பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
விவேகா | ஹரிஷ் ராகவேந்திரா, சாதனா சர்கம் & ஜாக் ஸ்மெல்லி | வித்யாசாகர் | ரன் |
Minsaram En Meedhu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்…
உதடுகள் வேர்க்கும்வரை…
உண்மையில் நானும் யோக்கியன்தானடி…
உன்னைப் பார்க்கும்வரை…
ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…
ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
—BGM—
பெண் : என்னைவிட இந்த உலகிலே…
உன்னை மிகமிக விரும்பினேன்…
ஆண் : உந்தன் அன்பு தரும் சுகத்தினால்…
இன்னும் உயிருடன் இருக்கிறேன்…
பெண் : தீ கூட தின்னத் தின்ன தித்திக்கும்…
என்று கண்டேன்…
அன்பே நீ பக்கம் வந்தால்…
புத்திக்கு ஓய்வு தந்தேன்…
ஆண் : பெண் என்றால் மென்மை என்று…
கவிதைகள் சொல்லி வந்தேன்…
உன்னை நான் பார்த்த பின்தான்…
கன்னத்தில் போட்டுக்கொண்டேன்…
ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…
—BGM—
பெண் : மெல்ல மெல்ல எந்தன் உயிரினை…
மென்று தின்று இன்று சிரிக்கிறாய்…
ஆண் : கொள்ளை அடித்தது நீயடி…
என்னைக் குற்றம் சொல்லித் திரிகிறாய்…
பெண் : பொல்லாத இம்சை ஒன்றில்…
புரியாமல் மாட்டிகொண்டேன்…
இம்சைக்கு இன்னொரு பேர்…
காதல்தான் என்று கண்டேன்…
ஆண் : அன்பே நீ அருகே வந்தால்…
என் உலகம் சுருங்கக் கண்டேன்…
ஒரு கோப்பை தண்ணீர் காதல்…
அதில் நீந்தக் கற்றுக்கொண்டேன்…
ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…
ஆண் : மின்சாரம் என் மீது பாய்கின்றதே…
பெண் : உன் கண்கள் என் கண்ணை மேய்கின்றதே…
ஆண் : உன் வார்த்தை என் பாஷை ஆகின்றதே…
பெண் : உள்நெஞ்சில் மின்னல் பூ பூக்கின்றதே…
ஆண் : நீ உத்தரவிட்டால் முத்தம் தருவேன்…
உதடுகள் வேர்க்கும்வரை…
உண்மையில் நானும் யோக்கியன்தானடி…
உன்னைப் பார்க்கும்வரை…
ஆண் : காதல் ஸியே ஓ காதல் ஸியே…
காதல் ஸியே காதல் ஸியே…
Notes : Minsaram En Meedhu Song Lyrics in Tamil. This Song from Run (2004). Song Lyrics penned by Viveka. மின்சாரம் என் மீது பாடல் வரிகள்.