ps-anthem-song-lyrics-in-tamil

பி எஸ் அன்தம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவா ஆனந்த்ஏ.ஆர்.ரகுமான் & நபிலா மான்ஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

PS Anthem Song Lyrics in Tamil


BGM

ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும் பற்றி எரியும் இரத்தம்…
கனவில் வரும் நித்தம் நித்தம்…
கடலோடிடும் களவாடிட வா யுத்தம் யுத்தம்…

ஆண் : தீயவற்றை வெல்லும் புலியின் கொடியே நிற்கும் பார்…
இவை நிகழும் வரை பார்…
சொர்க்கம் சொர்க்கம்…

ஆண் : இதுவே சோழம் இதுவே இதுவே சோழம்…
பூமியில் உலகே சொர்க்கம்…
சோழம் சோழம் சோழம்…

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

ஆண் : நீ கண்நோக்க பனிமலை கொஞ்சம் உருகிட…
நீ கை நீட்ட விண்ணகம் மண்ணில் இறங்கிட…

ஆண் : சட் சட் சட் சதி வரையும்…
மண்ணுக்கே உன்வேலி…
ரன் ரன் வீரன்தான்…

ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம்…
போதும் போதும் எந்நாளும்…
இப்போதே கொண்டாடவே…

ஆண் : அன்பே அகரம் அதுவே சிகரம்…
அதை மறைந்த துளி ஊடே…
பரந்து கிடக்கும் வானே…

ஆண் : இல்லா இடமும் இறைவன் உறைவான்…
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…

ஆண் : ராஜா ராஜா ராஜனோ…
நாளும் வென்ற வீரனோ…
பாரில் யாரும் அடிமை இல்லை என்று கூற வா…

ஆண் : இம் மேதினில் யாங்கணும் மானுடம் ஓங்கிட…
சூரியனை சூடி கொண்டவா…

ஆண் : யாதுமாகி நின்று என்னை…
யாவிலும் நிறந்தனை…
ஆழி வானம் காணும் ஆளும் மாமன்னவா…

ஆண் : உன் வாள் முனை கீறிட…
போர் நிலம் ஆடிட…
சூள் கொண்ட காற்றாக வா…

BGM


Notes : PS Anthem Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan 2 (2023). Song Lyrics penned by Siva Ananth. பி எஸ் அன்தம் பாடல் வரிகள்.