பிரிவொன்றை சந்தித்தேன் 

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன்எஸ். ஏ. ராஜ்குமார்பிரியாத வரம் வேண்டும்

Pirivondrai Santhithen Song Lyrics in Tamil


BGM

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை…
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை…

ஆண் : ஓடோடி வாராயோ…
அன்பே அன்பே அன்பே அன்பே…
அன்பே அன்பே அன்பே அன்பே…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…

BGM

ஆண் : ஒரு வரி நீ ஒரு வரி நான்…
திருக்குறளாய் உன்னை சொன்னேன்…
தனி தனியே பிரித்து வைத்தால்…
பொருள் தருமோ கவிதை இங்கே…

ஆண் : உன் கைகள் என்றே நான்…
துடைக்கின்ற கை குட்டை…
நீ தொட்ட அடையாளம்…
அழிக்காது என் சட்டை…

ஆண் : என்னை நானே தேடி போனேன்…
பிரிவில் நானே நீயாய் ஆனேன்…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…

BGM

ஆண் : கீழ் இமை நான் மேல் இமை நீ…
பிரிந்ததில்லை கண்ணே கண்ணே…
மேல் இமை நீ பிரிந்ததனால்…
புரிந்து கொண்டேன் காதல் என்றே…

ஆண் : நாம் பிறந்த நாளில்தான்…
நம்மை நான் உணர்ந்தேனே…
நாம் பிறந்த நாளில்தான்…
நம் காதல் திறந்தேனே…

ஆண் : உள்ளம் எங்கும் நீயே நீயே…
உயிரின் தாகம் காதல்தானே…

ஆண் : பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று…
நுரை ஈரல் தீண்டாமல் திரும்புது காற்று…
நீ என்ற தூரம் வரை நீளாதோ எந்தன் குடை…
நான் என்ற நேரம் வரை தூராதோ உந்தன் மழை…

ஆண் : ஓடோடி வாராயோ…
அன்பே அன்பே அன்பே அன்பே…
அன்பே அன்பே அன்பே அன்பே…

BGM


Notes : Pirivondrai Santhithen Song Lyrics in Tamil. This Song from Piriyadha Varam Vendum (2001). Song Lyrics penned by Arivumathi. பிரிவொன்றை சந்தித்தேன்  பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top