பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
வைரமுத்து | ஹரிஹரன் | ஹாரிஸ் ஜெயராஜ் | உள்ளம் கேட்குமே |
Oh Maname Song Lyrics in Tamil
ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…
ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…
ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…
—BGM—
ஆண் : மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து…
வானத்தில் உறங்கிட ஆசையடி…
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து…
முள்ளுக்குள் எரிந்தது காதலடி…
ஆண் : கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்…
கணுக்க தோறும் முத்தம்…
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்…
கைகள் முழுக்க ரத்தம்…
ஆண் : துளைகள் இன்றி நாயனமா…
தோல்விகள் இன்றி பூரணமா…
ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…
—BGM—
ஆண் : இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து…
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை…
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து…
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை…
ஆண் : இன்பம் பாதி துன்பம் பாதி…
இரண்டும் வாழ்வின் அங்கம்…
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்…
நகையாய் மாறும் தங்கம்…
ஆண் : தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி…
வெற்றிக்கு அதுவே ஏணியடி…
ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…
ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…
ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
Notes : Oh Maname Song Lyrics in Tamil. This Song from Ullam Ketkumae (2005). Song Lyrics penned by Vairamuthu. ஓ மனமே பாடல் வரிகள்.