பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
புலமைப்பித்தன் | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | மரகதமணி | அழகன் |
Sathimalli Poocharame Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
—BGM—
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
—BGM—
ஆண் : எனது வீடு எனது வாழ்வு…
என்று வாழ்வது வாழ்க்கையா…
இருக்கும் நாலு சுவருக்குள்ளே…
வாழ நீ ஒரு கைதியா…
ஆண் : தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்…
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்…
ஆண் : கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது…
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்…
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்…
அதில் இன்பத்தைத் தேடோணும்…
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
—BGM—
ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது…
நாமும் சாப்பிட எண்ணுவோம்…
உலகமெல்லாம் சிரிக்கும்போது…
நாமும் புன்னகை சிந்துவோம்…
ஆண் : யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…
ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா…
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்…
கேட்டுக்கோ ராசாத்தி…
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…
ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…
Notes : Sathimalli Poocharame Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சாதிமல்லிப் பூச்சரமே பாடல் வரிகள்.