ஊரறிய பேரெடுத்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாசாது

Oorariya Pereduththa Song Lyrics in Tamil


பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

BGM

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

பெண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…
இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

பெண் : ஒரு பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டுறியா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

BGM

பெண் : வைர மாலை போல உன்ன கழுத்தில் மாட்டனும்…
வளையல் போல அழகு கையில் எடுத்து பூட்டனும்…
பொடவை இழுத்து புடிச்சு இடுப்பில் சுத்தணும்…
புள்ளைய போல பத்து மாசம் மடியில் தாங்கனும்…

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…

BGM

பெண் : பாட்டெடுத்து பக்கம் வந்தா பவள கொடி…
அட வளைச்சு புட்டா அர்ஜூனன மல்லிக செடி…

பெண் : என்னத்தை சொல்லுவேன் என் கதைய…
எம் மனம் வேவுற சங்கதிய…
அந்தியில் சந்திரன் சுட்டுச்சு…
ஆறுதல் சொல்லி நீ தொட்டனைச்சு…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

BGM

ஆண் : ஒனக்கும் எனக்கும் சரி படாம ஒதுங்கி நின்னேனே…
எதுக்கு இந்த லவ்வும் கிவ்வும் எடுத்து சொன்னானே…

ஆண் : நெருங்கி நெருங்கி உணர்ச்சி நரம்ப எழுப்பிவிட்டாயே…
நினைக்க நினைக்க மனசு முழுக்க இனிக்கும் மிட்டாயே…

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…

BGM

ஆண் : ராத்திரியில் சந்திரனும் கொதிக்கிறதா…
ரவிக்கை எல்லாம் ஈரத்திலே மிதக்கிறதே…

ஆண் : கொல்லுது கொல்லுது உன் நினைப்பு…
கொஞ்சிட சொல்லுது உன் வனப்பு…
வந்திடு வந்திடு செங்கனியே…
வாட்டத்த போக்குறேன் பைங்கிளியே…

ஆண் : ஓய் ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

பெண் : புரியாம ஒதுங்கி நின்னு படுத்துறியே பாடு…
இருவருக்கும் பொருத்தமுன்னு எழுதி வச்சான் ஏடு…

ஆண் : பசும் பால் முக்கனியா…
புது தேன் சக்கரையா…

பெண் : இளமான் நிக்குதையா…
இத பார் வக்கனையா…

ஆண் : நான் பூவும் வச்சு பொட்டும் வச்சு…
தாலிய கட்டட்டுமா…

பெண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
உனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…

ஆண் : ஊரறிய பேரெடுத்த வீரமுத்து பொண்ணு…
எனக்காக சமஞ்சதிந்த வாழ இளம் கண்ணு…


Notes : Oorariya Pereduththa Song Lyrics in Tamil. This Song from Saadhu (1994). Song Lyrics penned by Vaali. ஊரறிய பேரெடுத்த பாடல் வரிகள்.