamil


BGM

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்லிங்கா டார்ச்சர்ரா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
காத்தாடி நூலா அந்து…
போனாலம்மா…

பெண் : தார் சாலை சிங்கம்தான்…
சேலன்ஞ் பண்ணிதான்…
வந்தானே தொல்லை தந்தானே…

பெண் : ஏ… கோளாறு இல்லாத…
பூலோகம் காணாத…
மாப்பிள்ளை கேட்குறானே… ஏ… ஏ…

பெண் : பாவமே பாக்காம…
வச்சிதான் செய்யிறான்…
வெத வெதமா போட்டோ பார்த்தும்…
வேணான்னு சொல்லுறான்…

பெண் : ரன்வீரும் ரன்பீரும்…
மிக்ஸ் ஆக்கி கேட்க்குறான்…
இவனோட அக்கா என்ன…
தீபிகா படுகோன்னா…

BGM

பெண் : ஏதேதோ தொல்லை தந்து போனாலும்…
இவன் மேல கோவம் வல்லை…
அது ஏன்னு இவள கேள்வி கேட்டாக்கா…
அட கமுக்கமா சிரிப்பா உள்ள…

குழு (பெண்கள்) : புரியாத ஒன்னு…
அவளையும் இவனையும் பூட்டுது…
அறியாம நெஞ்சு…
அடிக்கடி அடிதடி பண்ணுது…

பெண் : இவனோட உள்ளம் வெள்ளை…
விழுந்துட்டா படிச்ச புள்ள…
அடடா எலியும் புலியும்…
மனசைத்தான் மாத்திக்கிச்சே…

பெண் : ராக்காச்சி ரங்கம்மா…
ராசாத்தி மங்கம்மா…
டார்ச்சர்ரா டார்லிங்கா…
பாத்தாலம்மா…

பெண் : ஆகாட்டி அங்கம்மா…
அக்மார்க்கு தங்கம்மா…
சில்வண்ட போல சுத்தி…
வந்தாலம்மா…

பெண் : டா போட்டா டேலண்ட்டா…
டி போட்டான் டீசன்ட்டா…
ராவெல்லாம் வாட்ஸ்அப் கலாட்டா…

பெண் : அவ தீ வெச்சா சைலண்டா…
பத்திதான் வையேன்டா…
நாள் எல்லாம் போச்சே நோ என்டா…

பெண் : பொல்லாத புள்ளான்டான்…
நிக்காம வெள்ளான்டான்…
ரக ரகமா ரகள செஞ்சி…
இவ மனசு களவான்டான்…

பெண் : கில்லாடி சுள்ளான்டான்…
நெஞ்செல்லாம் உட்காந்தான்…
ஒரு உறவ தேடி வந்து…
புது உறவ கொண்டாந்தான்…


Notes : Raakaachi Rangamma Song Lyrics in Tamil. This Song from Sivappu Manjal Pachai (2019). Song Lyrics penned by Mohan Rajan. ராக்காச்சி ரங்கம்மா பாடல் வரிகள்.


மன்னவனே மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசூரஜ் சந்தோஷ், எம். எல். ஆர். கார்த்திகேயன், சின்மயி & அனிதா கார்த்திகேயன்தேவி ஸ்ரீ பிரசாத்புலி

Mannavanae Mannavanae Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

—BGM—

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

பெண் : கத்தியின்றி ரத்தமின்றி…
வெறும் கண்ணால் கொலை செய்வாய்…
இவள் ராணி கோட்டை இளவரசி…
உனக்கென்ன வேண்டும்…
பொன்னின் மலையா… பெண்ணின் சிலையா…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : என் வாளும் வேலும் வெல்ல…
வானை முட்டித்தள்ள…
சிறகு முளைத்த வேங்கை நானே இப்போது…

—BGM—

பெண் : என் வானம் தாண்டி செல்ல…
நீ மாயபறவை அல்ல…
என்னை மீறி வேங்கை எங்கும் தப்பாது…

—BGM—

ஆண் : வானில் விண்மீனோ நானே…
கடலில் கருமீனோ நானே…
ரெண்டும் அட உந்தன் கையில் சேராது…

பெண் : வானம் என் வளையல் பெட்டி…
கடலோ என் நீச்சல் தொட்டி…
மீன்கள் என் காலின் மெட்டி…
மாயஜாலம் ஓயாதிங்கே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாயலோக மன்மதனே…
தீக்கடலை தாண்டிவரும் தென்னவனே…

பெண் : வல்லவனே வல்லவனே…
யானை பலம் உள்ளவனே…
வானவில்லால் அம்பு விடும் வல்லவனே…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
ஆண்டவன் இட்ட சட்டம்…
மேலோர் கீழோர் எல்லாம் விதியின் உத்தரவு…

—BGM—

ஆண் : ஹே… ஆண்டான் அடிமை எல்லாம்…
சட்டம் அல்ல திட்டம்…
இறைவன் பேரால் மனிதன் செய்த சச்சரவு…

—BGM—

ஆண் : காட்டில் இது எங்கள் ஆட்சி…
நீயோ ஒரு பட்டாம்பூச்சி…
காற்றை உன் சிறகில் ஏற்ற பார்க்காதே…

ஆண் : பூவில் சிறு தேனை கொல்ல…
ஆட்சி அது தேவை இல்லை…
எரியும் தீக்குச்சி போதும்…
கரியாய் மாறும் மொத்தக்காடும்…

—BGM—

பெண் : ஆண்மையுள்ள ராணி இவள்…
ஆள வந்த ஞானி இவள்…
ஆண்களோடு போட்டியிட்டு தோற்றதில்லை…

பெண் : வான் அணிந்த வெண்ணிலவும்…
தேய்வதுண்டு சாய்வதுண்டு…
நான் அணிந்த கிரீடம் என்றும் சாய்வதில்லை…

—BGM—


Notes :  Mannavanae Mannavanae Song Lyrics in Tamil. This Song from Puli (2015). Song Lyrics penned by Vairamuthu. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.