ஓ மனமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஹரிஹரன்ஹாரிஸ் ஜெயராஜ்உள்ளம் கேட்குமே

Oh Maname Song Lyrics in Tamil


ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

BGM

ஆண் : மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து…
வானத்தில் உறங்கிட ஆசையடி…
நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து…
முள்ளுக்குள் எரிந்தது காதலடி…

ஆண் : கனவுக்குள்ளே காதலைத் தந்தாய்…
கணுக்க தோறும் முத்தம்…
கனவு கலைந்து எழுந்து பார்த்தால்…
கைகள் முழுக்க ரத்தம்…

ஆண் : துளைகள் இன்றி நாயனமா…
தோல்விகள் இன்றி பூரணமா…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

BGM

ஆண் : இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து…
இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை…
துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து…
துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை…

ஆண் : இன்பம் பாதி துன்பம் பாதி…
இரண்டும் வாழ்வின் அங்கம்…
நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால்…
நகையாய் மாறும் தங்கம்…

ஆண் : தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி…
வெற்றிக்கு அதுவே ஏணியடி…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…
சில்லுசில்லாய் உடைந்தது ஏன்…

ஆண் : மழையைத்தானே யாசித்தோம்…
கண்ணீர் துளிகளைத் தந்தது யார்…
பூக்கள் தானே யாசித்தோம்…
கூழாங்கற்களை எறிந்தது யார்…

ஆண் : ஓ மனமே ஓ மனமே…
உள்ளிருந்து அழுவது ஏன்…
ஓ மனமே ஓ மனமே…


Notes : Oh Maname Song Lyrics in Tamil. This Song from Ullam Ketkumae (2005). Song Lyrics penned by Vairamuthu. ஓ மனமே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top