பூ மீது யானை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புகழேந்திமால்குடி சுபாவிஜய் ஆண்டனிடிஷ்யூம்

Poo Meedhu Song Lyrics in Tamil


பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

பெண் : போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : ஹே… உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே உடையாதே…

பெண் : உடைத்துப் பார்க்கும் இதயம் உனது…
படைத்து பார்ப்பதை அறியாதே…
குளத்தில் விழுந்து தெறிக்கும் நிலவு…
நிஜத்தின் உலகத்தில் உடையாதே…

பெண் : காதல் போலவே நோயும் எல்லையே…
யாவும் உண்மைதானே…
இதை காலம் காலமாய் பலரும் சொல்லியும்…
கேட்கவில்லை நானே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…

BGM

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ… ஆஆ ஹா…

பெண் : விலகும்போது நெருங்கும் காதல்…
அருகில் போனால் விலகிடுமோ…
விலங்கு மாட்டி சிறையில் பூட்டி…
விருப்பம் போல அது வலி தரமோ…

பெண் : வேற வேற நா நினைவு போகையில்…
காதல் கொள்வது பாவம்…
அது சேரும் வரையிலே யாரும் துணையில்லே…
ஆதி கால சாபம்…

BGM

பெண் : பூ மீது யானைபூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…
போ என்று சொன்னால் வரும் நினைவும் போகுமோ…
போராடும் அன்பில் அட ஏன்தான் காயமோ…

பெண் : கண்ணீர் கவிதைகள் இந்தக் கண்கள் எழுதுதே…
கவிதை வரிகளால் எந்தன் கன்னம் நிறையுதே…
இலைகள் உதிர்வதால் கிளையும் சுமைகள் கூடுதே…
உதிரும் கிளைகளோ மறந்து காற்றில் போகுதே…

பெண் : பூ மீது யானை பூ வலியைத் தாங்குமோ…
தீ மீது வீணை போய் விழுந்தால் பாடுமோ…


Notes : Poo Meedhu Song Lyrics in Tamil. This Song from Dishyum (2006). Song Lyrics penned by Pugazhendhi. பூ மீது யானை பாடல் வரிகள்.