நேற்று வரை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசித் ஸ்ரீராம்ஜி.வி. பிரகாஷ் குமார்சைரன்

Netru Varai Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

ஆண் : அனலாகவே வேகும் பனிபோல மோதும்…
மழை கால மேகம் கண்டேன்…
கரை சேர வேண்டும் கடல் என்று தேயும்…
உனை தேடி கண்டு கொண்டேன்…

ஆண் : பேசும் போதிலே கேளா ஒலி…
பார்வை ஆகுமே தீபாவளி…
உன்னை போல யாருமில்லை என் இறைவி…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : மௌனம் என்னும் உன் மொழியில்…
மழலையாய் ஆகி பேசுகிறாய்…
ஒலிகளினால் நம் உலகில்…
கவிதை சாயம் பூசுகிறாய்…

ஆண் : கனவா நனவா தெரியா நிலையே…
பகலாய் இரவாய் பழகும் கலையே…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…

BGM

ஆண் : என்னது காற்றில் நீ கரைந்தாய்…
என்னது வானம் நீ அளந்தாய்…
என்னது வாசல் நீ திறந்தாய்…
எனது ஓசை நீ உணர்ந்தாய்…

ஆண் : ஒரு நாள் நிழலாய்…
தரையில் இருந்தாய்…
பிறகு என் மனதில்
நிலவாய் நிறைந்தாய்…

ஆண் : நேற்று வரை நேற்று வரை…
தனித்திருந்தேன் யாரும் இல்லை…
இன்று முதல் தொடங்கியதே…
உலகின் முதல் காதல் கதை…


Notes : Netru Varai Song Lyrics in Tamil. This Song from Siren (2024). Song Lyrics penned by Thamarai. நேற்று வரை பாடல் வரிகள்.